அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
அம்பலம் - கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை
.
‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.
நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.
நான் காயப்பட்டேன்.
நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.
ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.
அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.
திரைகள் விலகின.
எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.
முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.
காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.
உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.
அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.
அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 70 ஒரு குழந்தை எனக்கு வழங்கிய விருது ! தலைமுறைகள் தாண்டியும் வளரும் உறவு !! முருகபூபதி
எனது சிறிய வயதில் நான் நேசம் பாராட்டிய குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாகி, மணம் முடித்து பிள்ளைகள் பெற்று, அந்தப் பிள்ளைகளுக்கும் மணமாகி குழந்தைகள் பெற்றபின்னர் , மூன்றாவது தலைமுறையை நான் சந்திக்க நேர்ந்தாலும், தொடக்கத்தில் நான் நேசம் பாராட்டிய அந்தக் குழந்தைகள், என்னதான் வயதால் முதிர்ச்சியடைந்திருந்தாலும், எனது பார்வையில் இன்னமும் குழந்தைகள்தான்.
எனக்கு 1954 ஆம் ஆண்டு நீர்கொழும்பில், விஜயதசமியன்று
ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்து வைத்த ஆசிரிய பெருந்தகைகளில் ஒருவரான ( மற்றவர் அமரர்
பண்டிதர் க. மயில்வாகனன் ) திருமதி மரியம்மா திருச்செல்வம் அவர்களுக்கு மூன்று பெண்பிள்ளைகள்.
எமது நீர்கொழும்பு விவேகானந்தா
வித்தியாலயம் ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) 1954 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்டபோது, என்னோடு சேர்த்து 32 குழந்தைகளுக்கு ஏடு துவக்கினார்கள்.
அந்தப்பாடசாலையின் முதலாவது
மாணவனாக
( சேர்விலக்கம் -01 ) நான் இணைத்துக்கொள்ளப்பட்டேன்.
திருமதி திருச்செல்வம்
அவர்கள் எமக்கு ஆசிரியையாக மாத்திரம் அறிமுகமாகவில்லை. எமக்கு அவர் மற்றும் ஒரு தாயார். அவரது கணவரை நாம் “ பப்பா “ என அழைப்போம். அதற்குக் காரணம் : அவர்களின் மூன்று
குழந்தைகளுமான செல்வராணி, செல்வமணி, செல்வ நளினி ஆகியோரும் தமது தந்தையாரை “ பப்பா“ எனத்தான்
அழைப்பார்கள்.
அவர் இலங்கை விமானப்படையில்
உயர் அதிகாரியாக பணியாற்றியவர். 1960
களில் அவர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றபோது,
இரண்டாவது குழந்தை செல்வமணிக்கு மூன்றுவயதுதான்
இருக்கும்.
பப்பா லண்டன் போனார் என்பதை, யன்னலுக்குப் போனார் என்றுதான் மழலைக்குரலில் சொல்லி எம்மை சிரிப்பில் ஆழ்த்துவார்.
இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு. தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவசர வேண்டுகோள்.
மறுபிறவி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்
புகழ் பெற்ற மனோதத்துவ மருத்துவராகவும்,
பகுத்தறிவுவாதியாகவும் திகழ்ந்தவர் ஆப்ரஹாம் கோவூர். இந்தியாவின் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் , இலங்கைக்கு குடிபுகுந்து , கொழும்பு பாமன்கடை பகுதியில் வாழ்ந்து வந்தார். மனோரீதியில் பாதிக்கப்பட்ட பலர் இவரிடம் சிகிச்சைக்கு வந்து நலம் பெற்றுள்ளனர். இவ்வாறான தனது அனுபவங்களை அவர் இலங்கையில் , தமிழில் இரண்டு நூல்களாக தொகுத்து வெளியிட்டிருந்தார். அவை நல்ல வரவேற்பையும் பெற்றன.
சேதுமாதவன். வித்தியாசமான கதைகளை படமாக்குவதில் ஆர்வம் உள்ள இவர் கோவூரின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு , அவர் சிகிச்சை அளித்த சம்பவத்தை மலையாளத்தில் புனர் ஜென்மம் என்ற பெயரில் படமாக்கினார். பிரேம் நசீர், ஜெயபாரதி நடித்த இந்தப் படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி கண்ணை உறுத்தவே இயக்குனர் டி ஆர் ராமண்ணா இந்தப் படத்தை மறுபிறவி என்ற பெயரில் தமிழில் இயக்கினார்.
இலங்கைச் செய்திகள்
விஜயகலா மகேஸ்வரன் படுகாயம்; சிலாபம் ஆஸ்பத்திரியில் அனுமதி
உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி
ஜப்பான் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் 02 மணிநேரத்தில் மீண்டும் தரையிறக்கம்
மனிதாபிமான பணியில் ஈடுபடுவதற்கான முக்கியத்துவத்தையும் திருப்தியையும் ஹஜ் பிரதிபலிக்கிறது
கட்டுநாயக்கவில் கால்பதிக்கும் சீன விமானம்
விஜயகலா மகேஸ்வரன் படுகாயம்; சிலாபம் ஆஸ்பத்திரியில் அனுமதி
உலகச் செய்திகள்
ரஷ்ய இராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள்
உக்ரைனிய உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
விண்வெளிச் சுற்றுலா ஆரம்பம்
இந்திய விமானப் படைக்கு என்ஜின் தயாரிக்க ஒப்பந்தம்
ரஷ்ய இராணுவத்திடம் ஆயுதங்களை கையளிக்கிறது வாக்னர் கூலிப்படை
ரஷ்ய இராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள்
ஸ்ரீ மஹா சுதர்சன யாகம் ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2023
இறைவன் சுதர்சன மூர்த்தி தனது குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றவர். எனவே ஸ்ரீ சுதர்சன ஹோமம் செய்வதன் மூலம் அறியப்படாத உடல்நலக் கஷ்டங்கள், தீய கண் பார்வைகள், எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஜூலை 2, 2023 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ சுதர்ஷன மகா யாகம் நடைபெறும் - காலை 8 மணிக்கு விஸ்வக்சேன பூஜை, புண்யவாச்சனன், கலச பிரதிஷ்டையுடன் பூஜை விதானம் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஸ்ரீ சுதர்சன மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, ஸ்ரீ சுதர்சன மூர்த்தி மற்றும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்… . ஷோடஷோபசார தீபாராதனையைத் தொடர்ந்து ஸ்ரீ சுதர்சன உற்சமூர்த்தி கோயில் வளாகத்தைச் சுற்றி ஊர்வலம் நடந்தது. சடங்கு நன்கொடைகள்: ஹோமம் - $101 அபிஷேகம் - $101 அர்ச்சனா - $20 ஸ்ரீ சுதர்சனர் மற்றும் ஸ்ரீ நரசிம்மருக்கு மாலை - தலா $95.
ஆடிப்பூரம் தேர்த் திருவிழா 22/07/2023
12/07/2023
புதன்கிழமை |
ஆடிப்பூரம் ஆரம்பம் நாள்-1 |
மாலை 05.30 மணி விநாயகர் பூஜை இரவு 07.30 வசந்த மண்டப பூஜை இரவு 08.00 மணி விநாயகர் ஊர்வலம் |
13/07/2023 வியாழன் |
ஆடிப்பூரம் அலங்கார உற்சவம் |
மாலை 05.30 மணிக்கு துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேகம் இரவு 07.30 வசந்த மண்டப பூஜை இரவு 08.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஊர்வலம் |
14/07/2023 வெள்ளிக்கிழமை |
உற்சவம் |
மாலை 05.30 மணிக்கு துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேகம். இரவு 07.30 வசந்த மண்டப பூஜை இரவு 08.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஊர்வலம் |
15/07/2023 சனிக்கிழமை |
ஆடிப்பூரம் அலங்கார உற்சவம் நாள்-4 |
மாலை 05.30 மணி துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேகம் சனி பிரதோஷம் இரவு 07.30 வசந்த மண்டப பூஜை இரவு 08.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஊர்வலம் |
16/07/2023 ஞாயிறு |
ஆடிப்பூரம் அலங்கார உற்சவம் நாள்-5 |
மாலை 05.30 மணி துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேகம் இரவு 07.30 வசந்த மண்டப பூஜை இரவு 08.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஊர்வலம் |
17/07/2023 திங்கட்கிழமை |
ஆடிப்பூரம் அலங்கார உற்சவம் நாள்-6 |
மாலை 05.30 மணி துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேகம் ஆடி அமாவாசை இரவு 07.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை இரவு 08.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஊர்வலம் |
18/07/2023 செவ்வாய்கிழமை |
ஆடிப்பூரம் அலங்கார உற்சவம் நாள்-7 |
மாலை 05.30 மணிக்கு துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேகம். இரவு 07.30 வசந்த மண்டப பூஜை முதல் ஆடி செவ்வாய் இரவு 08.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஊர்வலம் |
19/07/2023 புதன்கிழமை |
ஆடிப்பூரம் அலங்கார உற்சவம் நாள்-8 |
மாலை 05.30 மணி துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேகம் இரவு 07.30 வசந்த மண்டப பூஜை இரவு 08.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஊர்வலம் |
20/07/2023 வியாழன் |
ஆடிப்பூரம் அலங்கார உற்சவம் நாள்-9 |
மாலை 05.30 மணிக்கு துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேகம் இரவு 07.30 வசந்த மண்டப பூஜை இரவு 08.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஊர்வலம் |
21/07/2023 வெள்ளிக்கிழமை |
ஆடிப்பூரம் அலங்கார உற்சவம் நாள்-10 |
மாலை 05.30 மணிக்கு துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேகம். இரவு 07.30 மணி வசந்த மண்டப பூஜை இரவு 08.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஊர்வலம் |
22/07/2023 சனிக்கிழமை |
தேர்த் திருவிழா |
காலை 09.00 மணி துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேகம் காலை 11.00 மணி தேர் திருவிழா ஆடிப்பூரம் மாலை 6.00 மணிக்கு சிறப்பு பால்குடம் (பால்குடா) அபிஷேகம் மாலை 06.30 மணி துர்க்கை அன்னைக்கு சிறப்பு பூஜை இரவு 7:30 மணிக்கு நவசக்தி அர்ச்சனை |