படப்பிடிப்பு : நிரோஐன் நிரஞ்ஜன்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
சிட்னி துர்க்கை அம்மன் ஆலய மாசி மக வருடாந்த திருவிழா 4ம் திருவிழா 11 02 2022
சிட்னி துர்க்கை அம்மன் ஆலய மாசி மக வருடாந்த திருவிழா - நான்காம் நாள் 11. 02. 2022 திருவிழா, முப்பெரும் தேவியரின் வீதியுலா மற்றும் தேர்/ சப்பரம் பந்தக்கால் நடுதல்
படப்பிடிப்பு : நிரோஐன் நிரஞ்ஜன்
வாழ்வாங்கு மண்ணில்நல்ல வண்ணம் வாழலாம் வாழநினைப் போருக்கு வழிதா னிலையா?
………….. பல்வைத்தியகலாநிதி பாரதி இளமுருகனார்
பள்ளிதனிற்
கற்பதுவும் பட்டம் பெறவே
பலவிடங்கள் ஓடியோடிக் கற்பதும் சரியே!
வள்ளுவனார் சொன்னபடி வாழ்
வழங்குவதோ சமயநெறிக் கல்வி அன்றோ?
துள்ளியலைய விடாதென்றும் மனதை நல்ல
தூயவெண்ணங் கொண்டுசெய லாற்ற வேண்டி
எள்ளிநகை ஆடாது பிள்ளை களுக்கு
ஏற்றசமய அறிவுதனைப் புகட்ட வேண்டும்!
நிம்மதி வெளிச்சம் நிச்சயம் தெரியும் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மானசீக குரு – நடன நர்த்தகி பவளவிழா நாயகி கார்த்திகா கணேசர் ஆனந்தராணி பாலேந்திரா – இங்கிலாந்து
( அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் நடன நர்த்தகி திருமதி கார்த்திகா கணேசரின் பவளவிழா, அண்மையில் மெய்நிகரில் நடைபெற்றது. இந்த அரங்கில், அவரது மாணவி, இங்கிலாந்தில் வதியும் ஆனந்தராணி பாலேந்திரா நிகழ்த்திய உரை )
நாட்டியம், இலக்கியம், எழுத்து, ஊடகம் என பல துறைகளில் தடம் பதித்துள்ள ஆளுமை மிக்க பெண்மணியான திருமதி. கார்த்திகா கணேசர் அவர்களின் பவள விழா மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் என்னை உரையாற்ற அழைத்த
ஒருங்கிணைப்பாளர் திரு. முருகபூபதி அவர்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் முதலில்
எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உலகில் ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல், பத்தோடு
பதினொன்றாக இல்லாமல், வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக்
கொண்டு ஒரு தனித்துவமானவராக வாழ்வது எல்லோராலும் முடியாது. அதற்கு சமூகம் சார்ந்த சிந்தனை,
நிறைய அர்ப்பணிப்புடனான தன்னலமற்ற சேவை, திறமை, துணிச்சல், நம்பிக்கை என பல வேண்டும்.
இவை அனைத்தையும் தன்னுள் கொண்ட ஒருவர்தான் எனது குரு கார்த்திகா மிஸ்.
கொழும்பில் என்னுடைய இள வயதில் இருந்தே நானும் எனது அக்கா
பாலராணியும் கார்த்திகா மிஸ்ஸிடம் பரதம் பயின்று வந்தோம். அக்கா இடையில் நடனத்தை விட்டாலும் நான் தொடர்ந்து கற்று வந்தேன். அந்தக் காலங்களில் ஆசிரியர்கள் என்றால் பொதுவாக கண்டிப்பானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் எப்போதும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். ஒரு திரை என்று சொல்லலாம். கார்த்திகா மிஸ் அதற்கு விதிவிலக்கானவர். மாணவிகளுடன் மிக அன்பாக ஒரு தாயைப்போல, சகோதரியைப் போல, நண்பியைப் போலத்தான் பழகுவார். மாணவிகளின் குடும்பத்தினர் மீதும் மிக அக்கறை உள்ளவர். இவரது அணுகுமுறை மிக வித்தியாசமானதாக இருக்கும். இதனால்தான் இவரிடம் எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் நடனம் பயின்ற மாணவிகளும் இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள்.
எனது பதின்ம வயதில் தனிப்பட்ட வகுப்புகளுக்காக இவரது வீட்டிற்குச்
செல்வது வழக்கம். 50 வருடங்களுக்கு மேலாகி விட்டபோதும் அந்த வீடு இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.
வீட்டிற்கு முன்னால் ஒரு ஜாம் பழ மரம். வகுப்பு முடிந்து போகும்போது பழுத்த பழங்களைப்
பிடுங்கிச் செல்வேன். மிஸ் வீட்டுக்குள் போனவுடனேயே “ ராணி, என்ன குடிக்கப் போறீர்? தேநீர் - குளிர்பானம் ஏதும் தரவா
என்று கேட்டு அதற்குப் பின்னர்தான் வகுப்பு எடுப்பார். இவரின் ஒரே பிள்ளையான அமிழ்தன்
அப்போது சிறு பையன். அவரும் சில வேளைகளில் வந்து என்னோடு சேர்ந்து ஆடிப் பழகுவார்.
கார்த்திகா மிஸ் வீட்டில் நான் சாப்பிட்ட நாட்களும் நிறைய உண்டு. நான் ‘நேரம் போட்டுது மிஸ், பஸ் பிடிக்க வேணும் ‘ என்று சொன்னாலும் ‘கொஞ்சம் சாப்பிட்டுப்போம்’ என்று சாப்பாடு தந்துதான் விடுவார்.
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -02 சோதனைகள் : தாயகம் - புகலிடம் . “ காலமும் கணங்களும் “ நெடுங்கதையின் முதல் அத்தியாயம்
எனது எழுத்தும் வாழ்க்கையும் தெடரின் முதல் பாகத்தின் முதல் அங்கத்தை, 1972 இல் மல்லிகையில் வெளியான எனது முதலாவது கனவுகள் ஆயிரம் சிறுகதையுடன் ஆரம்பித்திருந்தேன்.
கடந்த வாரம் தொடங்கப்பட்டிருக்கும்
இரண்டாம் பாகத்தின் இரண்டாம் அங்கத்தை
( அவுஸ்திரேலியா வாழ்க்கை ) காலமும்
கணங்களும் என்ற நெடுங்கதையுடன் தொடங்குகின்றேன்.
இக்கதை 35 ஆண்டுகளுக்கு
முன்னர் நான் மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் இறங்கி, விக்ரோரியா மாநிலத்திற்கு புறப்பட்டது
வரையிலான சில நாட்களை சித்திரிக்கிறது.
1987 பெப்ரவரி மாதம் முதல் நான் கருவில் சுமந்து 1988 ஜூலையில்
எழுதி முடித்த கதை இது.
இனி வாசகர்களை கதைக்குள்
அழைக்கின்றேன்.
காலமும் கணங்களும்
பேர்த் விமான நிலையம் , ஓடுபாதையில் விமானம் இறங்கி
ஊர்ந்தபோது நேரத்தைப்பார்த்தான் சந்திரன்.
சீட் பெல்டை கழற்றவேண்டிய
அவசியம் அவனுக்கில்லை. விமானப்பணிப்பெண் அருகே வந்து சொன்னபோதும் அலட்சியப்புன்னகையை
உதிர்த்துவிட்டு பக்கத்து கண்ணாடியூடாக விமான நிலையத்தை பார்த்தவன் சந்திரன்.
ஒவ்வொரு பயணிகளும் இறங்கும்
வரையில் காத்திருந்தான்.
மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தின்
வெளிகளும் குடியிருப்புகளும் பசுமை படர்ந்த சோலைகளும் தெரியத் தொடங்கும்போதே குதூகலத்துடன்
எழுந்து எழுந்து அமர்ந்து எரிச்சலூட்டி பக்கத்து சீட்காரர் சந்திரனிடம் கைகுலுக்கி
விடைபெற்றார்.
முன்பின் தெரியாத கண்டத்தில்
காலடி எடுத்து வைக்கிறோம் என்ற உணர்வைத்தவிர, வேறு எந்த உணர்வுகளுமின்றி, ட்ரவலிங் பேக்கை தோளில்
மாட்டிக்கொண்டு உற்சாகமாக நடந்தான் சந்திரன்.
பாஸ்போர்ட், டிக்ளரேஷன் ஃபோர்ம் ஆகியனவற்றை மீண்டும் ஒருமுறை எடுத்துக்கொண்டான். குடிவரவு அதிகாரிகள் அமர்ந்திருந்த ஒவ்வொரு கௌன்டர்களின் முன்னால் அவனுடன் வந்த பயணிகள் வரிசையாக நிற்கிறார்கள்.
கோடையொன்றை எதிர்கொள்ளத் தயாராகிறேன் - அ.வெண்ணிலா
கோடையொன்றை
எதிர்கொள்ளத் தயாராகிறேன்
இலைகளும் பூக்களும்
நிரம்பியிருந்த
என் மரம்
உதிர்க்கத் துவங்குகிறது
தன் பசுமையை
கூட்டிற்குள் மூடங்கிக் கிடந்த
என் பாடும் பறவை
சிறகு கோதி
வசந்தத்தின் பாடலொன்றை
இசைக்கத் துவங்குகிறது
ஓடிச் சலித்த
என் நதி
முணுமுணுப்புடன் மெல்ல
நடக்கத் துவங்குகிறது
அழுத்தமான நிறத்துடன்
இலைகள் அடர்ந்திருந்த
என் மல்லிகைச் செடி
மொட்டு விடத் தயாராகிறது
அழுத ஓய்ந்த
பெண்ணொருத்தியின்
கலங்கிய கண்களைப் போலிருந்த
என் வானம்
தன் வசீகர நீலத்திற்குத்
திரும்பிக் கெண்டிருக்கிறது
தோல் தீய்க்கும்
சுட்டுப் பொசுக்கும்
வியர்வைப் பெருகி
வீழ்த்திச் சாய்க்கும் உடலை
என்றாலும்
கோடை
மணங்களைச் சுமந்து வருகிறது
சுவைகளை
திகட்ட திகட்ட தருகிறது
ஓராயிரம்
கைகளை கொடுக்கிறது
எண்பது வருட காலமாக தொடர்ந்த இசைப்பயணம்
Monday, February 7, 2022 - 6:00am
36 மொழிகளில், தேனாக இனித்த பல்லாயிரம் பாடல்கள் தந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவினால் ரசிகர்கள் பெருந்துயர்
இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று காலமானார். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக்காலை அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தலைவர்கள் தலைவணங்கிய லதா மங்கேஷ்கார் சாகாவரம் பெற்ற பாடிப்பறந்த இசைக்குயில் - முருகபூபதி
“ எங்கள் பாகிஸ்தானுக்கு வந்துவிடுங்கள். நான் உங்களை எமது
நாட்டில் கௌரவப் பிரஜையாக ஏற்கின்றேன். காஸ்மீரை இந்தியாவுக்கு விட்டுக்கொடுத்துவிடுகிறேன் “ என்று ஒரு சமயம் சொன்னவர் பாகிஸ்தான் அதிபர் ஷியாவுல் ஹக்.
இவ்வாறு ஒரு நாட்டின் தலைவர்
தனது அண்டை நாடான இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்காரிடம் சொன்னதாக ஒரு செய்தியை
நாம் முன்பு படித்திருக்கின்றோம்.
அந்தளவுக்கு அனைவராலும்
நேசிக்கப்பட்ட இந்த இசைக்குயில், இம்மாதம்
06 ஆம் திகதி தனது இறுதி மூச்சைவிட்டு, விடைபெற்றுவிட்டது.
உலகில் எங்காவது ஒரு தேசத்தில் - ஓரிடத்தில் ஒவ்வொரு நிமிடமும்
ஒலித்துக்கொண்டிருக்கும் மதுரமான குரலுக்குச் சொந்தக்காரரான லதா மங்கேஷ்கார் தனது ஐந்து வயதில் இசைப்பயணத்தை தொடங்கியவர்.
முப்பத்தியாறு மொழிகளில்
பாடி புகழ்பெற்றிருக்கும் லதா, இந்திய அரசின் பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகள் உட்பட,
வாழ்நாள் சாதனைக்கான ஜீ சினி விருது, தாதா சாகேப்
பால்கே விருது உட்பட பல விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்ற சாதனையாளர்.
2001 ஆம் ஆண்டில்
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றவர் இந்த இசைக்குயில்.
