அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை16/06/2024 - 22/06/ 2025 தமிழ் 16 முரசு 10 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
எனது அம்மாவுக்கும், அம்மாக்களுக்கும்
.
தாராளம் எனும் வார்த்தை, எங்கிருந்து தருவிக்கப்பட்டது? விளக்கங்கள் ஏதேனும் உள்ளதா? இல்லையேல் இது இருக்கட்டும் ! "தாராளம்" அம்மாவின் மனது கொடுக்கும், அன்புக்கு உரிமைப்பட்ட வார்த்தை !! ---------------------------------------------------------------- எதிர்பார்ப்புகளை எடுத்தெறிந்துவிட்டு, உருவாக்கியதை உச்சம் கொண்டுபோகவே, போராடி வாழ்ந்து முடிக்கிற ஒரு பிறவி, அம்மாவன்றி வேறு எவர் பூமியில்? ---------------------------------------------------------------------------- தயங்காமல் தருகிறாள், கேட்டதை எப்படியேனும், அப்படி வாழ முனைவது, நூறு சதவீதம் முழுமைபெறாது, காரணம் தாய் வளர்ப்பு அல்ல படைப்பு !! --------------------------------------------------------------------- சாலையோரம் கூவி பண்டங்கள் விற்கும், நடைபாதை தேய்த்த ஜீவன்களுக்கு, வெட்கம் கூச்சங்கள் இருப்பதில்லை, கூப்பாடு போட்டு கதறி விற்பதில், அவர்தம் மன ஓட்டங்களெல்லாம், பிள்ளைகளின் பசிபோக்கும் முனைப்பிலேயே, "அவர்கள் அம்மாக்கள்" ----------------------------------------------------------------------------- பெருமையென்று உனக்கு, எதையும் தந்துவிடவில்லை, எத்தனை செய்தாலும், நீ சுமந்த சுமப்புக்கு, பெருங்கடனாளிதான் பிள்ளை அம்மா !! -------------------------------------------------------------------- சூழ்ச்சிகளால் வீழ்த்தப்படுகிற மனது, சூட்ச்சுமம் கற்றுணர நாட்படுகிறது, மொத்தமாய் ஏமாறாதிருக்க, அங்கே பழியுணர்ச்சி வருவதேயில்லை, தாய் நேசம் பெற்றவருக்கு !! ---------------------------------------------------------------------- அமைதிகாக்கவேண்டியஇடங்களில் ஆத்திரப்பட்டு, அடுத்தகட்டம்போய் முட்டியுடைந்து, மூலையில் முடங்கி அம்மா என்று அழுவதே, இங்கு அநேக மூர்க்கர்களின் வாடிக்கை !! ---------------------------------------------------------------------------- பொதிகளை சுமக்கும் கழுதை, ஓய்வினில் தளர்த்திக்கொள்லாது இறுக்கங்களை, இது நிஜமா என நிரூபிக்கமுடியாது எனினும், வாழ்வதை பார்த்திருக்கிறேன் உன்னிடம் அம்மா !! -------------------------------------------------------------------------------------- வெட்டிப்போட்டாலும், ரெட்டையாய் துடிக்கிற, மண்புழு தாயும் நானும், கிட்டத்தட்ட ரெட்டையாக்கப்பட்ட, ஒற்றை உயிர்தான் எங்களுக்கும் !! ------------------------------------------------------------------- முடிவு வந்துவிட்டதென்று, முயற்சிகளை கைவிடாதே, அது முரியுங்கால், தொடர எவரேனும் வருவர், தொப்புள்கொடிபோல ! நியாயமான செயல் எதுவும், தாய்க்கு தொடர்புடையதே !! --------------------------------------------------------- எதிர்பார்ப்புகள் ஏலனப்படும் மனிதரிடை, கேள்விக்குறியாகும் கடவுளிடை, எப்போதும் பூர்த்தியாகும் அன்னையிடை !! ------------------------------------------------------------------------- எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிஜம், பிள்ளைகளுக்கும் அன்னைகளுக்குமான உறவு, எங்கிருந்தாலும் அதன் ஓட்டம் தங்குதடையின்றி, இயங்கியபடியேதான் இருந்துகொண்டிருக்கும், ஒருவர்மீதான பற்றுதலை ஒருவரால் மேம்படுத்தி !!
No comments:
Post a Comment