.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை16/06/2024 - 22/06/ 2025 தமிழ் 16 முரசு 10 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
அகிலத்தில் அமைதி காப்போம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
சமயத்தின் பெயரால் சண்டை
சாதியின் பெயரால் சண்டை
குமைகின்ற உள்ளங் கொண்டார்
குழப்பமே செய்வார் நாளும்
அமைதியை எண்ணிப் பாரார்
ஆரையும் மனதில் கொள்ளார்
அழித்தலை மட்டும் நாடி
அனைத்தையும் ஆற்ற வந்தார்
வெறி தலை கொண்டதாலே
நெறி தனை மறந்தேவிட்டார்
அறி வெலாம் மங்கிப்போக
அரக்கராய் மாறி விட்டார்
தூய்மையாம் சமயம் தன்னை
தூய்மையாய் பார்க்கா நின்று
பேயென உருவம் கொண்டு
பிணக்காடாய் மாற்று கின்றார்
கடவுளின் பெயரைச் சொல்லி
கருணையை வெட்டி வீழ்த்தி
தெருவெலாம் ரத்தம் ஓட
செய்கிறார் தினமும் எங்கும்
குண்டுகள் வெடிக்கும் வேளை
குரூரமே நிகழும் அங்கே
மண்டைகள் சிதறி மண்மேல்
வாரியே உதிரம் ஓடும்
அஞ்சலிக்குறிப்பு மொழிபெயர்ப்பாளர் தேவாவின் மறைவு ! ஈடு செய்யப்படவேண்டிய இழப்பு ! ! முருகபூபதி
கடந்த நான்காண்டுகாலமாக ( 2019 – 2022 ) தொடர்ந்தும் அஞ்சலிக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். மீண்டும் இந்த ஆண்டு ( 2023 ) முதல் இந்தவேலையை தொடக்கிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார் மொழிபெயர்ப்பாளர் தேவா.
இவரது இயற்பெயர் திருச்செல்வம்
தேவதாஸ்.
சந்திப்பதற்கு நான் பெரிதும் விரும்பியிருந்த ஒருவர்தான் தேவா. இவருடன்
உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல்போய்விட்டதே என்ற சோகம் மனதை வாட்டுகிறது.
இவரது சிறந்த மொழிபெயர்ப்பில் வெளியான இரண்டு நூல்களை
படித்து, எனது வாசிப்பு அனுபவத்தை ஏற்கனவே
எழுதியிருக்கின்றேன்.
முதலாவது உகண்டாவைச் சேர்ந்த சைனா கெய்ரெற்சி எழுதிய
தன்வரலாற்றுச் சித்திரிப்பான குழந்தைப்போராளி என்ற நாவல். மற்றது இலங்கையைச் சேர்ந்த கடற்படைத் தளபதி அஜித்போயாகொட எழுதிய சிறை அனுபவங்களான நீண்ட காத்திருப்பு.
இரண்டு நூல்களுமே போரின் அனுபவங்களை பேசியவை.
தேவா , இவற்றை ஆங்கில மூலத்திலிருந்து அவற்றின் உயிர் சிதையாமல்
தமிழுக்கு வரவாக்கியிருந்தார். இவை தவிர, அம்பரயா,
அனோனிமா, என்பெயர் விக்டோரியா முதலானவற்றையும் தமிழுக்குத் தந்தவர்.
தேவாவின் மொழி ஆளுமை விதந்து
பேசப்படவேண்டியது. பெரும்பாலான மொழிபெயர்ப்பு நூல்கள், படிக்கும்போது அயர்ச்சியை தந்துவிடும். ஆனால், தேவாவின்
மொழிபெயர்ப்புகள் தொடர்ந்தும் வாசிக்கும் ஆர்வத்தை
தூண்டிக்கொண்டிருக்கும்.
அவர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில்
வாழ்ந்திருப்பவர். அதனால் அவருக்கு பிரெஞ், டொச் மொழிகளும் நன்கு தெரிந்திருக்கிறது.
அம்மொழிகளிலிருந்தே நேரடியாக
தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஆற்றலும் பெற்றிருந்ததாக அறிய முடிகிறது.
மன்னார்
விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவா, சுவிட்சர்லாந்திலும்
சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார். மீண்டும் தாயகம் திரும்பிய பின்னரும் இலக்கிய மொழிபெயர்ப்புகளில்
ஈடுபட்டவர். இம்மாதம் 26 ஆம் திகதி தேவாவின் இறுதி நிகழ்வுகள் தலைமன்னாரில் நடந்திருப்பதாக
செய்திகள் தெரிவிக்கின்றன.
தேவா மொழிபெயர்த்த
நூல்களை கருப்பு பிரதிகள், வடலி, பூபாளம் முதலான பதிப்பகங்கள் வெளியிட்டன.
தேவாவின் மொழிபெயர்ப்பில் நான் படித்த குழந்தைப்போராளி நூல்
பற்றிய எனது வாசிப்பு அனுபவ பதிவுக்கு,
“ சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப்
போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம்
!
வழி
தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை ! “ எனத்தலைப்பிட்டிருந்தேன்.
இலங்கை வரலாற்றின் சில பக்கங்களின் சாட்சியாகத் திகழும் கலகக் குரல் மு. நித்தியானந்தன் ! ஏப்ரில் 01 இல் பவளவிழா நாயகன் முருகபூபதி
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு அரங்கில் நான் முதல் முதலில் சந்தித்த மு. நித்தியானந்தனுக்கு அப்போது 25 வயது.
பேராசிரியர் கா. சிவத்தம்பி
தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், இளமைக்கேயுரிய
துடிப்போடு எழுத்தாளர் – சிந்தனையாளர் மு.
தளையசிங்கத்துடன் இலக்கிய ரீதியாக விவாதித்த
நித்தியானந்தனின் கலகக்குரல் இன்னமும் ஓயவில்லை.
இலங்கை மலையக மக்களின் ஆத்மக்குரல் நித்தியானந்தனின்
எழுத்திலும் உரைகளிலும் தொடர்ந்து ஒலித்து வந்திருக்கிறது.
அம்மக்களின் வரலாற்றினைப்பற்றி
மட்டுமல்லாது, முழு இலங்கை வரலாற்றின் சில
பக்கங்களின் சாட்சியாகவும் விளங்கும் நித்தியானந்தனின் தந்தையார் முத்தையாபிள்ளை பதுளையில்
கலைஒளி என்ற இதழையும் நடத்தியிருக்கும் சமூகப்பணியாளர்.
அன்னாரின் ஞாபகார்த்தமாக
பின்னாளில் இலங்கையில் இலக்கியப்போட்டிகளும் நடந்திருக்கின்றன.
நித்தி, பல்கலைக் கழகத்திலிருந்து
வெளியேறியபின்னர் சிறிது காலம் கொழும்பில் தினகரனில் துணை ஆசிரியராக 1970 களில் பணியாற்றினார். அக்காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரில் நடந்த பாரதி
விழாவுக்கும் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் பிரசார கூட்டத்திற்கும் வருகை தந்து உரையாற்றினார்.
பாரதி விழாவில் நித்தியுடன்
வந்து அங்கே உரையாற்றியவர்கள் எழுத்தாளர்கள் நவசோதி, மற்றும் எச். எம். பி. மொகிதீன்.
தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின்
பிரசாரக்கூட்டத்தில் நித்தியுடன் வந்து உரையாற்றியவர்கள் பேராசிரியர் க. கைலாசபதி,
மற்றும் சிங்கள எழுத்தாளர் குணசேனவிதான.
அந்தச் சம்பவங்கள் இன்றும்
நினைவுகளில் பசுமையாக வாழ்கின்றன.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக
வளாகம் தோன்றியதும் அங்கு பொருளியற் துறை விரிவுரையாளராக நித்திய நியமனம் பெற்று பணியாற்றினார்.
அங்கே நடந்த நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிலும் நித்தியின் குரல் ஒலித்தது. அதன்பின்னர்
அவரது வாழ்விலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன.
1983 வெலிக்கடை சிறையில் நடந்த தாக்குதலில் உயிர்தப்பினார். அவ்வாறு தப்பிய
சிலர் பின்னாளில் முதலமைச்சராகவும் அமைச்சராகவும் மாறினர் என்பது
வேறு கதை.
ஆனால், நித்தி இலக்கியவாதி.
தொடர்ந்தும் அவ்வாறே இயங்கினார். தமிழகம்
சென்றதும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் பதிப்பிலும் பங்கேற்றவர்.
இலக்கியத் திறனாய்வாளராக,
விமர்சகராக, பதிப்பாளராக,
தொகுப்பாளராக இயங்கிவந்திருக்கும் நித்தி, கலை, இலக்கிய, கல்வித்துறையில் சமூகத்திற்காக பயன்மிக்க பணிகளை மேற்கொண்ட பல ஆளுமைகள்
குறித்தெல்லாம் தொடர்ந்தும் எழுதியும் பேசியும் வந்திருப்பவர்.
தனது எழுத்துப்பிரதிகளை நூலுருவாக்குவதில் ஆர்வமோ அக்கறையோ இல்லாதிருந்தவர்.
நித்தியானந்தன், இலங்கையிலிருந்த
காலப்பகுதியில் 1983 இற்கு முன்னர் மலையக இலக்கிய முன்னோடிகள் என்.எஸ்.எம். ராமையா ( ஒரு
கூடைக்கொழுந்து) தெளிவத்தை ஜோசப் ( நாமிருக்கும் நாடே) சி.வி. வேலுப்பிள்ளை (
வீடற்றவன்) ஆகியோரின் நூல்களை தனது வைகறை பதிப்பகத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.
சிறந்தஇலக்கியத்திறனாய்வாளரான நித்தியானந்தன், இவ்வாறு பிற
எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதில் காண்பித்த அக்கறை முன்மாதிரியானது.
இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்து சென்றபின்னரும் மற்றவர்களின் படைப்புகள், ஆவணங்களை பதிப்பித்து கொடுப்பதில் அக்கறை காண்பித்தவர்.
அவுஸ்திரேலிய நிகழ்வுகள் 2023
சிட்னி
திகதி |
விபரங்கள் |
22/04/2023 Sat |
அபயகரம் - 31st
anniversary at Reverside Theater, Parramatta |
30/04/2023 Sun |
சிட்னி துர்க்கை அம்மன் கோயில் மண்டபம் |
30/04/2023 Sun |
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி சிட்னி துர்க்கை அம்மன் கோயில் மண்டபம் |
30/04/2023 Sun |
சிட்னி முருகன் ஆலய மண்டபம் |
26/05/2023 Fri |
மூன்றாவது சிலப்பதிகார மாநாடு சிட்னி துர்க்கை அம்மன் கோயில் மண்டபம் |
27/05/2023 Sat |
மூன்றாவது சிலப்பதிகார மாநாடு சிட்னி துர்க்கை அம்மன் கோயில் மண்டபம் |
பேர்த்
திகதி |
விபரங்கள் |
21/04/2023 Fri |
பாலாமுருகன் கோயில் வருடாந்த திருவிழா கொடியேற்றம் |
29/04/2023 Sat |
பாலாமுருகன்
கோயில் வருடாந்த திருவிழா தேர்த்திருவிழா |
30/04/2023 Sun |
பாலாமுருகன் கோயில் வருடாந்த திருவிழா தீர்த்ததிருவிழா |
வானம்பாடி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்
தமிழ் திரைப் படங்களுக்கு பாடல்களை எழுதித் தள்ளிக்
கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன் மறு புறத்தில் படங்களை தொடர்ந்து தயாரித்துக் கொண்டும் இருந்தார். அப்படி அவர் தனது கண்ணதாசன் புரடக்சன்ஸ் சார்பில் தயாரித்த படம்தான் வானம்பாடி. 1963ம் வருடம் திரைக்கு வந்த இந்தப் படத்தில் பல ஜாம்பவான்கள் நடித்திருந்தார்கள் . கதாநாயகியாக தேவிகாவும், நாயகனாக எஸ் எஸ் ராஜேந்திரனும் நடிக்க இவர்களுடன், முத்துராமன்,டி ஆர் ராமச்சந்திரன்,ஷீலா, புஷ்பலதா, ஆர் எஸ் மனோகர் , எஸ் வி சகஸ்ரநாமம், டீ ஆர் ராஜகுமாரி, ஜாவர் சீதாராமன், ஓ ஏ கே தேவர், ஆகியோர் நடித்திருந்தனர். போதாக் குறைக்கு இவர்களுடன் கமலஹாசனும் சிறுவனாக நடித்திருந்தார்.
நூல் அறிமுகம்: புகலிட இலக்கியத்தின் மற்றும் ஒரு வரவு “ தைலம் “ அவுஸ்திரேலியக் கதைகள் முருகபூபதி
“ எமது முன்னோர்கள் ஐவகைத் திணைகளை எமக்கு
அறிமுகப்படுத்தினர்.
குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த
நிலமும் / முல்லை – காடும்
காடு சார்ந்த நிலமும் / மருதம் – வயலும்
வயல் சார்ந்த நிலமும் / நெய்தல் – கடலும்
கடல் சார்ந்த நிலமும் / பாலை – மணலும்
மணல் சார்ந்த பகுதிகளும்
தமிழர்களின் அந்நிய நாடுகளை நோக்கிய புலப்பெயர்வையடுத்து அவர்களின்
வாழ்வை பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அறிமுகமானதும் அந்தப்பிரதேசங்களின் நிலங்களும்
பருவகாலங்களும் ஆறாவது திணையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பனியும் பனிசார்ந்த
நிலங்களுமே அந்த ஆறாம் திணையாகியிருக்கிறது.
“
கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு வேரல் பதிப்பகத்தினால்
வெளியிடப்பட்டுள்ள தைலம் ( அவுஸ்திரேலியக் கதைகள் ) நூலைப் படித்தபோது, மேற்குறிப்பிட்ட எனது முன்னைய பதிவே நினைவுக்கு வந்தது.
அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி
இந்த நூலை தொகுத்திருக்கிறார். இவரதும் கதை உட்பட அவுஸ்திரேலியாவில் வதியும்
மேலும் பதினொரு படைப்பிலக்கியவாதிகளின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
அவுஸ்திரேலியாவை தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் “ புல்வெளி
தேசம் “ என வர்ணித்துள்ளார். மரங்களும் செழித்து வளருவதற்கு ஏற்ற
பருவகாலங்களை கொண்டிருந்தாலும், கோடை
காலத்தில் காட்டுத்தீ பரவல் தவிர்க்கமுடியாத நாடு இந்த கடல் சூழ்ந்த கண்டம்.
இங்கு யூகலிப்ரஸ் இனத்தைச்சேர்ந்த மரங்கள் செழித்து வளர்ந்து, இந்த
காட்டுத்தீக்கு தீணி தருகின்றன. அவை எரிந்துபோனாலும், மீண்டும் துளிர்த்து பசுமையை போர்த்திவிடும்.
தைலம் நூலின் தொகுப்பாசிரியர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, இந்தப்பெயரை
சூட்டுவதற்கு சொன்ன காரணத்தை இங்கே காணலாம்.
“ அவுஸ்திரேலியாவின்
அடையாளங்களில் ஒன்று யூகலிப்ரஸ் (
Eucalyptus ) தமிழில் இதை தைலமரம் என்று குறிப்பிடுவதுண்டு. இங்கே தைலம் என்பது
தனியே யூகலிப்ரஸை மட்டும் குறிக்காமல், வாழ்க்கையின் சாரத்தை – அதன் தைலத்தைக்
குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. அதைப்போல அவுஸ்திரேலியச் சூழலின் சாரத்தை - அதன் தைலத்தைக் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது.
அதைப்போல அவுஸ்திரேலியச் சூழலின் சாரத்தை – அதன் தைலத்தையும். “
எட்டு மாநிலங்கள் கொண்ட பெரிய தேசம்
அவுஸ்திரேலியா. அனைத்து மாநிலங்களிலும்
எழுத்தாளர்கள் – குறிப்பாக தமிழ்ச் சிறுகதை படைப்பாளர்கள் வசிக்கிறார்கள்.
அவர்களில் சிலர் கதைத் தொகுதிகளையும்
ஏற்கனவே வெளியிட்டுள்ளனர். அத்துடன் அவர்களில் சிலரது கதைகள் பனியும் பனையும், உயிர்ப்பு முதலான முன்னர்
வந்த தொகுப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் சில கதைகள் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு Being Alive என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளன.
அந்த வரிசையில் தற்போது மற்றும் ஒரு வரவாக எஸ். கிருஷ்ணமூர்த்தி தொகுத்திருக்கும் தைலம் வெளிவந்துள்ளது.
உருவச்சிலைகளுக்கு பின்னாலிருக்கும் அரசியலும் மதமும் சமூகமும் ! அவதானி
எப்பொழுதும் கேலியும் கிண்டலுமாக பேசியும் எழுதியும் வந்தவரான தமிழக எழுத்தாளரும், துக்ளக் ஆசிரியரும், நாடக – சினிமா நடிகருமான சோ . ராமசாமி, முன்னர் எழுதிய நாடகம் ஒன்று கல்கி இதழில் தொடர்ந்து வெளியானது.
அதில் வரும் இரண்டு பாத்திரங்கள் சென்னை மெரீனா பீச்சுக்கு செல்வார்கள். அங்கிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் சிலையை காண்பித்து ஒருவர், மற்றவரிடம், “இது யாருடைய சிலை? “ எனக் கேட்பார்.
அதற்கு மற்றவர், “ இந்தியாவின் ஏழ்மைக் கோலத்தை வெளிநாட்டிலிருந்து
இங்கே வருபவர்களுக்கு காண்பிக்கின்ற அடையாளச் சின்னம் . “ என்பார்.
சமகாலத்தில் இலங்கையில்
ஆங்காங்கே எழும் புத்தர் சிலைகளை பார்த்து வருகின்றோம்.
பல வருடங்களுக்கு முன்னர்
திருகோணமலை நகரில் ஒரு புத்தர் சிலை நாற்சந்தியில் வைக்கப்பட்டது. அதனை கண்டித்து அன்றைய தமிழ்த்தலைவர்கள் சட்ட நடவடிக்கையும்
எடுத்தனர். அச்சிலை முறையான அனுமதியுடன் அங்கே நிறுவப்படவில்லை என்று அப்போது பேசப்பட்டது.
அச்சிலைக்கு ஏதும் நேர்ந்துவிடும் என்பதற்காக பொலிஸார், அச்சிலையைச் சுற்றி கம்பி வேலியும் அமைத்து, காவலும் காத்தனர்.
பின்னர் இந்த விவகாரம் காற்றோடு கலந்து சென்றுவிட்டது.
புத்தர் தனக்கு அரசும்
வேண்டாம், மணிமுடியும் வேண்டாம், குடும்பமும் வேண்டாம் எனச்சொல்லிக்கொண்டு வனம் சென்று
தவம் புரிந்து நிர்வாணம் எய்தியவர்.
அத்தகைய ஒரு புனிதரை வைத்து
இலங்கையில் அரசியல் நடக்கிறது. சமூகத்திற்கு
மகோன்னதமான சேவைகளை செய்தவர்களுக்கும், மொழிக்கும் கலை, இலக்கியத்திற்கும்
பண்பாட்டுக்கும் அறிவியலுக்கும் மகத்தான சேவைகளை செய்தவர்களுக்காகவும் சமூகம் காலத்திற்குக் காலம் சிலைகளை
நடமாடும் பிரதேசங்களில் நிலை நிறுத்திவருகிறார்கள்.
கத்தோலிக்கர்கள் செறிந்து
வாழும் பிரதேசங்களில் யேசுநாதருக்கும் தேவமாதாவுக்கும் வீதியோரங்களில் சிலைகளை காணலாம். அத்தகைய சிலைகள் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் இருக்கும்.
சைவர்கள் செறிந்து வாழும்
பிரதேசங்களில் வீதியோரங்களில் பிள்ளையார் சிலைகளை காணலாம். அரசமரம், வேப்பமர நிழல்களில்
அவர் மௌனமாக அமர்ந்திருப்பார். அவரை வழிப்பிள்ளையார்
என்பார்கள். அவருக்கு தேங்காய் அடித்து வழிபட்டுச்சென்றால்,
செல்லும் காரியம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது.
