தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 19/01/2026 - 25/01/ 2026 தமிழ் 16 முரசு 39 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
தைத்திருநாள் தமிழர் திருநாள் கொண்டாட்டம்!
மெல்பனில் 1992 ஆம் ஆண்டில் ஒத்த கருத்துடைய பலர் இணைந்து தொடங்கப்பட்ட விக்டோரியா தமிழ் கலாச்சார கழகம் வெள்ளிவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடிய பெருமையுடையது. திரு. விக்கிரமசிங்கம், திரு. சச்சிதானந்தன், திரு. சுந்தர், திரு. நவநீதராஜா போன்றோருடன் நானும் இணைந்து தொடங்கப்பட்ட இக்கழகம் பொங்கல்விழாவினை கொண்டாடி வருகிறது.
இவர்கள் மகாத்மாக்கள் வாழ்வியல் சித்திரங்கள் - கணபதி சர்வானந்தா
இவர்கள் மகாத்மாக்கள்
இறையினைக் காண இயம்புவோம் மந்திரம் !
செந்தமிழ் (கவிதை) நடை – அன்று தொட்டு இன்றுவரை! இயற்றியவர் பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்
சென்றபல நூற்றாண்டாய் மரபுக் கவிதை
செந்தமிழுக் கணிசேர்த்த
திறத்தை ஆய்ந்தும்
வென்றேபுதுக்; கவிதையெனப் புதுமைப்
சொட்ட
விதைப்பவரின்; படைப்புகளை மெல்ல
முகர்ந்தும்
நன்றெனவே மலரவரும் நாளைய சந்ததி;
நமக்குத்தர விருப்பவற்றைக்
கனவாய்ப் பார்த்தும்
இன்றெனக்குப் பட்டதினைக் கவியிற் தருவேன்;
என்கருத்திற் பிழையுண்டேல்; பொறுப்பீர் தானே!
கவிதைகளின் பரிணாமக் கதைதனைக் கவியிலே
கச்சிதமாய்ச் சுருக்கியென்றன்
கருத்தைத் தருவேன்
புவியிலன்று பூத்திட்ட கவிவகை என்னே!
புதுமையெனப் பொலிகின்ற
புதுக்கவி என்னே!
தவிப்புடனே சொல்கின்றேன் நாளைவருஞ்
சந்ததி
தமிழைத்தான் நலிவடையச் செய்யுமோ அன்றித்
துவிமொழியாய் ஆங்கிலமும் தமிழும் கலந்த
தூனமிகு மொழிக்கவிதை படைக்குமோ அறியேன்!
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 11…..சங்கர சுப்பிரமணியன்.
சந்துக்களில் இருப்பதைக் காணமுடிந்தது. பீஜிங்கில் இப்படி ஒரு இடமா என்று நம்பவே முடியாமல் இருந்தது. பழமையைப் பாதுகாக்கத்தான் இந்த ஏற்பாடு. அதுமட்டுமல்ல ஹுட்டாங் சுற்றுலா பட்டியலில் சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளதும் அவற்றைப் பாதுகாக்க ஒரு காரணம். சீனா முழுக்க இதுபோன்ற ஹுட்டாங்கை சில இடங்களில் பாதுகாத்து வைத்துள்ளனர்.
பெயரை மாற்றி அழைப்பதால் வரும் மன உளைச்சல்! - சங்கர சுப்பிரமணியன்.
பெங்களூரு நண்பர்கள் வட்டம் பெங்களூரிலுள்ள மத்திய அரசு நிறுவனத்தில் சில நண்பர்கள் இணைந்து நடத்தும் ஒரு அமைப்பு. அதில் நண்பர்கள் வைத்திருக்கும் வைப்புத்தொகை மூலம் அவசர தேவைக்கு நண்பர்களுக்குள் பணத்தை கடனாக கொடுத்து உதவுவார்கள். அந்த அமைப்பில் ஒவ்வொருமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு உணவகத்தில் நண்பர்கள் கூடி மதிய உணவு உண்பதுடன் அமைப்பு சம்பந்தமான கணக்கு வழக்குகளைப் பார்ப்பது வழக்கம்.
அன்பே வா - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
இந்திய சினிமாவில் புகழ் பெற்று விளங்கிய நிறுவனம் ஏவி எம் புரொடக்ஷன்ஸ் . இதன் அதிபர் ஏவி மெய்யப்ப செட்டியார் தனது கடின உழைப்பாலும், திட்டமிடலாலும் இந்த நிறுவனத்தை உன்னத நிலைக்கு உருவாக்கி இருந்தார். இவர் தயாரித்த படங்கள் தென் இந்தியாவில் மட்டுமன்றி வட இந்தியாவிலும் , குறிப்பாக ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
தயாரிப்பாளர்கள் தவம் இருக்க எம் ஜி ஆர் சில தயாரிப்பாளர்களின் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்ற அஜெண்டாவை உருவாக்கி வைத்திருந்தார்.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
31 - 01 - 2026 Sat: தமிழ் இசை விழா - மாலை 5.30 மணி - தமிழ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும் நடைபெறும். இடம்: சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்
07 - 02 - 2026 Sat: சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது. இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200
நேரம்: மாலை 6 மணி
20 - 02 - 2026 Fri: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் திருவிழா ஆரம்பம்
21 - 02 - 2026 Sat: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கொடியேற்றம்
28 - 02 - 2026 Sat: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் சப்பரத் திருவிழா
01 - 03 - 2026 Sun: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா
02 - 03 - 2026 Mon: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் மாசி மக தீர்த்தத் திருவிழா
07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா
at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200
இலங்கைச் செய்திகள்
தித்வா புயலால் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச்சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன
கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினருக்கு எதிராக 3 குற்றப்பத்திரிகை தாக்கல்!
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று ஜனாதிபதி வழிபாடு
வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை - யாழில் ஜனாதிபதி
காணிகளை விட்டு வெளியேறுமாறு 62 காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்! ; அறிவித்தல்களும் ஒட்டப்பட்டன! ; களத்தில் இறங்கிய ரவிகரன்
தித்வா புயலால் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச்சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன
Published By: Vishnu
17 Jan, 2026 | 04:02 AM
(எம்.மனோசித்ரா)
தித்வா புயலுடன் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள், இலங்கையின் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச் சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மலைநாட்டின் இயற்கைக்காடுகளில் 34 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக சுற்றாடற்துறை அமைச்சர் தம்மிக படபெந்தி குறிப்பிட்டுள்ளார்.
தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, தனது அறிக்கையை புதனன்று தன்னிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உலகச் செய்திகள்
போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் - ஈரான் அரசுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு
ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்
கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்
இராணுவ சட்டம் அமுல்படுத்திய விவகாரம் : தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறை
போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் - ஈரான் அரசுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
14 Jan, 2026 | 02:48 PM
ஈரான் போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அதற்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (13) சிபிஎஸ் செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்தபோதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசின் கொடூரமான ஒடுக்குமுறையில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்து வருவதை இதன்போது சுட்டிக்காட்டிய ட்ரம்ப், ஈரான் நாட்டின் சர்வாதிகாரத்தை வன்மையாக கண்டித்திருந்தார்.
“போராட்டக்காரர்கள் தூக்கிலிடப்பட்டால், அதற்குப் பிறகு நடக்கப்போகும் சில விடயங்களை நிச்சயமாக நீங்கள் பார்ப்பீர்கள்” என்றும் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழ் இசை விழா - சனிக்கிழமை 31/01/2026 - மாலை 5.30 மணி
நடைபெறும் இடம் – சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்
நேரம்: மாலை 5:30 மணிக்கு
1 தமிழ் இசை விழாவில் சிறப்பு உரைகள்2 தமிழ் இசை விழாவில் மாணவர்கள் பங்கேற்பு
3 தமிழ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் தமிழியல் சுவடுகளும் நூற்றாண்டு தின நிகழ்வும்” 07/02/2026
ஒருங்கிணைப்பு: பேராசிரியர் அ.சண்முகதாஸ்
நாள்: சனிக்கிழமை 07-02-2026
நேரம்:
இந்திய நேரம் - மாலை 6.30
இலங்கை நேரம் - மாலை 6.30
கனடா நேரம் - காலை 8.00
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:00
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
சிறப்புப் பேச்சாளர்கள்:
பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்
இ.இராஜேஸ்கண்ணன்
சு.குணேஸ்வரன்
எம்.எம்.ஜெயசீலன்
சி.ரமேஷ்
மேலதிக விபரங்களுக்கு: அகில் - 001416-822-6316
சம்ஹிதா 07/02/2025
சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது
இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200நேரம்: மாலை 6 மணி
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
" தைபிறந்தால் வழிபிறக்கும் " என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாகும். அதனால் தை எப்போதுவரும் , நல்ல வழி எப்ப டிப் பிறக்கும் என்னும் எதிர்பார்ப்பும் இருந்து கொண்டே இருக்கும்.
"தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து விளக்கேத்தி வச்சு ( வைத்து ) தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் "
என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங் கலை , உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல் லவா ? இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோ ரினதும் பேராவலும் ஆகும்.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் "
" உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு "
"சேற்றில் கால் வைக்காவிட்டால்
சோற்றில் கைவைக்க முடியாது "
இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள். பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது ! புதுப்பானை வாங்குவது ! சர்க்கரையும் , தேனும், நெய்யும் , பருப்பும் , பாலும் தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும் , கரும்பும் சேர்ந்து விடும்! இவையெல்லாம் அனுபவித்து ஆனந்தம் அடைவதற்கு வருவதுதான் தைப் பொங்கலாகும்.
தைமலர்ந்து வருக வருகவே
இயற்றியவர்
பல்மருத்துவக் கலாநிதி ‘சிவஞானச்சுடர்’ பாரதி இளமுருகனார்
(வாழ்நாட் சாதனையாளர்)
முந்துதமிழ் முச்சங்கம் எல்லாம்
கண்டு
முதுசொம்பல
கொண்டதமிழ் எல்லாம் பெருமை!
சந்ததிக்குத் தமிழைநாம் தருதல் விடுத்துத்
தமிழின்புகழ்
பேசுவதில் அர்த்தம் உண்டோ?
எந்தநாட்டில் வாழ்ந்தாலும் மானம்
இருந்தால்
“என்னசொன்னாய்? தமிழன்நான்” என்று பொங்கி
வந்திடுமெம் சந்ததிக்கு ;தமிழ்கொடுப் போரை
வாழவைக்கத்
தைமலர்ந்து வருக வருகவே!
பொங்கல்தனை இனிமைபொங்கப் “பொங்கலோ பொங்கல்
பொலிந்திடுக” என்றேபுத் தரிசி கொண்டு
பொங்கியதைப் புடவிவாழப் பொற்கதிர்
வழங்கும்
பொற்புமிகு பரிதிக்குப் படையல் செய்து
பொங்கpநிற்கும் இந்நாளில் தமிழ ரெல்லாம்
புகலரிய ஒற்றுமையை மனதிற் பொங்கிப்
பொங்குமின்பத் ‘தமிழனென்ற
தனித்து வத்தைப்’
போற்றிடவே தைமலர்ந்து வருக வருகவே!


.jpeg)





.png)

.png)
.jpg)

.png)


-page-001.jpg)




