தமிழ்முரசு Tamil Murasu

அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை16/06/2024 - 22/06/ 2025 தமிழ் 16 முரசு 10 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com

மேலும் சில பக்கங்கள்

▼

வானொலி மாமா நா மகேசன் அவர்களுக்கு தமிழ்முரசுஆஸ்திரேலியாவின் அஞ்சலிப் பூக்கள் - செ .பாஸ்கரன்

 .

மகேசன் மாமாவுடன் 2019ம் ஆண்டு 
“வானொலி மாமா” மகேசன் அவர்கள் எம்மை விட்டு பிரிந்து விட்டார்.
1965 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “சிறுவர் மலர்” நிகழ்ச்சிமூலம் “வானொலி மாமா” ஆகி இறுதிவரை வானொலி மாமா என்றே பயணித்தவர் 22 ஜூன் 2023 ல் எம்மை விட்டு பிரிந்து விடடார்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் முழக்கம், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல்லாண்டு காலம் தமிழ்ச் சமூகத்துக்குச் சேவையாற்றியவர்.
நிகழ்ச்சி தயாரிப்பாளராக, அறிவிப்பாளராக, விமர்சகராக, நேர்முக வர்ணனையாளராக, சமய துறை வல்லுனராக, நாடக நெறியாளராக, இலக்கிய வாதியாக பல் துறையிலும் வானொலியில் பணிபுரிந்தவர்.

புதியவர்களை ஊக்குவிப்பதும் தட்டிக்கொடுப்பதும் இவர் இயல்பாகும். சிரித்தவண்ணம் எல்லோருடனும் அன்பாக பழக்க தெரிந்தவர்.
குழந்தைகளுக்கு தமிழையும் சமயத்தையும் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் நூல்களும், நாடகங்களுமாகப் படைத்தவர். குறிப்பாக ஆத்திசூடி அற நெறிக் கதைகள், அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி, பாலர் நாடகங்கள் பத்து, நாடகக் கவியரங்கு நான்கு, ஒளவை வந்தால் உள்ளிட்ட ஏராளம் சிறுவர் இலக்கியங்கள் படைத்தவர்.
at 7:04 PM No comments:

வடமராட்சி அல்வாயில் முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூல் வெளியீட்டு அரங்கு


அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ள படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான                                 திரு. லெ. முருகபூபதியின்  நுல்களின் வரிசையில் 30 ஆவது வரவாக வெளிவந்துள்ள சினிமா: பார்த்ததும் கேட்டதும் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 02 ஆம் திகதி ( 02-07-2023 ) மாலை 4-00 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி அல்வாய் கலைஅகத்தில் எழுத்தாளர் திரு. கொற்றை                         பி. கிருஷ்ணானந்தன் தலைமையில் நடைபெறும்.

 யாழ். ஜீவநதி வெளியீடாக வந்துள்ள சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூலின் வெளியீட்டுரையை  எழுத்தாளர் திரு. இ.சு. முரளீதரன் நிகழ்த்துவார். இந்நூல்  பற்றிய தமது கருத்துரையை  திரு.  ‘’ அலை  “ யேசுராசா தெரிவிப்பார்.

நூலாசிரியர் திரு. லெ. முருகபூபதி தனது ஏற்புரையுடன் தனது
இலக்கிய அனுபவங்கள் குறித்தும் பேசுவார்.

அல்வாய்  அவை அமைப்பின் 59 ஆவது கூட்டத் தொடராக இந்நிழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன்.

கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.


 

at 7:04 PM No comments:

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 69 பதினைந்து நாட்களில் பல்வேறு சந்திப்புகள் ! சரியான திட்டமிடலின் மூலம் நிகழ்ச்சிகளை சாத்தியமாக்கலாம் ! ! முருகபூபதி

 


கனடாவிலிருந்த இலக்கிய நண்பர்களுடனான சந்திப்புகளை  குறுகிய காலத்திற்குள் நடத்தவேண்டியிருந்தது. ஜூன் மாதம் 15 ஆம் திகதி அதிகாலையே  டொரன்டோவை விட்டு புறப்படவேண்டியிருந்தமையால்,  சந்திப்புகளுக்கான நாளை குறிப்பதில் கவனம் செலுத்தினேன்.

கனடாவுக்கு வந்திறங்கிய மறுநாள்  என்னைப்பார்க்க இலக்கிய ஆர்வலர் மைதிலி தனது கணவர் தயாநிதியுடன் வந்துவிட்டார்.

அவரை அன்றுதான் முதல் முதலில் நேருக்கு நேர் சந்திக்கின்றேன்.  இறுதியாக வெளியான எனது கதைத் தொகுப்பின் கதை நூல் பற்றி ஒரு மெய்நிகர் கலந்துரையாடலில் மைதிலி சிறந்த திறனாய்வைச் செய்திருப்பவர்.

எம்மை கனடாவுக்கு அழைத்த நண்பர் முத்துலிங்கம் ஜூன் 08 ஆம் திகதி, ஷேக்ஸ்பியரின் நாடகத்திற்கு அழைத்துச்செல்லுவதற்கான ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்திருந்தார்.

அந்த ஷேக்ஸ்பியர் நாடக அரங்கம் ஸ்காபரோவிலிருந்து இரண்டு மணி நேரப்பயணத் தூரத்திலிருந்தது.

நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்கச் செல்வதற்காக எனது உடன்பிறவாத தங்கை செல்வநளினி ராஜன் நாள் குறித்திருந்தார்.

நண்பர் பதிவுகள் கிரிதரன் தனது சில நண்பர்களுடன் ஒரு உணவு விடுதியில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அத்துடன் காலம் செல்வம், நாடகக் கலைஞர் ஜயகரன் ஆகியோருடன் இணைந்து தேடகம் சார்பாக தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் சாம்ராஜுக்கும் எனக்குமான சந்திப்பு கூட்டத்தையும் ஒழுங்குசெய்திருந்தார்.

at 8:24 AM No comments:

மணிவாசகப் பெருமானை மனத்தில் இருத்துவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


 

     தேனை நாடி வண்டுகள் ஓடும்.தேனைச் சுவைப்பதில் வண்டுகளுக்கு பேரானந் தம். இந்த வண்டு மற் றைய வண்டுகள் போன்றதன்று.இவ் வண்டு திருவாதவூரில் இருந்து வந்த வண்டு. ஏனைய வண்டுகள் பல


மலர்களையும் நாடிநிற்க - வாதவூர் வண்டு; வேத உபநிடதங்களை நாடி அங்கு திருவாசகம் என்னும் உய ரிய தேனைப் பருகி எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறது.அந்த வண்டு வழங்கிய தேனான திருவாசகம் - தொட்டாலும் இனிக்கும்.கேட்டாலும் இனிக்கும். படித்தாலும் இனிக்கும்.சொல் லச் சொல்ல இனிக்கும் சொற்களால்  ஆனதுதான் அந்த வாசகம் " திருவாசகம் ".   இதனால்த்தான் "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் " என்று பலரும் வியந்து போற்றும் நிலை அமைந்து விட்டது.

   திருவாதவூரில் பிறந்தபடியால் திருவாதவூரர் என்றும் , மணிமணியான வார்த்தை களை வழங்கியதால் மணிவாசகர் என்றும் , அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் சைவத்துக்கும் , தமிழுக்கும் மாணிக்கமாய் அமைந்தமையால் மாணிக்கவாசகர் என் றும் யாவராலும் பெருமதிப்புடன் அழைக்கப்பட்டர்.

  அந்தணகுலத்தில் பிறந்து , பேராளுமை மிக்கவராய் விளங்கினார் மணிவாசகப் பெருமான் என்று அவரைப்பற்றி திருவாதவூரடிகள் புராணம் வாயிலாக அறிகின் றோம். மணிவாசகப் பெருமானின் ஆளுமையினை அவர் வாழ்ந்த பாண்டி நாட்டின் அரசன் - அரிமர்த்தன பாண்டியன் அகத்தில் இருத்தி அவரை தனது அரசாட்சியில் முதலமைச்சர் ஆக்கினான். அத்துடன் அவரின் ஆற்றல்களை மெச்சி " தென்னவன் பிரம்மராயன் " என்னும் பட்டத் தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினான்.மன்னவன் இவ்வாறு பெருமைப்படு த்தினான் என்பதை 

தென்னவன் பிரமராயன் என்றருள் சிறந்த நாமம்

மன்னவர் மதிக்க நல்கி வையகம் உய்வதாக
மின்னவ மணிப்பூணாடை வெண்மதிக்கவிகை தண்டு
மொன்னவர் கவிரி வேழமளித்தனன் பொருநை நாடன்  

. வாதவூராரினை தனது அகத்தில் ஏற்றிய மன்னவன் - மற்ற மன்னவர்களும் மதிக் கும் வண்ணம் அவரு க்கு நன்மதிப்பினைக் கொடுத்தான். நவரெத்தினாலான ஆபர ணங்கள், பட்டுப்பீதாபரங்கள் , சந்திரன் போன்ற வெண் கொற்றக் குடை, முத்திலான சிவிகை, பொன்னாலான காப்பு , சாமரை, யானை என்று அளித்து ஆனந்தம் அடைந் தான். என்று வாதவூரடிகள் புராணம் சுட்டிக் காட்டி நிற்கிறது.

   அதிகாரம் மிக்க பதவி ! அரசனின் அன்பும் ஆதரவுமான நிலை! எதையும் செய்யும் இருப்பிடம் ! இவை எவையையும் வாதவூரர் உள்ளம் பெரிதாக ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை.புகழும் , ஆடம்பர ங்களும் நிலையாய் இருக்க மாட்டா என் னும் நினைப்பால் நிலையாயிருக்கும்  அப்பரம் பொருளையே அவர் நாளும் பொழுது எண்ணியபடி அமைச்சர் என்னும் பெயரில் பாண்டியன் அவையில் இருந்தார் என லாம். " ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும் " எண்ணமே அவருள்ளத்தில் ஆழ மாய் ஆணிவேராய் இருந்தது எனலாம்.

at 8:24 AM No comments:

முன்னுதாரணமான குணாம்சங்களைக் கொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் ஜூன் 25 பாப்பரசர் தினம்

 Tuesday, June 20, 2023 - 11:42am

பரிசுத்த பாப்பரசர் தினம் எதிர்வரும் 25ஆம் திகதி சிறப்பிக்கப்படுகிறது.

திருச்சபையின் தலைவரான தற்போதைய பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மிகவும் எளிமையானவர்.

உலக மக்களை நேசிப்பவர். அனைத்து மதங்களுடனும் ஒப்புரவுடன் பழகுபவர். நாடுகளுக்கு இடையிலான சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் என அவரது சிறப்பை பலவிதமாக குறிப்பிட முடியும்.

திருத்தந்தை பிரான்ஸிசின் இயற்பெயர் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்ட இவர் அமெரிக்க கண்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது பாப்பரசராவார்.

at 8:24 AM No comments:

அரபா நாளின் மகத்துவம்

 Friday, June 23, 2023 - 11:48am

"நிச்சயமாக அல்லாஹ்வுடைய ஏட்டில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை...”

(தௌபா 36) என அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்றான். ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மாதங்களே அவையாகும் என அந்த நான்கு மாதங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இந்நான்கு மாதங்களில் துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் என தொடர்ந்து வரும் மூன்று மாதங்கள் அல்லாஹ்தஆலாவினால் புனிதப்படுத்தப்பட்டுள்ளன. இம்மூன்று மாதங்களிலும் நடுவில் வருகின்ற துல்ஹிஜ்ஜா மாதத்தின் அரபாவுடைய நாளிலேயே அல்குர்ஆன் இறக்கப்படுவது பூரணமாக்கப்பட்டது.

at 8:24 AM No comments:

திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி - 01/07/2023

 


at 8:23 AM No comments:

இலங்கைச் செய்திகள்

 யாழ். புளி வாழைப்பழம் வாரம் ஒருமுறை துபாய்க்கு

வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில்

இரண்டாவது ஓடுதளத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பம்

பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு முதல் ஜப்பானிய மொழி

நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இலங்கை நடவடிக்கை


யாழ். புளி வாழைப்பழம் வாரம் ஒருமுறை துபாய்க்கு

Friday, June 23, 2023 - 6:00am

யாழ். விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர் சம்பாதிப்பு

யாழ் மாவட்டத்தில் பயிரிடப்படும் புளி வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

at 8:23 AM No comments:

உலகச் செய்திகள்

டைட்டானிக் தேடிச் சென்ற டைட்டன் 5 உயிர்களுடன் அமைதியானது

நீர்மூழ்கிக் கப்பல் மாயமான இடத்தில் ‘சத்தம்’ கேட்டது

சீன தலைவர்களை சந்தித்தார் பிளிங்கன்

ஆய்வுகூட இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி

 படகு விபத்தில் சுமார் 300 பாகிஸ்தானியர் மரணம்


டைட்டானிக் தேடிச் சென்ற டைட்டன் 5 உயிர்களுடன் அமைதியானது

Friday, June 23, 2023 - 10:48am
Rizwan Segu Mohideen

நன்றி தினகரன் 
at 8:23 AM No comments:

ஸ்ரீ வெங்கடேஸ்வர பிரதிஷ்டை தினம் @ SVT ஜூலை 1, 2023 சனிக்கிழமை .

 
















 2023 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி சனிக்கிழமையன்று SVT இல் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் பிரதிஷ்டை தினம் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது.   காலை 09.00 மணிக்கு பூஜை விதானம் துவங்கி கலச பூஜை, பஞ்ச சூக்த, மூல மந்திர ஹோமம், ஸ்ரீ வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மஹாலட்சுமி மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு அபிஷேகம், பிற்பகல் 2 மணிக்கு "கல்யாண உற்சவம்" நடக்கிறது



at 8:23 AM No comments:
‹
›
Home
View web version
Powered by Blogger.