காலம் பூராய் தாதியாய்
சமையல்காரியாய்
கட்டில் பிணமாய்
அடுக்களைக்கும்
படுக்கையறைக்கும்
மரதநோட்டம் ஓடியப் பிள்ளைப்பெற்ற தாய்மெசின்
சேடம் இழுக்கும் போது கூட
வெளியில் போகும் அப்பாவைக் கூப்பிடுகிறது
'தொப்பியப்பா
வெளியில் குளிர்"
குளிரோடி நான் உறைந்து போகிறேன்.
No comments:
Post a Comment