அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
கிறிஸ்மஸ் குடில் விடுக்கும் அழைப்பு
கிறிஸ்மஸ் குடில் அமைக்கும்போது பெத்லெகேமில் நடந்தவை நம் முன்னே வருகின்றன. உணர்ச்சிகளைக் கிளருகின்றன. நம் மனதைத் தொடுகின்றன. என்னே எளிமை, என்னே ஏழ்மை! தாழ்ச்சியை, ஏழ்மையை, தன்னல மறுப்பை ஏற்க இது நம்மைத் தூண்டுகிறது.
பெத்லெகேமில் இருந்து சிலுவை வரை. நம் சகோதரர்களில் துன்புறுவோர்க்கு இரக்கம் காட்டி இயேசுவைப் பார்க்கவும் அவருக்குப் பணிவிடை செய்யவும் இக்குடில் அழைப்பு விடுக்கிறது. ( மத். 25:31-46 இச்சிறியோரில் ஒருவருக்கு நீங்கள் பணிவிடைச் செய்தபோதெல்லாம் எனக்கே பணிவிடை செய்தீர்கள்.)
பற்றாதே என்கிறது ஞானம் பற்றுவேன் என்கிறது மோகம் !
வெட்டுங்கள் என்கிறது குளம்
தட்டாதே என்கிறது மனம்
தட்டுவேன் என்கிறது குணம்
முட்டாதே என்கிறது மூப்பு
முட்டுவேன் என்கிறது கொழுப்பு
பற்றாதே என்கிறது ஞானம்
பற்றுவேன் என்கிறது மோகம் !
கெடுக்காதே என்கிறது தருமம்
கெடுத்திடு என்கிறது அதர்மம்
நடிக்காதே என்கிறது நட்பு
நடித்திடு என்கிறது துரோகம்
குடிக்காதே என்கிறது சிறப்பு
குடித்திடு என்பது வெறுப்பு
படிக்காதே என்பது இழப்பு
படித்திடு என்பது மதிப்பு !
அப்துல் ஜப்பார் என்ற ஊடக அடையாளம் மறைந்தது
கானா பிரபா
இன்று பெருமதிப்புக்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி கேட்ட போது சக தமிழர்கள் எல்லோரும் தம் டும்பத்தில் ஒரு நெருங்கிய சொந்தத்தை இழந்த சோகத்தில் இருக்கின்றார்கள்.
இணையில்லாத் திருவடியை எளியேனைப் பற்றவிடு !
இலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகம் அங்கம் -03 முருகபூபதி
பேராசிரியர் கைலாசபதியின் அன்றைய தினகரன் பத்திரிகை பணி குறித்து வெளியான ஒரு பதிவை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
இலங்கை தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய அதே சமயம், பொதுவான தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினையும் கவனத்திலெடுத்து செயற்பட்டமை பேராசிரியரின் தனித்துவமான சிறப்புகளில் ஒன்றாகும்.
தேசிய இலக்கிய செல்நெறி காரணமாக ஒவ்வொரு பிரதேசம் சார்ந்த மண்வாசனையும் மக்களின் சமகால பிரச்சினைகளும் இலக்கியத்தின் பாடுபொருள்களாயின. அந்தவகையில் வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்து இலக்கிய படைப்புகளை தினகரன் பத்திரிகையின் ஊடாக வெளிக்கொணர்ந்ததில் பேராசியருக்கு முக்கிய பங்குண்டு.
பேராசிரியர் தினகரன் வாரப் பத்திரிகையில் பிரதம ஆசிரியராக
பதவியேற்ற காலத்தில்
பலதரப்பட்டோரை தன்னோடு இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கினார். தன்னுடன் ஒத்த கருத்துடையவர்களுடன் மாத்திரமின்றி மாறுப்பட்ட கருத்துக் கொண்டவர்களும் தினகரனில் எழுதுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தார்.
செ. கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், அ.ந. கந்தசாமி. சுபைர் இளங்கீரன், என்.எஸ்.எம். இராமையா, சி.வி. வேலுப்பிள்ளை, வரதர், வ.அ. இராசரத்தினம், நந்தி, கனக. செந்திநாதன், சிற்பி சரவணபவன், தேவன், அ. முத்துலிங்கம், , என். கே. ரகுநாதன், கே.டானியல், எஸ். பொன்னுதுரை, டொமினிக் ஜீவா, பெனடிக்ற்பாலன், நீர்வை பென்னையன், ஏ. இக்பால், முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சி.வி. வேலுப்பிள்ளையின் வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், பார்வதி, முதலியன தொடர்கதையாக வெளிவந்தன. இது தொடர்பில் பேராசிரியர் சி.தில்லைநாதன் பின் வருமாறு கூறுகின்றார்.
இருளில் இருந்து மக்களுக்கு பேரொளி
இயேசுவின் பிறப்பு இருளில் இருந்த மக்களுக்கு பேரொளி. மரணத்தின் நிழல் சூழ்ந்துள்ள மக்களுக்கு உயிர்ப்பின் ஒளி. அமைதியற்ற மக்களுக்கு அமைதியின் தூதுவனாக பிறந்தவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
இறைசாயலிலே படைக்கப்பட்ட மனுக்குலம் தீமையின் பிடிக்குள்ளும் கொடிய நோய்க்குள்ளும் ஆட்கொள்ளப்பட்டு துன்புற்ற போது, தீமையும் கொடுங்கோன்மையும் தலைவிரித்தாடிய போது அதிலிருந்து மனுக்குலத்தினை விடுவிக்க கடவுள் மனிதனாக வந்த அதி உன்னத நிகழ்வே கிறிஸ்து பிறப்பு.
கடவுள் மானிடரை தேடி வந்து மனிடராக பிறந்து தன்னை முழுதுமாக தியாகம் செய்து மனுக்குலத்தை தீமையின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான தியாகத் திருநாளாகவும் கிறிஸ்மஸ் திகழ்கிறது.
உலகில் பதியும் ஒரு குழந்தையின் பிஞ்சுப் பாதம்
உலகெங்கும் உள்ள மக்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ந்து கொண்டாடும் நத்தார் பண்டிகை இன்றாகும். இரண்டாயிரத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெத்லகேம் மாடடைக் குடிலில், ஒரு குளிர் இரவில் தன் பிஞ்சுப் பாதங்களைப் பதித்த குழந்தை இன்றும் உலக மக்களுக்கு அன்பையும் அமைதியையும் சமாதானத்தையும் நினைவுபடுத்துகின்றது.
'நாமெல்லாம் செல்வந்தர்கள்'. 'அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்' (2கொரி 8:9).
இறைவனின் பாதப் பதிவுகள் மனுக்குலத்திற்குச் சொந்தமான நாள் இந்நாள். காலங்களையெல்லாம் கடந்த கடவுள் மனித நேயத்திற்குள் நுழைந்த இரவு இன்றைய இரவு. பெயர்களையெல்லாம் கடந்த இறைவன் இம்மானுவேல், இயேசு என்று பெயர் பெற்ற நாள் இந்த நாள்.
பெரும்பொருளை நினைக்கவைக்கும் பீடுடைய மார்கழி !
மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி -
மக்களின் துன்பங்கள் நீங்குவதற்கு உலக இரட்சகரைப் பிரார்த்திப்போம்
கிறிஸ்தவ மக்கள் உலக இரட்சகரான இயேசு நாதரின் பிறப்பின் திருநாளான 'நத்தார் பெருநாளை' இன்று அமைதியுடன் கொண்டாடுகின்றனர். வழமையாக இந்த மார்கழி மாதம் மகிழ்ச்சியின் மாதமாகும். ஆனால் இன்று உலகெங்கிலும் மகிழ்ச்சி, மனஅமைதி இல்லை. கொரோனா காரணமாக மக்கள் பயத்துடன் வாழ்கின்றனர்.
கிறிஸ்தவ பழைய ஏற்பாடு வரலாற்றின்படி உலகைப் படைத்த இறைவன் ஆறு நாட்களில் நிலம்,நீர், புல் பூண்டு, செடிகொடி, பிராணிகள், நிலத்தில் ஊர்வன வகைகளை படைத்து ஆறாம் நாளன்று இவற்றை அனுபவிக்க ஆதாம்-ஏவாள் என்ற ஆண்-பெண் இருவரையும் படைத்து ஏழாவது நாளான ஞாயிறு ஓய்வாக இருந்தார்.
அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 46 – கின்னரம்/கின்னாரம் – சரவண பிரபு ராமமூர்த்தி கின்னரம்/கின்னாரம் – நரம்புக்கருவி
கின்னாரம் ஒரு பழந்தமிழர் இசைக்கருவி. திருமுறைகளில்
கின்னாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. கின்னாரம் முற்றிலும் தமிழ்நாட்டில் இருந்து அழிந்து விட்டது என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் கின்னாரம் இன்னும் அழியவில்லை என்று இன்ப அதிர்சி கொடுத்தார் வரலாற்று ஆய்வாளர் பல்லடம் திரு க. பொன்னுசாமி அவர்கள். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நந்தவனப்பகுதியில் வசிக்கும் திரு அருணாச்சலம் அவர்களிடம் இந்த கின்னாரம் இசைக்கருவி இருப்பதாகச் சொன்னார். அதைப் பற்றிய தகவல்களை நம்முடன் பகிர்ந்தார்.
திரு அருணாச்சலம் அவர்கள் கூறுகையில் ”இந்த கின்னாரம் செய்ய கின்னார சுரைக்காயத்தான் பயன்படுத்துவோம். கூட ஓடை மூங்கிலு. தலமுறை
தலமுறையா எங்க குடிசை ஓரத்துல கின்னார சுரையைப் பயிரிடுவோம். அந்த சுரையை வச்சுதான் புதுசா கின்னாரம் செய்வோம்." கின்னாரம் ஒரு நரம்பிசைக்கருவி. ஒற்றை நரம்பு இருக்கும். கின்னார சுரைக்காயின் உட்புற சோற்றை நீக்கி நன்கு உலர்த்தி, ஒடை மூங்கில் எனப்படும் மூங்கில் கட்டையுடன் பொறுத்தி, நரம்பு சேர்த்து கட்ட கின்னாரம் இசைக்கருவி தயார். இது அமைப்பில் துந்தினா என்கிற வட இந்திய இசைக்கருவியை ஒத்து இருக்கும்.
இலங்கைச் செய்திகள்
கொரோனா மரணம்: உடலை எரிப்பதற்கு காலி மேலதிக நீதவான் தடை உத்தரவு
டிசம்பர் 26 முதல் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரும் நடைமுறையில் மாற்றம்
நாட்டுக்கு வருதல் பழைய நடைமுறையிலேயே
பிரித்தானிய விமானங்களுக்கு அதிகாலை முதல் தடை
கட்டுநாயக்க விமான நிலையம் இன்று திறப்பு
ஜனாஸா எரிப்பு: தனது செயற்பாடுகளை விளக்குகிறது ஜம்இய்யத்துல் உலமா
கொரோனா மரணம்: உடலை எரிப்பதற்கு காலி மேலதிக நீதவான் தடை உத்தரவு
உலகச் செய்திகள்
பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காது பரவல்
அரசியல் இழுபறிக்கு மத்தியில் நேபாள பாராளுமன்றம் கலைப்பு
அமெரிக்காவில் 9 மில்லியன் தடுப்பு மருந்துகள் விநியோகம்
தஞ்சக் கோரிக்கையாளர் படகு மூழ்கி 20 பேர் பலி
புதிய வகை கொரோனா ஜேர்மனியிலும் அடையாளம்
பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காது பரவல்
ஐரோப்பாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகைக் கொவிட்–19 நோய் நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக சுகாதார அமைச்சர் மாட் ஹான்கொக் எச்சரித்துள்ளார்.
தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கும் வரை நேற்று விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்றார் அவர்.
எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 21 நந்திவாக்கியம்: சொல்லச்சொல்ல சோதிடம் எழுதி கிடைத்த சன்மானம் ! அரசியல் அதிகாரம் படைத்தவர்களும் மந்திரித்த நூலுக்குள்ளே அடக்கம் !! முருகபூபதி
எனது எழுத்துலகப்பிரவேசத்தின் தொடக்க காலப்பகுதியிலிருந்து 1977 ஆம் ஆண்டு நடந்த கலவரம் வரையில் இலங்கையில் பல அரசியல், பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்தன.
1965 இல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரஸும் வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதும், 1970 மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் லங்கா சமசமாஜக்கட்சி, மற்றும் மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்திருந்தது.
அதனையடுத்து நிதியமைச்சரான கலாநிதி என். எம். பெரேரா இரவோடு இரவாக புழக்கத்திலிருந்த ஐம்பது ரூபா, நூறுரூபா நாணயத்தாள்களை இரத்துச்செய்துவிட்டு, புதிய நாணயத்தாள்களை
அறிமுகப்படுத்தினார்.
நானும் அப்பாவுடன் சென்று அவர் கைவசம் இருந்த பழைய தாள்களை மாற்றுவதற்கு வங்கிகளின் முன்னால் அதிகாலையே வரிசையிலும் நின்றிருக்கின்றேன். அப்பாவிடம் இருந்ததோ இருநூறு ரூபாதான். ஒருவரால் அந்தத் தொகையை மாற்றமுடியாதுபோகலாம் என்பதற்காக ஒரு தாளை நானும் மற்றும் ஒரு தாளை அவரும் மாற்றுவதற்காக என்னையும் அழைத்துச்சென்றார்.
இவ்வாறு நீண்ட வரிசையில் நின்று மக்கள் தமது தேவைகளை மேற்கொள்ளவேண்டிய நடைமுறையை அன்றைய அம்மையாரின் கூட்டரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
பின்னாளில் அதே அரசில்தான் மக்கள் பேக்கரி வாசல்களில் பாண் வாங்குவதற்கும் நீண்ட வரிசையில் நின்றனர்.
1970 முதல் 1977 வரையான காலப்பகுதியில்தான் அதுவரையில் பிரித்தானியாவின் ஆளுகைக்குள்ளிருந்த இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு வந்தது. அத்துடன் செனட் சபை ஒழிக்கப்பட்டது. இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் வந்தன.
இது யாழ்பாணமா ?அல்லதுகேரளவா ? அல்லது தமிழ் நாட்டு பொள்ளச்சியா?
வலைந்து ஓடும் நீ நிரம்பிய வாய்க்கால் . அதில் துள்ளி குதிக்கும் மீன்கள் . வாய்க்கால் அருகே பசுமை நிறைந்த வயல்கள் . வாய்க்காலின் இரு பக்கத்திலும் ஓங்கி வளர்ந்த சடைத்த பல வருட வயசு உள்ள மரங்கள் வாய்காலுக்கு அருகே ஒரு கோவிலும். A9 பெரும் பாதையும் அமைந்த தென்மராட்சி சாவகச் சேரியில் உள்ள இல்வாரை பகுதி புதிய சுற்றுலா மையமாக உருமாற்றம் அடைகிறது என்றால் நம்புவீர்களா? ஒரு காலத்தில் யாவகர் தேசத்து மன்னன் சந்திரபானுஆட்சி செய்து யாவகர் வாழ்ந்த இடம் இது .மருவி யாவகர் சேரி சாவகச்சேரி ஆயிற்று மகாவம்சத்தில் ,குறிப் பிட்டப்படி ஜாவானிய ஆட்சியாளரான சந்திரபானுவின் படைகள் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் திருகோமலை ஊடாக உள்ளே நுழைந்தன. மற்றும் அடி குழாய்கள் மற்றும் விஷ அம்புகளைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தை கைப்பற்றி ஆட்சி செய்தான்.
சொடுக்கி பாருங்கள்
அந்தகாரம் திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான படங்களுக்கு வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது OTT யில் வெளிவந்துள்ள படைப்பு அந்தகாரம். இது ரசிகர்களை திருப்திப்படுத்தியதா, பார்ப்போம்.
கதைக்களம்
அர்ஜுன் தாஸிற்கு ஒரு போன் கால் வந்துக்கொண்டே இருக்கிறது. அது அவரை மிகவும் டிஸ்ட்ர்ப் செய்கிறது. அந்த குரல் யார் என்று தேட ஆரம்பிக்கின்றார்.
அதே நேரத்தில் தன் கண் பார்வைக்காகவும், தன் அப்பா வாழ்ந்த வீட்டை காப்பாற்ற போராடுகிறார் வினோத்.இதை காட்டும் அதே நேரத்தில் ஒரு மனநல மருத்துவர் தன் ஒரு பேஷண்டால் தன் குடும்பத்தை இழந்து, மீண்டும் தன் புதிய பேஷண்டுகளை ஏதோ செய்ய முயற்சிக்கிறார்.
இந்த மூன்று விஷயங்களும் ஒரு புள்ளியில் எப்படி சந்திக்கிறது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்..
அர்ஜுன் தாஸ் கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு நல்லா வரவு, தன் கனத்த குரலில் மிரட்டியும், அதே வேளையில் பயந்தும் நடிப்பில் அசத்தியுள்ளார்.
வினோத்தும் கண் தெரியாத இளைஞராக பேய் ஓட்டும் நபராக அவர் செய்யும் விஷயங்கள் நம்மை திகிலடைய செய்கிறது.
டெக்னீக்களாக படம் செம்ம வலுவாக உள்ளது, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்ன அனைத்தும் பிரமாதம்.
இயக்குனருக்கு இன்னும் பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதே வேளையில் எல்லோருக்கும் இது புரியுமா என்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது.
க்ளாப்ஸ்
நடிகர்களின் பங்களிப்பு
டெக்னீக்கள் விஷயங்கள்
கிளைமேக்ஸ் டுவிஸ்ட்
பல்ப்ஸ்
படத்தின் நேரத்தை குறைத்து இருக்கலாம்.
மொத்தத்தில் அந்தகாரம் முழுதிருப்தி சினிமா ரசிகர்களுக்கு.
நன்றி CineUlagam