எப்படி மறப்பேன் - கவிதை - அ வேளாங்கண்ணி

 .

எப்படி மறப்பேன்.. எதற்கு மறப்பேன்

மூச்சு இருக்கும் வரைக்கும் உன்னை நினைப்பேன்
சுலபமாகச் சொல்லிவிட்டாய் மறந்து விடு என்று...
ஒரு நாளில் உருவானதல்ல
உன் மீதான என் காதல்
இது பல தலைமுறைகள் முன்பே
துளிர் விட்டிருக்க வேண்டும்..
காத்திருந்து காத்திருந்து காலம் கூடி
உன்னை நான் கண்டு
காதல் மிகக் கொண்டு
மகிழ்ச்சியாய் களித்திருக்கும் வேளையிலே
இப்படி ஒரு விஷ அம்பு கொண்டு தாக்குகிறாய்...
முடியாது என்று தெரிந்திருந்தால்
பார்க்காமலே இருந்திருக்கலாம்..
கை கோர்க்காமலே இருந்திருக்கலாம்..
என்னை மறக்கச் சொல்வதை விட‌
ஒரு ஆறு அடிக்குள் தள்ளிவிட்டுப் போ..
உன்னை மறக்கும் நாள்... நானில்லை
உன்னை மறக்க நான்.. பிறக்கவில்லை...

நன்றி https://eluthu.com/kavithai/296757.html

No comments: