வண்டமிழ் அறிஞர் வாழ்ந்த நவாலியில்
வரதன் என்னுமோர் வாலிபன் வாழ்ந்தான்
கண்டவர் மதித்திடக் கடமை உணர்வுடன்
கமம்செய விரும்பியோர்; காணியும்; தேடினான்
வாங்க முடிந்ததே பெரிதென நினைத்தான்
முயற்சி என்றும் திருவினை யாக்கும்
முதுமொழி நினைந்து செயற்பட விழைந்தான்
பத்துப் பரப்புக் காணியை அவனும்
பதப்ப டுத்தப் பெரும்பா டுபட்டான்
மெத்தப் பொறுமையாய்ப் பாறைகள் பிழந்து
வேண்டாக் கற்களால் மதில்தனை அமைத்தான்