உ
சிவமயம்
மும்மைமா மலப்பற்றின்
தளைய கற்றி
மூவுயிரும் ஈடேறத் தோன்றாத் துணையாய்
இம்மையிலும்
தொடர்ந்துவரும் எழுமையி லுமடியர்
எடுத்திடுமெப் பிறப்பினிலும் அருள்பா லித்தே
செம்மைவாழ்
வளித்தெமக்குப் பதஞ்சே விக்கும்
சிவனவனின்; தேவதூதனாய்ப் புட்ட
பதியில்
தம்மையுமிப்
புவியிலுள்ளோர் தரிசித்தே உய்யத்
தவப்பேற்றால் உதித்தவரே சத்யசாய் பாபா!
பத்தர்கள் நினைவுகூர்ந்து
விழா வெடுத்துப்
பாபாவின் நூற்றாண்டு பிறந்த நாளை
எத்திக்குங்
கொண்டாடி மகிழும் வேளை
இறைதூதன் எமக்கருளிப் போந்த நல்ல
தித்திக்கும்
அருளுரையைச் சிந்தைக் கெடுத்துச்
சீராக அறுகுணசீ ரமைப்பைச் செய்து
அத்தனருள் கூர்ந்தெம்மை
வழிந டத்தி
அருள்வரென நம்பியவர் அடிகள் தொழுவாம் !


.jpeg)





.jpeg)
.jpeg)

.png)
.png)





