மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
கார்த்திகையில் தீபமேற்றி கடவுளருள் பெறுவோமே !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 68 ஊடக வாழ்வில் கற்றதும் பெற்றதும் ! சமூகம் குறித்து எழுத்தாளருக்கான தெரிவு எது..? முருகபூபதி
செய்தி ஊடகங்களில் நேர்காணல்கள் பிரதானமானவை. எனது ஊடக வாழ்வில் இதற்கான பயிற்சியை முதலில் எனக்குத் தந்தது மல்லிகை
இதழ்தான்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, அதற்கு களம் வழங்கி பலரையும் ஊக்குவித்தார். அதற்கு அவரது மல்லிகை முகப்பின் அட்டைப்பட அதிதி
சார்ந்த கட்டுரைகள், நேர்காணல்கள் சிறந்த உதாரணம்.
நூறுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள்,
ஊடகவியலாளர்கள், சமூகப்பணியாளர்களை மல்லிகை அவ்வாறு தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
நினைவூட்டியிருக்கிறது.
புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் எஸ். ஏ. விக்கரமசிங்கா,
தமிழக எழுத்தாளர் அசோகமித்திரன், மற்றும் வண. ரத்னவன்ஸ தேரோ ஆகியோரை மல்லிகைக்காக நேருக்கு
நேர் சந்தித்து பேட்டி கண்டு எழுதியிருக்கின்றேன்.
அத்துடன் இலங்கை வானொலியில்
கலைக்கோலம் நிகழ்ச்சியை தொகுத்தளிக்க சந்தர்ப்பம் கிடைத்தவேளையிலும் சில கலை, இலக்கியவாதிகளை கலையகத்திற்கு அழைத்து பேட்டி
கண்டுள்ளேன்.
வீரகேசரியிலும் எனக்கு ஆசிரியபீடத்தில் அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அத்துடன் நான் எழுதிய நேர்காணல்களுக்காக சன்மானங்களும் பெற்றேன்.
படித்தோம் சொல்கின்றோம்: ஞானம் 258 ஆவது இதழ் சிறுகதைகள் நினைவுகளுக்கு மரணமில்லை என்பதை உணர்த்தும் கதைகள் ! முருகபூபதி
“மனிதனின் நினைவாற்றல் மகத்தான சிறப்புமிக்கது. நினைவாற்றல் என்பது முடிவற்றது. அது அப்படித்தான். எப்படிப் பார்த்தாலும் நினைவாற்றலுக்கு இணையான இன்னொரு பண்பை மனிதனிடம் என்னால் இனங்காண முடியவில்லை.
நினைவாற்றல் என்பது மிகக் கடுமையான நீதிபதி. அதுவே நம் மனச்சாட்சி - நம்மோடு எப்போதும் உடனிருக்கும் நண்பன் - நம்மைப் பாதுகாக்கிற தாய் - நம்மைப் பெருமைப்படுத்துகிற தந்தை எல்லாம் நினைவாற்றல்தான் “ இவ்வாறு ஜெயகாந்தன் எழுதிய நட்பில் பூத்த மலர்கள் என்ற நூலில் சோவியத் இலக்கிய அறிஞர் கலாநிதி விதாலி ஃபுர்ணிக்கா சொல்லியிருப்பார்.
அந்த நூல் அவரது டயறிக்குறிப்பு. அந்தக்குறிப்புகளை
வைத்துக்கொண்டே ஜெயகாந்தன் அந்த நூலை எழுதினார்.
ஞானம் 258 ஆவது இதழில் வெளிவந்துள்ள சிறுகதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது ஃபுர்ணிக்கா குறிப்பிட்ட நினைவாற்றல்தான் எனது மனதில் இழையோடியது.
ஞானம் 258 ஆவது இதழில் இடம்பெற்றிருக்கும் டென்மார்க் ஜீவகுமாரனின் கிணற்றடி, நெடுந்தீவு மகேஷின் என்னை மன்னிப்பாயா..? கனடா ஶ்ரீரஞ்சனியின் யாருளர் என்றில்லை, தமிழ்நாடு ஏ. ஏ. ஹெச். கே. கோரியின் இடைவெளியில்லாத தலைமுறை, நிலவூர் சித்திரவேலின் மணியாச்சியின் மனப்பக்குவம் முதலான இந்த ஐந்து கதைகளிலும் விரவியிருப்பதும் இழையேடியிருப்பதும் கடந்த கால நினைவுகள்தான்.
ஈழத்து நாடக உலகப் பேராளுமை குழந்தை மா.சண்முகலிங்கம் - அகவை 90
ஈழத்தில் எண்பதுகளின் வாழ்வியலில் இருந்தவர்களுக்கு “மண் சுமந்த மேனியர்” ஓர் அழியா நினைவுச் சித்திரமாக மனதில் இன்னும் இருக்கும், எனக்கும் அவ்விதமே. எங்கள் இணுவில் அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கூடத்தின் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் எல்லாரும் அந்த இரண்டாம் மாடிக் கட்டடத்தின் தரையில் இருந்து வியப்போடு அந்தப் புதியதொரு நாடக அனுபவத்தையும், கவிதா நிகழ்வையும் கண்டது மறக்க முடியாது.
அதுவரை மரபு ரீதியான நாடக மேடைகளையும், தெருக்கூத்துகளையும் கண்டிருந்த நம்மவர்க்கு “மண் சுமந்த மேனியர்” வழி கிடைத்த புதுமையானதொரு போர்க்கால நாடக இலக்கியம் என்பது இன்று வரை ஈழத்து நாடக மரபில் மக்கள் மயப்படுத்தப்பட்டதொரு படைப்பாகக் கொண்டாடும் திறன் வாய்ந்தது.
தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும் ! [ தேடல் மூன்று ]
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
உவமைநயம் மிக்க நல்லதொரு பாடலைக் குண்டலகேசியில் பார்க்கிறோம்.உவமையினைக் காட்டிட அமைந்தாலும் அங்கும் தத்துவமே முன்னிற்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.
வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்ல்லாத்
தூயவனை நோக்கியுள துப்பரவும் எல்லாம்.
காற்றை நம்பியே ஓடம் செல்லுகிறது.ஊழ்வினையின் வழியே
ஐம்பெரும் காப்பிய வரிசையில் இடம் பெறும் வளையாபதி ஒன்பதாம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்னும் கருத்து இலக்கிய அறிஞரிடையே காணப்படுகிறது.அதேவேளைஇதனை வள்ளு வத்தின் பின் வந்ததென்றும் அறிஞர்கள் சிலர் சொல்லுகிறார்கள். வள்ளுவத்தின் சில பாடல்களை எடுத்தாளும் தன்மையினை வளையாபதி கொண்டு இருப்பதால் இப்படிக் கூறும் நிலையும் வந்திருக்கலாமோ என்றுகூடக் கருதிட முடிகிறதல்லவா ?
இது சமணம் சார்ந்தது என்னும் கருத்து இருக்கிறது. அதேவேளை இதில்வரும் நாயகன் சைவமத த்தவனாய் இருப்பதால் - சமணம் சார்ந்தது என்று எடுப்பது பொருந்துமா என்னும் நிலையும் அறிஞரிடையே காணப் படுகிறது. ஆனால் வளையாபதியின் பாடல்களில் காணப்படும் கருத்து க்களை நோக்கும் பொழுது சமணச் சார்ப்பான தன்மையே பெரிதும் இருப்பதும் தெரிய வருகிறது.
“ இலக்கியப்பணி, அஞ்சலோட்டத்திற்கு ஒப்பானது “ “ முகநூலினால் இழந்த நட்புகள் பற்றிய சுயவிமர்சனம் தேவை “ எழுத்தாளர் முருகபூபதியுடன் நேர்காணல் உரையாடல் : ஜீவா சதாசிவம்
முருகபூபதி, இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர்.
தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளர்கள் - அறிஞர்கள் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான், தொ.மு. சிதம்பர ரகுநாதன் ஆகியோரின் உறவு முறையில் அவர்களின் பேரன் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
1972 இல் 'கனவுகள் ஆயிரம்' என்ற சிறுகதை
மூலமாக மல்லிகை இதழில் அறிமுகமானார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான சுமையின் பங்காளிகள் 1974 இல் வெளியானது. இந்நூலுக்கு இலங்கை தேசிய சாகித்திய விருது 1975 இல் கிடைத்தது.
நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும் இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின்
செயலாளராகவும் பணியாற்றியவர்.1982 இல் இலங்கையில் பாரதி நூற்றாண்டு
கொண்டாடப்பட்டபோது, அதன் அமைப்புக்குழுவில் இயங்கியவர்.
இவற்றில் பறவைகள் நாவலுக்கு 2003 இல் இலங்கையில் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.
கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினேழு]
பனந்தும்பினை ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்று நோக்கும்
பொழுது - ஒரு காலத்தில் இலங்கை முன்னிடம் வகித்ததாயும் , குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டமே இடம்பெற்றதாயும் அறியமுடிகிறது. பனந்தும்பினை உலகினுக்கு அறிமுகப் படுத்தியவர்கள் என்னும் பெருமையினை யாழ்ப்பாணத்தவரும் , யாழ்பாண மாவட்டமுமே பெற்றிருந்தது என்று அறியும் பொழுது பெருமைப்பட வைக்கிறதல்லவா ! வெளிநாடுகளுக்கான பனந்தும்பானது - பருத்தித்துறை, வங்காலை ,வல்வெட்டித்துறை , கொ
ஆகியது என்பது மகிழ்ச்சிக்கு உரிய விடயமல்ல. இலங்கையின் பின்னடைவு - இந்தியாவை உற்சாகப் படுத் திவிட்டது. இன்று இலங்கையைவிட , இந்தியாதான் பனந்தும்பு உற்பத்தியிலும் , ஏற்றுமதியிலும் முன் னிற்கிறது என்பது நோக்கத்தக்கதாகும்.ஆனாலும் இலங்கையும்- தளர்ந்துவிடாது பனந் தும்பினை உற் பத்தி செய்தபடியேதான் இருக்கிறது.ஏற்றுமதியிலும் கவனத்தைச் செலுத்தியும் வருகிறது.பனந்தும்புத் தொழிற்சாலைகளை நிறுவியும் பராமரித்தும் வரும்பணியில் - பனை அபிவிருத்திச்சபையானது தன்னால் இயன்றவரை முயற்சிப் பாதையில் பயணித்து வருகிறது என்பதையும் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.பனை அபிவிருத்திச் சபையினை அலங்கரிக்கும் அதிகாரிகளும் , அதன் அலுவலர்களும் - பனைபற்றிய நல்ல சிந்தனையில் இருக்கிறார்கள் என்பது நோக்கத்தக்கதேயாகும்.பனந்தும்பா
இரட்டைக் குடியுரிமையை துறந்தவரின் ஈராண்டு ஆட்சிக்காலம் ! காலிமுகத்திடல் சொல்லும் கதைகள் ! அவதானி
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஈராண்டும் கடந்து ஏழு மாதங்களாகிவிட்டதென்றால், பொதுஜன பெரமுனையின் அதிபர் வேட்பாளர் அதிமேதகு கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்று இம்மாதத்துடன் இரண்டு வருடங்களாகிவிட்டன.
எனினும் குறிப்பிட்ட ஈஸ்டர்
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களினதும் குடும்பங்களுக்கும்
படு காயமடைந்தவர்களுக்கும் இதுவரையில் நீதி
கிடைக்கவில்லை.
2019 ஆம் ஆண்டு ஏப்ரில்
மாதம் குறிப்பிட்ட ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும்
ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகவும் பதவியிலிருந்தனர்.
