சிட்னி ஸ்ரீ துர்க்கா திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் 31/07/2020



விரதம் இருக்கும் முறை:
ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக் கிழமை அன்று, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.  எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31/07/2020 ம் திகதி சிட்னி ஸ்ரீ துர்க்கா திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் நடைபெறுகின்றது. 


வரலட்சுமி விரதத்தின் மகத்துவம்!
பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால், திருமணமான பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் வாழ்வில் கிடைக்கப்பெறும்.


No comments: