பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி நினைவில் ஒன்பது ஆண்டுகள் - கானா பிரபா


பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஜூன் 6, 2011 நம்மை விட்டு மறைந்தார். நம் தமிழ்ச் சமூகத்தின் புலமைச் சொத்தான அவரின் பவள விழா ஆண்டில் துறைசார் அறிஞர்களையும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி ஒன்றை 2007 ஆம்  ஆண்டில் செய்திருந்தேன். இந்தப் பணியை அன்று செய்து முடிக்கப் பெரும் உறுதுணையாக இருந்தவர் மறைந்த தமிழ்த்தேசியர், கவிஞர்  கி.பி.அரவிந்தன் அவர்கள். அதிலிருந்து ஒரு பகிர்வு இது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை முதனிலை விரிவுரையாளரும்,கலை கலாசார பீடத்தின் பட்டப்படிப்பின் இணைப்பாளருமான பேராசிரியர் அம்மங்கிளி முருகதாஸ் அவர்கள் வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பியின் கல்விப்புலமைப் பயணத்தைப் பற்றிப் பேசுகின்றார்.


தொடர்ந்து பிரபல எழுத்தாளர்விமர்சகர்கலைஞர் திரு இரவி அருணாசலம் அவர்கள் தனது குருவுக்கும் தனக்கும் இடையிலான ஆசிரிய மாணவ உறவைக் கடந்த அனுபவங்களைப் பகிர்கின்றார்.

அடுத்து " தமிழ் கலை இலக்கியப் பரப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் இடம்" குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் பகிர்வு.




No comments: