மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..! -- Dr.Fajila Azad

 மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..!

 . Drஃபஜிலா ஆசாத்சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்



எவ்வளவுதான் இன்று முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு எழுந்தாலும்அந்த மகிழ்ச்சிக்கு இடையூறாக ஏதாவது ஒன்று நடக்கிறது அல்லது யாராவது வந்து நிற்கிறார்கள்என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் போதுஏன் எனக்கு மட்டும் மகிழ்ச்சி என்பது எப்போதும் எட்டாக் கனியாகவே இருக்கிறது?.

கலகலன்னு இருக்கிற கடை வீதியிலே ஒரு பத்து பேரை பார்த்து, ”உங்களுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்க விருப்பமாஇல்லை சோகமா இருக்க விருப்பமா” ன்னு சும்மா கேட்டுப் பாருங்க.

    நிச்சயமாவாழ்க்கையிலே யாராவது சோகமா இருக்க விரும்புவாங்களாசந்தோஷமாக இருக்கத் தான் விருப்பம்னு எல்லோரும் சொல்லுவார்கள்நீங்க உடனேஎப்பவும்எல்லோரும் சந்தோஷமா இருக்கிறீங்களான்னு கேட்டுப் பாருங்கள்… உடன் பாதிக்கு மேற்பட்டவர்களின் தலை கவிழ்ந்து விடும்.

நாம எல்லாருமே வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்கனும்னு தான் ஆசைப் படுகிறோம்ஆனாஏன் நம்மாலே எப்பவும் அப்படி இருக்க முடியலை.. ஏன்னாஎன் வாழ்க்கைஎன் மகிழ்ச்சி என்னை மட்டும் சார்ந்தது இல்லைன்னு நாம பிடிவாதமா நம்புகிறோம்நாம் எவ்வளவு தான் சந்தோஷிக்க ஆசைப் பட்டாலும்நம் சுற்றம்நட்புசுற்றுச் சுழல்இப்படி பல விஷயங்கள்நாம் அறிந்தும் அறியாமலும் நம்மை அதது போக்கிலே இழுத்துட்டுப் போக அனுமதித்து விடுகிறோம்.

 

பணம்ஆரோக்யம்வேலைபுகழ்அந்தஸ்துநிம்மதி இப்படி ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் மகிழ்ச்சியைத் தேடிஅலைந்துஒன்றல்ல இரண்டல்ல, “79” சதவீத மக்கள் மகிழ்ச்சியற்றுத் தவிக்கிறார்கள் என்கிறது ஆசியா மாகாணத்தில் நடந்த ஆய்வு ஒன்று.

புரிந்து கொள்ளுங்கள்மகிழ்ச்சி என்பது பலூன் இல்லையார் வேண்டுமானாலும்எது வேண்டுமானாலும் உடைத்து விட்டுப் போகிறதற்குமகிழ்ச்சி என்பது நம்மோடு இயைந்துநம்மை இயக்கிக் கொண்டு எப்போதும் நம் கூடவே இருக்க வேண்டிய நம் முச்சுக் காற்று.

நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்… ஏதாவது தர்ம சங்கடமான விஷயத்தைக் கேட்டாலோதர்ம சங்கடமாய் உணர்ந்தாலோநம்மையுமறியாமல்ஒரு பெரு மூச்சு விடுவோம்அல்லது நாம் முனைந்து அந்த பெரு மூச்சு விடும்போது இலகுவாக உணருவோம்.

இயற்கை நமக்கு மகிழ்ச்சியை மூச்சுக் காற்றாய் தான் வைத்திருக்கிறதுஅதனால் தான் அது குறையும் போதுமூச்சுக்கு திணறுவதாய் நமக்குப் பெரு மூச்சு வருகிறதுநாம கொஞ்சம் தெளிவாக இருந்தால்நம் பார்வை கொஞ்சம் மாறினால்எந்த சூழ்நிலையிலும் நம்மால் மகிழ்ச்சியை விட்டுக் கொடுக்காமல் இருக்க முடியும்இல்லையென்றால்எந்த சூழலாலும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தர இயலாது என்கிறது உளவியல்.

அது ஒரு பெரிய குடும்பம்மாமாமாமிஅத்தைசித்திசித்தப்பாபிள்ளைகள்என குடும்பமே சேர்ந்து கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கலாமே என பல நாள் ப்ளான் பண்ணி அன்று பிக்னிக் போகிறார்கள்.

பூத்துக் குலுங்கும் மலர்களும்வண்டுகள் மொய்க்கும் பழங்களுமாய் அழகிய தோட்டம்பொங்கி வழியும் நீரில் குளித்துசில்லென்ற தென்றலில் குளிர்ந்துதேனருந்தி மகிழும் பட்டாம் பூச்சியாய் முழு நாளும் குதூகலமும்சந்தோஷமுமாக நகர்கிறது.

 விதவிதமான உணவுகள்போட்டிகள்கிண்டல்கேலிஇளசுகளோட பார்வை பறிமாற்றம்என அற்புதமாய்க் கழியும் அந்த நாளோட இறுதியிலேசிறு கல் தடுக்கி ஒரு குழந்தை விழஅது வரை தேடிய மொத்த சந்தோஷமும் அது கூடவே விழுந்து விடுகிறது.

கலகல என்று இருந்த அந்த இடமே சலசலத்துஇறுக்கமாக மாற கனத்த உள்ளத்தோடுஒருத்தரை ஒருத்தர்நிகழ்வுக்கு காரணமாய் கை காட்டஅந்த மொத்த குடும்பமும் தேடி வந்த மகிழ்ச்சியைதொலைத்து விட்டு புதிய கவலையோடு திரும்புகிறது.

இது தான் மகிழ்ச்சி என தேடிப் போன மகிழ்ச்சி அவர்களுக்கு கிடைத்ததாகிடைத்தால் ஏன் அவ்வளவு எளிதில் அதை தொலைத்து விட்டு மகிழ்ச்சியின்றி திரும்புகிறார்கள்?!!!.

மகிழ்ச்சியை மூச்சுக் காற்றாய் நிரப்புவதும்விரல்களை வருடிச் சென்றாலும் கைகளுக்குள் கிட்டாமல் விரலிடுக்கில் நழுவிச் செல்லும் மெல்லிய காற்றாய் விடுவதும் நம் கைகளில் தான் இருக்கிறது.

பொதுவாக மகிழ்ச்சியை ஒரு மூச்சுக் காற்றாய்நம் மனசிலே நாம் தேக்கி வைக்கும் போதுஒரு பற்றோடு வாழ்வோம்நாம் விரும்பியதை செய்வோம்அன்றிமகிழ்ச்சியை ஏதாவது ஒன்றில் தேடும் போதுஅதை நோக்கிய அந்த பயணத்திலேயே சோர்ந்து போய் விடுகிறோம்அல்லது அந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திலே ஏதாவது ஒரு பிரச்னை வந்தாலும்அப்படியே உடைந்து போய் விடுகிறோம்முடிவில் நம்மையே நாம் இழந்தும் விடுகிறோம்.

அந்த சின்னஞ் சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள்அழகான நதிகள்மரங்கள்எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்து வழி கேட்டது. “எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.

ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்று கொடுத்து விட்டு, அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்கஅந்த வழியே வந்த பாம்பிடம் கேட்டது.

பாம்பும், எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன்பதிலுக்கு நீ உன் அழகான சிறகில் ஒன்றைத் தருவாயா?” என்றது. இன்னொரு சிறகுதானேதந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

இப்படியே அந்தக் குருவி, அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாகஅதோ…. கனவில் கண்ட அந்த அழகான உலகம், அதன் கண் முன் தெரிந்தது. வந்து விட்டோம்….. வந்தே விட்டோம்…… இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால்இதென்ன…. ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோஎன் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று திடீரென குருவி கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகளை ஏதோ ஒரு தேடலில், வழி நெடுகிலும் பிய்த்துக் கொடுத்துஎதை இழந்து கொண்டிருக்கிறோம் என்று அறியாமலேஒவ்வொன்றாக சிறுக சிறுக இழந்துஇப்போது பறக்க முடியாமல் முடமாகி போய் விட்டோம் என்ற உண்மை விளங்கியது.

இதோ, கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல், கீழே கிடக்கிறேனே என்று அந்தக் குருவி துடித்ததுஅந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும், அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

மகிழ்ச்சியை தன்னுள் நிரப்பாமல் வெளியே தேடுவதால் ஏற்படும் விளைவைக் குறிக்கும் அற்புதக் கதை இது.

 

இது தான் சந்தோஷம் என்ற ஏதோ தேடலில் உண்மையில் நம்மிடம் இருக்கும் சந்தோஷங்களை  நம்மையுமறியாமலேயே இழந்து கொண்டிருக்கிறோம்…

குடும்பத்துடன் வெளியே செல்வதுபிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவதுபிடித்த புத்தகம் படிப்பதுபிடித்த படம் பார்ப்பதுபிடித்த இடங்களுக்குப் போவதுபிடித்த உடை உடுத்துவதுபிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஏதோ ஒன்றின் தேடலில்ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் நாம் மகிழ்ச்சி என்று தேடிய ஒன்று கிடைக்கும்போது, நரை கூடிதிரை வந்து, உடலும் மனசும் தளர்ந்து, எல்லாம் இருந்தும், அனுபவிக்க முடியாத நிலைக்கு பெரும்பாலும் தள்ளப் படுகிறோம்.

இது இதை செய்தால் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நினைக்காமல்நாம் இயல்பாய் மகிழ்ச்சியாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்வோம்நாம் நல்ல மன நிலையில் மகிழ்ச்சியாக இருக்கும்போதுநாம் எடுக்கும் முடிவுகளும்நல்ல விதமாக நம் எதிர் காலத்தையே மகிழ்ச்சியாக வைக்கக் கூடிய வகையில் அமையும்.

 உண்மையில் சந்தோஷம் என்பது சட்டென்று பற்றிக் கொள்ளும் ஒரு தொற்றுமகிழ்ச்சியாக இருக்கிற ஒருவரால் தான் மற்றவருக்கு மகிழ்ச்சி கொடுக்க முடியும்.

மகிழ்ந்து மகிழ்விப்போம்!!!

No comments: