Tuesday, 06 March 2012

உயர்வான மேட்டுப் பகுதிகளுக்கு பொத மக்கள் இடம் பெயர பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அவரசகால உதவிகளை அவர்களுக்கு செய்துவருவதாக உள்ளூர் ஊடக மொன்று தெரிவித்தது.
அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் நீண்ட நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
கிவின்ஸ்லாண்ட் மற்றும் விக்டோரியா பிராந்தியங்களின் பகுதிகளில் முற்றாக சேதமடைந்துள்ளன.
ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறமையாலேயே வாக்கா வாக்கா நகர வாசிகளை நேற்று செவ்வாய்க்கிழமை உடனடியாக உயர்வான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை நீர்மட்டத்தின் அளவை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக வழங்குமாறு இராணுவ வட்டாரங்களுக்கு பிரதமர் யூலியா கிலாட் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸார் ஒவ்வொருவரின் வீடு வீடாகச் சென்று மக்களை நகரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுதி வருகின்றனர்.
No comments:
Post a Comment