இவைதவிர, இலங்கையில் பழைய பாராளுமன்ற வளாகத்திலும் சில அரசியல்
தலைவர்களின் சிலைகளை காணலாம். காலிமுகத்திடலில்
பண்டாரநாயக்காவுக்கு மாத்திரம் இரண்டு சிலைகள் இருக்கின்றன.
ஒன்று முன்னைய பாராளுமன்ற
முன்றலில், மற்றது சோவியத் அரசு வழங்கியது காலிமுக வீதியருகில். காலிமுக கோத்தா கோ
கம போராட்டத்தின்போது யாரோ ஒருவர் அச்சிலையில் ஏறி நின்று அதன் கண்களை கறுப்புத்துணியினால்
மூடிக்கட்டினார்.
அரசியல் தலைவர்களின் சிலைகளை வருடம்
ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் கழுவி சுத்தம் செய்வர். அப்போது அச்சிலைகளின் தலையின் படிந்திருக்கும் பறவைகளின் எச்சம் கழுவித்
துடைக்கப்படும்.
ஆனால், புத்தருக்கு இந்த
தண்ணீர் குளிப்பு நடப்பதற்கு சாத்தியமில்லை. அவர்
பறவைகளின் எச்சம்விழாத வகையில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள்ளோ
அல்லது புதிதாக அமைக்கப்பட்ட விகாரைக்குள்ளோ இருப்பார்.
பிரமாண்டமான புத்தர் சிலைகள்
பறவைகளின் சரணாலயமாகிவிடும். அவர் பறவைகள்
உட்பட உயிரினங்கள் அனைத்தையும் நேசித்து, அன்பு
மார்க்கத்தை போதித்தவர்.
ஆனால், அவரது மார்க்கத்தை
பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஆட்சியாளர்களின் பூரண அனுமதியுடனும் ஆசிர்வாதத்துடனும்
நாடெங்கும் புத்தர் சிலைகள் எழுந்துகொண்டிருக்கின்றன.
பல வருடங்களுக்கு முன்னர், கொழும்பு துறைமுகத்தை நோக்கி வரும் வெளிநாட்டு கப்பல்களின் மாலுமிகள் தூர நோக்கு கண்ணாடி ( Telescope ) ஊடாக கொழும்பின் கரையை பார்த்தபோது, அவர்களுக்குத் தெரிந்தது கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் கோபுரம்தான்.
மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்
அதிகாரம் 14 – அவளின் விலை
வந்த புங், கடந்த இரண்டு வாரங்களாகப் பேச்சு மூச்சற்று இருக்கின்றாள். முகத்தில் பூச்சற்று, நறுமணமற்று யாருடனும் பேசமுடியாதவாறு ஏங்கித் தவிக்கின்றாள். இப்பொழுதெல்லாம் அவளை நிமிர்ந்து பார்க்கும் ஒருவன் நந்தன் தான்.
இலங்கைச் செய்திகள்
சம்பூர் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி
தந்தை செல்வாவுக்கு மலர் அஞ்சலி
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப எனது தலைமையிலான அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது
வெடுக்குநாறி சிவன் ஆலய சம்பவம்; வவுனியாவில் கண்டன போராட்டம்
இந்திய ரூபாவை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்ைககள்
நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன்
சம்பூர் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி
அதற்கமைய, அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் வான்வழிச் சேவைகளை வழங்குவதற்காக சேவை வழங்குநர்களாக தனிநபரொருவர் அல்லது அதற்கு மேலதிகமான எண்ணிக்கையை நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான்செலவுகள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலகச் செய்திகள்
தாய்வானில் சீன ஊடுருவல் உச்சம்
ஆபாச நடிகை விவகாரம்: டிரம்ப் மீது குற்றச்சாட்டு
சூச்சியின் கட்சி கலைப்பு
அமெரிக்கா செல்லும் தாய்வான் ஜனாதிபதிக்கு சீனா எச்சரிக்கை
இஸ்ரேலிய அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்; பதற்றம்
பிலிப்பைன்ஸ்: கப்பல் தீப்பற்றியதில் 31 பேர் பலி
தாய்வானில் சீன ஊடுருவல் உச்சம்