எப்போதும் அமைதியான எனது விழிகள்
உன்னைக் கண்டதும் பரபரப்பதை கண்டு
உன்மேல் எனது பிரியத்தை புரிந்து கொண்டாள் அம்மா........
யாருக்காகவும் காத்திராத என் கால்கள்
உன்னைக் காணவே கால்கடுக்க காத்திருப்பதை கண்டு
உன்மேல் நான் கொண்ட நேசத்தை தெரிந்து கொண்டார் அப்பா....
ஏக்கம் கொண்ட மனதின் துயரையும்
எல்லோரும் தெரிந்து கொண்டனர்
ReplyDeleteஉன் மீதான எனது காதலை
உன்னைத்தவிர................
கனதியற்ற வரிகளில் துயரம் தெரிகிறது. நல்ல கவிதை
ரமேஸ்