1974 ஆம் ஆண்டில்,
உலக சாதனைகள் பற்றி பதிவுசெய்யப்படும் கின்னஸ்
புத்தகத்திலும் லதா மங்கேஷ்கார் வரலாற்றில்
மிகவும் முக்கிய கலைஞராக பட்டியலிடப்பட்டுள்ளார்.
இந்தியா – சீனா போர் மூண்ட காலப்பகுதியில்,
அந்தப்போரை தவிர்க்கவேண்டியதன் அவசியம் குறித்து 1963
இல் கவிஞர் பிரதீப் இயற்றிய
“ ஏ மேரே வதன் கே லோகோன் “ என்ற பாடலை
லதா ஒரு மேடையில் பாடினார். அதனை அந்த சபையில் கேட்டுக்கொண்டிருந்த அன்றைய பாரதப்பிரதமர்
ஜவஹர்லால் நேரு கண்ணீர் சிந்தியதாக அக்காலப்பகுதியில்
செய்திகள் வெளியாகின.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும்,
அவர் மேடைக்குப்பின்புறம் சென்று காப்பி அருந்திக்கொண்டிருந்த லதாவை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் மராத்திய மாநிலத்தில் தீனநாத் – ஷெவாந்தி தம்பதியரின் மூத்த புதல்வியாக 1929 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் "ஹேமா" – தந்தையின் பாவ்பந்தன் என்ற நாடகத்தில் லத்திகா என்ற பாத்திரத்தில் நடித்து பாராட்டுப்பெற்றவர். அதனால், அவர் அன்று முதல் லதா என்றே அழைக்கப்படலானார்.
தேரா மன்னனை தெருவுக்கு இழுக்கும் தீர்மானம் - ஆர். பாலகிருஷ்ணன்.
.
பிடித்தால்
ஸ்வீட் சிக்ஸ்டி 3 - பட்டினத்தார் - - ச சுந்தரதாஸ்
.
உச்ச நடிகர்கள் பலரின் நட்பு அவருக்கிருந்த போதிலும் தனது சொந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்தது பிரபல பின்னணிப் பாடகர் டி எம் சௌந்தரராஜனை ஆகும்.மிகவும் பிஸியான பாடகராக திகழ்ந்து கொண்டிருந்த டீ எம் எஸ் , ராமநாதன் மீது கொண்ட மதிப்பின் காரணமாக நடிகராக அவதாரம் எடுத்தார். கதாநாயகனாக டீ எம் எஸ்ஸை ஒப்பந்தம் செய்த ராமநாதன் அடுத்து ஒப்பந்தம் செய்தது நடிகவேள் எம் ஆர் ராதாவை ஆகும்.அவரின் சிபாரிசில் அன்று துணை நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த ஜெமினி சந்திரா கதாநாயகி ஆனார்.இவர்களுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்,சி கே சரஸ்வதி ,எஸ் ராமராவ்,எஸ் டி சுப்புலட்சுமி ஆகியோரும் நடித்தனர்.இவர்களுடன் பிற்காலத்தில் பிரபல குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்த ஒருவரும் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.அவர் தான் மேஜர் சுந்தரராஜன்.இப்படத்தில் சோழ மன்னனாக அவர் நடித்திருந்தார்.
மிகுந்த சிக்கனமான முறையில் படம் தயாரானது.பட்டினத்தார் கதை என்பதால் அவ் வேடம் தாங்கிய டீ எம் எஸ்ஸுக்கு படத்தின் பெரும் பகுதி ஒரு வேட்டி மட்டுமே ஆடையானது.படத்தின் வசனத்தை பிரபல நாவலாசிரியர் அகிலன் எழுதியிருந்தார்.நகைச்சுவை பகுதியை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.பட்டினத்தார் பாடல்களுடன் படத்துக்காக மேலும் சில கவிஞர்களின் பாடல்களும் சேர்க்கப் பட்டன.ஒளிப்பதிவை சுந்தரபாபு ஏற்றிருந்தார்.
தன்னையே மறந்து கண்ணையே கொடுத்த கண்ணப்பர் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அந்த
மொழிகளில் எங்கள் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கெல்லாம் இல்லாத ஒரு பெருமையை எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. எல்லா மொழிகழுமே இலக்கியத்தைக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியத்தால் அந்த மொழிகளும் பெருமையினையும் பெற்றிருக்கின்றது. அப்படிப் பெருமையி னைப் பெற்றாலும் , தமிழ் பெறும் பெரு மைக்கு ஈடாக முடியாது என்பதுதான் கவனத்துக்குரியதாகும். ஏனைய மொழிகளைவிட தமிழ் மொழி அப்படி என் னதான் முக்கியத்துவத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்று அறிந் தி டும் ஆவல் ஏற்படுகிறதல்லவா ? அதுதான் " பக்தி இலக்கியம் " ஆகும். பக்தி க்கு என்று இலக்கியங்கண்ட உலகின் ஒரே மொழி எங்கள் தமிழ்மொழி மட்டுமேயாகும்.
இலக்கியம் என்றால் ஒரு இலக்கை நோக்கி அழைத்துச்
செல்லுவது என்று தான் அறிஞர்கள் சொல்லு வார்கள். இலக்கியம் என்னும் பொழுது அதில் பக்தி யினைப் புகுத்த வேண்டும் என்னும் சிந்தனை புதியதோர் சிந்தனை என்றுதான் கொள்ளல் வேண்டும். அதனைத் தமிழ் சமூகத்தார் செய்திருக்கிறா ர்கள் என்பதிலிருந்து அவர்களின் மனப்போக்குப் புலப்பட்டு நிற்கிறதல்லவா. சுவைத்துப் படிக்கும் இலக்கியத்திலும் பக்தியானது இருக்க வேண்டும் என்னும் கருவா னது மிகவும் உன்னதமான ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியதேயாகும். எப்ப டியும் வாழலாம் என்று வாழும் வாழ்க்கையைவிட இப்படித்தான் வாழ வேண் டும் என்று வாழுதல்தான் சிறந்த வாழ்வாகும். அப்படி வாழும் வாழ்வினைத் தான் " வையத் துள் வாழ்வாங்கு வாழுதல் " என்கின்றோம்.அப்படி வாழ்வதற்கு உரிய வழியினைக் காட்டிடக் கைகொ டுத்து நிற்கும் நிலையில் முகிழ்த்ததுதான் பக்தி இலக்கியம் என்னும் புதுக்கரு என்று கூட எடுத்துக் கொள் ளலாம் அல்லவா !
தரைமேல் பிறந்தவர்களை கண்ணீரில் குளிக்கவைக்கும் கடல் எல்லைப் பிரச்சினை அவதானி
“ உலகத்தின் தூக்கம் கலையாதோ
இந்த பாடல் வரிகள் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அரை நூற்றாண்டுக்கு முன்னர் பட்டி தொட்டி எங்கும் கடலோரக் கிரமங்களிலும் ஒலித்த பிரபல்யமான திரைப்படப் பாடல்.
எம்.ஜி.ஆர் . நடித்த
படகோட்டி ( 1964 ) திரைப்படத்திற்காக கவிஞர் வாலி
இயற்றி, ரி. எம். சௌந்தரராஜன் பாடி, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – இராமமூர்த்தி
இசையமைத்த பாடல்.
எப்பொழுதும் தன்னை
ஏழைப் பங்காளனாகவே திரையில் காண்பிக்கும் மக்கள் திலகத்திற்கு பெரும் புகழைத்
தேடித்தந்த மற்றும் ஒரு படம். பாடல்.
மக்கள் திலகமும் உழைக்கும் வர்க்கத்தின் துயரத்துக்கு அபிநயம்
காண்பித்து, தமிழக முதல்வராகவும் பதவி வகித்துவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
இந்தியாவிலும்,
இலங்கையிலும் தமிழகத்திலும் அதிகாரங்கள் போதியளவு இல்லாத வடமாகாண சபையிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
ஆனால், தாய் நாடு –
சேய்நாடு என்று காலம் காலமாக பேசப்படும் இரண்டு நாடுகளையும் பிரிக்கும் கடல்
பரப்பில் நீடித்திருக்கும் உழைக்கும்
வர்க்கத்தின் வாழ்வாதாரப்பிரச்சினை உட்பட தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு
இன்னமும் நிரந்தரத்தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து
இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் மீன்பிடிக்கவரும் இந்திய ( தமிழக ) மீனவர்கள் எல்லை கடந்து வந்து, இலங்கைக்கு
சொந்தமான கடல்பரப்பில் ட்ரோலர் படகுகள் மூலம் கடல்வளங்களை
அள்ளிச்சென்றுவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
அதேசமயம், தமக்கும் இக்கடலில் மீன் பிடிக்க உரிமையிருக்கிறது என்று தமிழக மீனவர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி போராட்டம் நடத்துகின்றனர்.
கற்பதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பது ]
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
பனங்கிழங்கினைப் பச்சையாகவும் சாப்பிடலாம். அவித்தும்
சாப்பிடலாம். நெருப்பில் தோலுடன் சுட்டும் சாப்பிடலாம். ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையான சுவையினைத்தந்தே நிற்கும் என்பதுதான் இங்கு முக்கியமாகு ம். நெருப்பில் சுட்டுச் சாப்பிடும் பொழுது காணப்படுகின்ற சுவை ஒரு தனிச்சுவைதான். நகரத்தாருக்கு இந்த அனுபவம் என்பது புதிதாகவே இரு க்கும். பனைகள் சூழ்ந்து காணப்படும் கிராமங் களில் இருக்கின்றவர்கள் தங் கள் வீட்டு பனம்பாத்தியிலே பிடுங்கிய கிழங்கை அங்கேயே உடனே நெரி ப்பு மூட்டிச் சுட்டுச் சாப்பிடுவதில் பேரானந்தமே அடைந்து விடுவார்கள்.பனம்பாத்தியிலே கிழங்கைப் பிடுங்கி அருகிலேயே நெருப்பை மூட்டி அதில் கிழங்கினைச் சுட்டுச் சாப்பிட்டமை இன்றும் என் மனதில் பதிந்துபோய் இருக்கிறது. அது ஒரு ஆனந்தமானகாலம்.அந்தக்காலத்தை எண்ணிப் பார்ப் பதே ஒரு தனிச்சுகந்தான்.
பனங்கிழங்கினைக் காத்துநிற்கும் தோலினை அகற்றி அதனை
நன்றாக நீரில் கழுவி மண்பானையிலோ அல்லது அலுமினியம் பானையிலோ நீரைவிட்டு அதில் கழுவிய பனங்கிழங்கினை வைத்து அவிப்பது வழக் கமாகும். இப்ப்படி அவித்த பனக்கிழங்கை யாவரும் விருப்பதுடன் சாப்பி டுவதும் நடைமுறையான ஒரு பழக்கமாகவே இருக்கிறது.அவித்த கிழங் கினைச் சிறு சிறு துண்டுகளாக்கி அதனுடன் , மிளகு, அல்லது பச்சைமிள காய், தேங்காய்த் துருவல், உப்பு , ஆகியவற்றைச் சேர்த்து உரலில் துவைத்து அதனைக் கைகளால் உருண்டையாகப் பிடித்து வீட்டிலிருக்கின்ற வர்கள் சுவைத்துச் சாப்பிடுவார்கள்,பல வீடுகளில் ஒருவேளை உணவா கவே இந்தப் பங்கிழங்குத் துவையல் இருந்திருக்கிறது. சிறிய வயதில் எங் கள் அம்மா இப்படித் துவைத்த துவையலை உருட்டித்தர அதனை ஆசையாகச் சாப்பிட்டு விட்டு பாடசா லைக்கு போனது மனதில் அப்படியே பதிந்து போயிருக்கிறது, பனங்கி
ஜெய்பீம் ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை!
.
இலங்கைச் செய்திகள்
புஷ்பிகா டி சில்வாவின் அழகு ராணி பட்டம் நீக்கம்
இந்திய பிரதமர் மோடி மார்ச்சில் இலங்கை விஜயம்
இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையில் ஏலம்; இந்திய உயர் ஸ்தானிகராலயம் பதில்
TNA தனிநாட்டை கோரி நிற்கவில்லை!
கொள்கலன்களை உடன் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
புஷ்பிகா டி சில்வாவின் அழகு ராணி பட்டம் நீக்கம்
- பல்வேறு சர்ச்சைகள், செயற்பாடுகள் காரணமாக நடவடிக்கை: ஏற்பாட்டாளர் விளக்கம்
இலங்கையின் தற்போதைய திருமதி அழகு ராணியான (Mrs. Sri Lanka) புஷ்பிகா டி சில்வாவின் பட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டின் இலங்கையின் திருமதி அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட குறித்த பட்டத்தை நீக்குவதாக, Mrs. Sri Lanka for Mrs. World அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.