25/02/2023 இன்று சிட்னி துர்க்கை அம்மன் மாசி மக மகோற்சவம் பக்த்தர்கழுடன் கொடியேற்ற வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இன்று தொடக்கம் 12 தினங்களுக்கு , தொடர்ந்து விசேட பூசை, திருவிழா, தேர், மாசி மக தீர்த்த திருவிழா, பூங்காவனம் என அம்மன் கோவில் திருவிழாக்கோலமாக காட்சி அளிக்கும்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
பவளவிழாக்காணும் பல்துறை ஆற்றல் மிக்க இலக்கியப் பேராசிரியர் க. பஞ்சாங்கம் திறனாய்வில் புதிய எல்லைகளை கண்டடைந்தவர் ! புதுச்சேரியில் இம்மாதம் 26 ஆம் திகதி நிகழ்ச்சி ! முருகபூபதி
கடந்துசென்ற ஐம்பது ஆண்டு காலத்தில் ( 1972 - 2022 ) இலக்கிய உலகில் நான் சந்தித்துப்பேசி உறவாடிய இலக்கியவாதிகள் எண்ணிலடங்காதவர்கள்.
அவர்களில் குறிப்பிடத்தகுந்த
பலர் இந்தியாவிலிருந்தவர்கள். இருப்பவர்கள்.
அவர்களின் பெயர்ப்பட்டியல் சற்று நீளமானது. அவர்கள் குறித்தெல்லாம் எனது அனுபவங்களை
மனப்பதிவுகளை எழுதிவந்திருக்கின்றேன்.
அதன்மூலம் இலங்கை – இந்தியா – மற்றும் தமிழர் புகலிட சேத்து
இலக்கியவாதிகளிடத்தில் ஆரோக்கியமான உறவுப்பாலமும் எனக்கு அமைந்தது.
கொவிட் பெருந்தொற்று பரவியதையடுத்து,
அந்தப்பாலம் மெய்நிகர் அரங்குகளின் ஊடாக மேலும் பலமடைந்திருப்பதாகக் கருதுகின்றேன்.
நேருக்கு நேர் சந்தித்துப்
பேசிப்பழகியிராத பலரும் மெய்நிகர் அரங்கின் ஊடாக எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில்
இணைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர்தான் இந்திய இலக்கியப் பேராசிரியர் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்கள்.
சில தினங்களுக்கு முன்னர் பெங்களுரில் வதியும் படைப்பிலக்கியவாதி பாவண்ணனுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கு இந்த ஆண்டு
பெப்ரவரி மாதம் பவளவிழாக்காலம் ஆரம்பமாகிறது என்ற தகவலைச் சொன்னதுடன், அவரைக்கொண்டாடுமுகமாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை
எனக்குத் தெரிவித்தார்.
இந்தியா செல்லும்போது குறிப்பாக
தமிழகத்தில், சென்னையில் - கோயம்புத்தூரில் - மதுரையில் - சாத்தூரில் படைப்பிலக்கியவாதிகளை சந்தித்துப் பேசியிருக்கின்றேன்.
அல்லது அங்கிருந்து எவரேனும் நான் வதியும் அவுஸ்திரேலியா கண்டத்துக்கு வரும்போது நேருக்கு
நேர் சந்தித்திருக்கின்றேன்.
2000 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த
எழுத்தாளரும், தற்போது இந்திய பாராளுமன்றத்தில் தென்சென்னை பிரதிநிதியாக அங்கம் வகிப்பவருமான
சுமதி தமிழச்சி தங்கபாண்டியன், என்னுடன் உரையாடும்போதெல்லாம்
அடிக்கடி உச்சரித்த பெயர்தான் பேராசிரியர்
க. பஞ்சாங்கம்.