மைத்திரி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும், ரணில் ஐக்கிய
தேசியக்கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்தவர்கள்.
ஈஸ்டர் சம்பவத்தினால்,
அதனை தடுத்திருக்கவேண்டிய அந்த சுட்டமண் – பச்சை மண் நல்லிணக்க அரசு, மீண்டும் பதவிக்கு
வரமுடியவில்லை.
யாரை ஜனாதிபதி வேட்பாளராக
அறிவிப்பது என்பதில் ரணிலுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் மத்தியிலிருந்த இழுபறிநிலையில்
மைத்திரி தனது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவை, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு காண்பித்தார்.
இறுதியில் கடந்த 2019 ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி
தேர்தலில், தனது அமெரிக்க இரட்டைக்குடியுரிமையை துறந்துவிட்டு வந்த, கோத்தபாய ராஜபக்ஷ
சுமார் 69 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
அவர் தன்னை எதிர்த்து ஐக்கிய
தேசியக்கட்சியிலிருந்து ரணிலின் புறக்கணிப்போடு
போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விட 13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்று
வெற்றியடைந்தார். அதே 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்
நடந்த நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனமும்
பெறாமல் படுதோல்வியடைந்தது. ரணிலும் காலம்
கடந்து அவரது கட்சிக்கு கிடைத்த வாக்குகளின்
அடிப்படையில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பின்கதவால் வந்தார்.
சஜித் ஐக்கிய மக்கள் சக்தி என்ற அமைப்பை கட்டி வளர்த்து, எதிர்க்கட்சித் தலைவரானார்.
இலங்கைச் செய்திகள்
அமெரிக்காவில் சுமந்திரன் குழு கலந்துரையாடல்களில்
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு
‘Homes not Houses’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கையளிப்பு
இந்தியாவில் தங்கியிருப்போருக்கு மீள்குடியேற்ற ஏற்பாடுகள் துரிதம்
பொலிஸார் தாக்கியே பலியானதாக பாராளுமன்றில் நேற்று ஆர்ப்பாட்டம்
நாவலர் பெருமானின் சிலை திறப்பு
அமெரிக்காவில் சுமந்திரன் குழு கலந்துரையாடல்களில்
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் உலக தமிழ்ப் பேரவையின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகச் செய்திகள்
இந்தியாவின் தலைமையில் ஐ.நாவுடன் உடன்படிக்கை
எல்லை கடக்கும் குடியேறிகள் மீது போலந்து கண்ணீர் புகை பிரயோகம்
சூச்சி மீது மியன்மார் இராணுவ அரசு புதிய குற்றச்சாட்டு பதிவு
பெலாரஸ் நாட்டுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை
காஷ்மிர் சுற்றுலா துறை ஒருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு
‘நெருப்புடன் விளையாடுவதாக’ பைடனிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை
வளரும் நாடுகளுக்காக கொவிட்-19 மாத்திரை வழங்க பைசர் ஒப்பந்தம்
இந்தியாவின் தலைமையில் ஐ.நாவுடன் உடன்படிக்கை
இந்தியா தலைமையிலான சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா கட்டமைப்பு மாநாடு ஆகியவை கிளாஸ்கோவில் நடந்த சிஓபி26 காலநிலை உச்சிமாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உலகளாவிய முயற்சிகளுக்கு ஏற்ப, தேசிய காலநிலை நடவடிக்கையை செயல்படுத்துவதில் நாடுகளுக்கு ஒத்துழைக்கவும் ஆதரவளிக்கவும் ஒப்புக்கொண்டன.
“இலக்கியவெளி” நடத்தும் “தேவகாந்தனின் நான்கு நூல்கள்: விமர்சன அரங்கு”
நாள்: ஞாயிற்றுக்கிழமை 28-11-2021
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM, Facebook
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
Facebook live:
https://www.facebook.com/
மேலதிக விபரங்களுக்கு: - அகில் - 001416-822-6316