மேலும் சில பக்கங்கள்

திருமுறை முற்றோதல் (63வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி) 04.09.2011 ஞாயிற்றுக்கிழமை

.
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 04.09.2011 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையில் இருபதாம் பதிகத்திற்கு (திருகோளிலி பதிகம்) திரு மா அருச்சுனமணி அவர்களால் விளக்கம் கூறப்பட்டு பின்னர் ஏழாம் திருமுறையில் பதினைந்தாம் பதிகம் (திருநாட்டியத்தான்குடி) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை
(
Cnr Burlington Rd
&
Rochester St
), Homebush

நேரம்: 04.09.2011 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை

பதிக விளக்கம் - ஏழாம் திருமுறை

இருபதாம் பதிகம் - திருகோளிலி

(திரு மா அருச்சுனமணி அவர்கள்)

காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல்;;

மேலதிக விபரங்களுக்கு:

திரு க சபாநாதன் Tel: 96427767

திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406

திரு மா அருச்சுனமணி Tel: 87460635

No comments:

Post a Comment