எதிர்பாராத வகையில் சமகாலத்தில்
நடந்த மெய்நிகர் அரங்குகளில் இவரைப் பார்த்து பேசமுடிந்தது. அதன்பிறகு என்னுடன் மின்னஞ்சல் தொடர்பிலும் இருக்கிறார். இவ்வாறு சமீபகாலத்தில் எனக்கு நேரடி உரையாடலில் அறிமுகமானவர்கள்தான் புதுச்சேரியில்
வதியும் முனைவர் அரிமளம் பத்மநாபன், பெங்களுரிலிருக்கும் எழுத்தாளர் பாவண்ணன், சென்னையிலிருக்கும்
இலக்கிய ஆர்வலர் கவிஞர் உமா பாரதி ( பாரதியாரின் கொள்ளுப்பேத்தி )
“ நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்! “ என்பது
நான் கற்றுக்கொண்ட வாழ்வியல் தத்துவம். அவ்வாறு எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில்
இணைந்திருக்கும் எனது அன்பிற்கும் அபிமானத்திற்குமுரியவராகத் திகழும் பேராசிரியர் க.
பஞ்சாங்கம் அவர்களுக்கு, அவர் சந்திக்கும்
இந்த பவளவிழாக்காலத்தில் வாழ்த்துக்கூறுகின்றேன்.
கன்னியப்பன் பஞ்சாங்கம் என்ற இயற்பெயரைக் கொண்டிருக்கும் இவர், கவிதை, புதினம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் தடம் பதித்த ஆளுமை. இதுவரையில் இந்தத் துறைகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை வரவாக்கியிருப்பவர்.
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 54 ஒரே ஆண்டில் ( 2004 ) மறைந்த இரண்டு ஆளுமைகள் ! தலைக்கு அணியும் தொப்பியின் மகாத்மியமும் எழுதவேண்டும் ! முருகபூபதி
ஒரேசமயத்தில் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்வதற்கு என்னை பழக்கியது, புலம்பெயர் வாழ்க்கைதான். இனிமேல் இதனை புகலிட வாழ்க்கை என்றுதான் கூறவேண்டும்.
நேரத்தோடு போராடிக்கொண்டிருப்பவர்கள்
இந்த உத்தியை கையாண்டால்தான் பிழைத்துக்கொள்ள முடியும். வேகமும் விவேகமும் இல்லையென்றால்,
இந்த அவசர யுகத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாது.
எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் கடந்த 53 ஆவது அங்கத்தில் நான்
குறிப்பிட்ட இலக்கிய ஆளுமை ராஜஶ்ரீகாந்தனின் நினைவாக எழுதிய நூலை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்டுவைத்த பின்னரே அவுஸ்திரேலியாவுக்கு புறப்படவேண்டும் என தீர்மானித்திருந்தேன்.
2005 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி
சிட்னியில் ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலையும்,
விமர்சன அரங்கில் இணைத்துவிட்டு, அந்த நிகழ்ச்சி முடிந்து மெல்பன் திரும்பியதையடுத்து, கொழும்புக்குச் செல்லத் தயாரானேன் என்று கடந்த அங்கத்தில்
சொல்லியிருந்தேன் அல்லவா..?
அவ்வாறு சென்று 2004 இறுதியில் சுநாமி கடற்கோள் அநர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கான
நிவாரண உதவிகளை பகிர்ந்தளித்துவிட்டு, கொழும்புக்கு வந்தபோது, ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலின் இதர பிரதிகளை வந்து
எடுத்துச்செல்லுங்கள் என்று நண்பர் கிறிப்ஸ் கிறிஸ்ணமூர்த்தியிடமிருந்து தகவல் வந்தது.
கொழும்பு கொட்டாஞ்சேனையில்
அப்போது வசித்துக்கொண்டிருந்த ராஜஶ்ரீகாந்தனின் துணைவியார் லீலா, மற்றும் அவர்களது
பிள்ளைகள் அபர்ணா, அனோஜா, ஆகியோரிடமும் மல்லிகை ஜீவா, மேமன்கவி, வதிரி சி. ரவீந்திரன்
ஆகியோரிடத்திலும், அவுஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னர் அந்த நூலின் வெளியீட்டு அரங்கினை
அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ( 26-02-2005 ) நடத்தப்போகின்றேன் எனச்சொன்னேன்.
கிழக்கிலங்கை சென்று திரும்பி
வந்த களைப்பு தீருவதற்குள் மற்றும் ஒரு நிகழ்ச்சியை எவ்வாறு நடத்தப்போகிறீர்…? என மல்லிகை
ஜீவா கேட்டார்.
“ எல்லாம் நடக்கும். நீங்கள்தான் தலைமை தாங்குகிறீர்கள். மேமன் கவி வரவேற்புரை,
சோமகாந்தன், வன்னியகுலம், திக்குவல்லை கமால்,
வதிரி. சி. ரவீந்திரன், அன்னலட்சுமி இராஜதுரை, சிவா. சுப்பிரமணியம் ( தினகரன்
ஆசிரியர் ) ஆகியோர் உரையாற்றுவார்கள். புரவலர் காசிம் உமரும் வருகிறார். “ என்று எனது மனக்கணக்கினை அவரிடம் ஒப்புவித்தேன்.
“ எல்லோரிடமும் சொல்லிவிட்டீரா..? “ என்று அடுத்தகேள்வியை ஜீவா கேட்டார் .
அவர்கள் எல்லோரும் நிச்சயம் வருவார்கள். பேசுவார்கள். எனக்காக இல்லாது விட்டாலும்,
ராஜஶ்ரீகாந்தனுக்காக வருவார்கள். தெணியானையும்
அழைக்க விரும்புகின்றேன். அவருக்கும் வருவதற்கு விருப்பம் இருந்தாலும், சமகால சூழ்நிலையினால் பொலிகண்டியிலிருந்து அவரால்
வரமுடியாது . எனினும் இந்த நூலின் அறிமுகம் வடமராட்சியிலும் நடக்கும். ஆனால், நான்தான்
அப்போது இங்கே இருக்கமாட்டேன் “ என்றேன்.
ஜீவா என்னை வியப்போடு பார்த்தார்.
“ எல்லாம் அவுஸ்திரேலியா உமக்குத் தந்த ட்ரெயினிங் “ என்று மாத்திரம் சொன்னார்.
ஆனந்த ஜோதி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்
திரைப் படங்களில் பயங்கர வில்லனாகவும், நிஜ வாழ்வில் மிகவும்
நல்லவனாகவும் வாழ்ந்து வந்த வில்லன் பி எஸ் வீரப்பா 60 பது வருடங்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளராக மாறினார்.எஸ் எஸ் ஆர் நடிப்பில் பிள்ளைக் கனியமுது ,ஜெமினி நடிப்பில் வீரக்கனல் ,சிவாஜி நடிப்பில் ஆலயமணி ஆகிய படங்களை தயாரித்தவர் எம் ஜி ஆரின் நடிப்பிலும் ஒரு படம் தயாரித்தார். படத்தில் கதாநாயகன் பேர் ஆனந்தன்,கதாநாயகி பேர் ஜோதி இரண்டும் சேர்ந்தால் ஆனந்த ஜோதி.இதுதான் எம் ஜி ஆர் நடிப்பில் அவர் தயாரித்த படம்.
. மாணவர்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவிப்பவன்.அவனின் மாணவர்களில் ஒருவன் பாலு .அவனின் அக்கா ஜோதி, ஆனந்தன் ஒரு கவிஞன் என்பது தெரியாமலே அவனை காதலிக்கிறாள்.அவளில் தந்தை முத்தையா பிள்ளை ஒரு தனவந்தர். பிள்ளைகள் மேல் அன்பு கொண்டவர். எல்லாம் சுமுகமாக போகும் சந்தர்ப்பத்தில் அவர்களின் வாழ்வில் குறுக்கிடுகிறான் ஜம்பு. அவன் வருகைக்கு பிறகு முத்தையா பிள்ளை பெட்டிப் பாம்பாக அவனுக்கு அடங்குகிறார். ஆனந்தன்,ஜோதி காதலுக்கும் தடை ஏற்படுகிறது. ஜம்புவின் கை ஓங்கி நிற்க காரணம் என்ன என்று அறியாமல் திகைக்கிறான் பாலு. ஆனந்தனும்,ஜோதியும் இணைந்து ஆனந்த ஜோதி ஆனார்களா என்பது மீதிக் கதை.
மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்
அதிகாரம் 9 : கண் மண் தெரியா நட்பு
நந்தனுடன் பகிர்ந்து கொள்ளும் அவள், ஜோசுவா தொடர்பாக எந்த ஒன்றையுமே கதைப்பதில்லை. நட்பில்தான் எத்தனை விதம்! குடும்பம் நடத்த கணவன்; செக்ஸ் இற்கு ஒரு நண்பன்; வேலையில் கதைத்துப் பேச இன்னொரு நண்பன்.
அழகான ஆடைக்குள் வெற்றுப்பை ! Clean suit empty pocket! அவதானி
ஆங்கிலத்தில் ஒரு வாசகம் இப்படிச் சொல்கிறது:
Clean suit empty pocket. இதன் அர்த்தம் புரிந்துகொள்ளத்தக்கது. தமிழ்த் திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளில் தோன்றி ஆடிப்பாடும் கதாநாயகன், அணிந்திருக்கும் மிகவும் பெறுமதியான ஆடையிலிருக்கும் பையில் ( Pocket ) பணம் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அது காட்சிக்குத் தேவையும் இல்லை !
அத்தகைய ஒரு நிலையில்தான்
இன்றைய இலங்கை அரசாங்கம் இருக்கிறது. அதாவது பேச்சுப் பல்லக்கு. பயணமோ கால்நடை.
ஜனநாயக நாட்டில் தேர்தல்தான் ஒரு அரசை அமைப்பதற்கான தீர்ப்பை வழங்கும் என்பது
பொதுவான விதி. தேர்தல் நடத்துவதற்கு பணம் தேவை. வாக்குச்சீட்டுக்கள் அச்சிடவேண்டும். அதற்கே பெருந்தொகைப்பணம் அவசியம். அந்த நிதியை தேர்தல்
ஆணைக்குழுவுக்கு வழங்கவேண்டிய நிதியமைச்சு கையை விரித்தால் என்ன நடக்குமோ..? அதுதான்
தற்போது இலங்கையில் நேர்ந்திருக்கிறது.
நிதியமைச்சின் இந்த கைவிரிப்பினை
அரசின் திட்டமிட்ட சதி என கருதுகின்றன எதிரணிக்கட்சிகள். ஆளும் ரணில்
விக்கிரமசிங்காவின் அரசு, ராஜபக்ஷக்களின்
பொதுஜனபெரமுனவின் ஆசிர்வாதத்துடன் இயங்குகிறது என்பதே பொதுவான அபிப்பிராயம்.
தங்களிடம் ஆட்சியைத் தந்தால், இலங்கையிலிருக்கும்
பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவோம் என்றுதான்
சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுரகுமார திஸாநாயக்காவின்
தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியும் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், அவ்வாறெல்லாம் சொல்ல
முடியாத தமிழ்தேசியக்கட்சிகள், தங்கள் செல்வாக்கு
எத்தகையது என்பதை காண்பிப்பதற்காகவே ஒவ்வொரு பாராளுமன்றத்தேர்தல்களிலும் களம் இறங்கிவருகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம்
09 ஆம் திகதி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்
நடக்கமாட்டாது என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.
ரணில்விக்கிரமசிங்காவின்
ஐக்கிய தேசியக்கட்சியும், மகிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவும் இந்த செய்தியை எதிர்பார்த்திருந்தமையால்
இவர்களுக்கு எந்தவொரு ஏமாற்றமும் இல்லை. திட்டமிட்டவாறு தேர்தல் நடந்திருந்தால், இவர்களின் “ பொட்டுக்கேடு “ வெளிச்சத்திற்கு
வந்திருக்கும்.
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதை முற்கூட்டியே தீர்க்கதரிசனமாக சொல்லத்தக்கவகையில்தான் இந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல் இடம்பெறவிருந்தது.
இலங்கைச் செய்திகள்
கைதான வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர்களுக்கு பெப். 27 வரை வி.மறியல்
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக அமைச்சர் டக்ளஸ்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் யாழ். விஜயம்
தேர்தல் ஒத்தி வைக்கப்படவுமில்லை, ஒத்திவைக்க அவ்வாறான தேர்தல் ஒன்றும் கிடையாது
கைதான வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர்களுக்கு பெப். 27 வரை வி.மறியல்
கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
உலகச் செய்திகள்
உக்ரைன், ரஷ்யாவுக்கு சீனா சமரச அழைப்பு
பாக்.– ஆப்கான் எல்லை ஆறாவது நாளாக பூட்டு
வட கொரியா நான்கு ஏவுகணை சோதனை
உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு ஐ.நா பொதுச் சபையில் கண்டனம்
நீர் வற்றியதால் மிதக்கும் வெனிஸ் நகர் ஸ்தம்பிதம்
உக்ரைன், ரஷ்யாவுக்கு சீனா சமரச அழைப்பு
மெல்பேர்ண் கம்பன் விழா [ 25, 26 / 02 / 23 ]
மெல்பேர்ண் வாழ் தமிழன்பர்களுக்கு,

இரு நாள் மாலை நேர விழவாக,
தமிழார்வலர்கள் அனைவரையும் திரளாக வருகை தந்து,
- அவுஸ்திரேலியக் கம்பன் கழக, மெல்பேர்ண் வளாகத்தினர் -
சிட்னியில் 'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ் [1 - 5 / 03 / 23]
'ஞான வேள்வி' - சிட்னியில் கம்பவாரிதி பேருரைகள் [1,2 /03/23]
நாவன்மையும் புலமைத்திறனும்
ஒருங்கே அமைந்த அறிஞர் சொற்பொழிவாற்றும் களம்.
சொல்,
சொல் கடந்த பொருள்,
பொருள் கடந்த பயன் என,
நிறைவான எம் தமிழை, அறிய வருக.
'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ் அவர்களோடு இணைந்து,
வழக்கறிஞர் கே. சுமதி அம்மையார் (தமிழ்நாடு)
அனைத்து சிட்னி வாழ் இலக்கிய இரசிகர்களையும் அன்பு பாராட்டி அழைக்கின்றோம்.
இரு நாட்களுக்குமான நுழைவுக் கட்டணம்:
தனிநபர் - $30 டொலர்கள்.
நேரடியாக இவ் இணைய முகவரியிலிருந்து நீங்கள் நுழைவுச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்:
நிகழ்வு நாள்: மார்ச்சு - புதன் 1ஆம் திகதி மற்றும் வியாழன் 2ஆம் திகதி.
-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-
அவுஸ்திரேலியக்_கம்பன்_விழா! [ சிட்னி: 1 - 3 / 03 / 23 ]
உயிரானவர்களே வணங்குகிறோம்.

அவுஸ்திரேலியக் கம்பன் விழாவில் - 'கலை தெரி அரங்கம்' [ சிட்னி: 03 / 03 / 23 ]
சிறந்த அவுஸ்திரேலிய பரத நாட்டியக் கலைஞர் வித்துவான் கிறிஸ்தோபர் குருசாமி அவர்கள் இம்முறை சிட்னியில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியக் கம்பன் விழாவில் பங்கேற்கவிருக்கின்றார்.
குறிப்பாக, பரத நாட்டிய ஆசிரியர்கள், பரத நாட்டியக் கலைஞர்கள் மற்றும் கலை பயிலும் மாணவர்கள் வருகைதந்து நிகழ்வைச் சிறப்பித்தும் பயன்பெற்றும் ஏக வேண்டும் எனப் பணிவன்போடு வேண்டுகின்றனர் கழகத்தினர்.
'கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்'