மரண அறிவித்தல்

 .

                   திருமதி தெயவந்திரராணி (ராணி) வேலாயுதர் 

 

கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும் கைதடியைப் புகுந்த இடமாகவும் கலாவெவ இலங்கை, வெலிங்டன் நியூசிலாந்து, Toongabbie அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  ராணி என்றழைக்கப்படும் திருமதி தெய்வேந்திரராணி வேலாயுதர்  07.03.2023 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் இறைபதமெய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் செல்லம்மாவின் அன்பு மகளும் சரவணமுத்து ஆச்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும் திரு வேலாயுதர் சரவணமுத்து (தொழிநுட்ப உத்தியோகத்தர், இலங்கை) அவர்களின் அன்பு மனைவியுமாவார்.
இவர்  பவானி(ஜேர்மனி), காலஞ்சென்ற சாந்தினி, யசோதினி(சிட்னி), சிவகுமார்(சிட்னி)
, நந்தினி(சுவிஸ்), பாமினி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் பாலசுப்பிரமணியம், தர்மகுலசிங்கம், விக்டர், ஜெயதேவி, இந்திரன், நந்தன் ஆகியோரின் அன்புமாமியும் கிருஷாந்தி, பார்த்தீபன், கீர்த்திகன், ஏஞ்சலா, அஸ்வினி, ஆருனி, சேந்தன், சுவேதா, ஆரூரன், அஜந்தன், நிஷங்கா மற்றும் முகுந்தன், ஸ்டெவி , அருண், மெதுலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் நவீனா, ஜஸ்வின், யோசான், ஜொகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
காலஞ்சென்ற சற்குணபூபதி,  மோகனலீலா, சௌந்தரலீலாவதி, தர்மலிங்கம், யோகாம்பிகை, சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற கணேசு, காலஞ்சென்ற குணரட்ணம், சுப்ரமணியம், புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான விமலாம்பிகை, பாலசிங்கம், அன்னமுத்து, இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனியும் வீரகத்தி, செல்வரத்தினம் ஆகியோரின் சகலியுமாவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் :
 அன்னாரது பூதவூடல் 15.03.2023 புதன்கிழமை அன்று 86, Targo Road, Girraween அவரது இல்லத்தில் பி.ப 6 மணியிலிருந்து  8 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.
16.03.2023 வியாழக்கிழமை அன்று  மு.ப 11.45க்கு  அன்னாரின் இறுதி ஊர்வலம் 21 Bulli road துங்கபியில் இருந்து  ஆரம்பமாகி North chapel, Pinecrove, Minchinbury மயானத்தை சென்றடையும். பி.ப 1.00 மணிக்கு அங்கு  இறுதிக்கிரியைகள் நடைபெற்று பி.ப 3 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்  , உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டப்படுகின்றார்கள்.
தகவல் : பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
Victor   0400 478 363
Nanthan  0413 895 294
Sivakumar 0413685056

No comments: