தமிழ்முரசு Tamil Murasu

அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை16/06/2024 - 22/06/ 2025 தமிழ் 16 முரசு 10 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com

மேலும் சில பக்கங்கள்

▼

வேண்டா விடுதலை - பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

.
     

  கட்டடக்  காடுகளின்
  காட்சிப்  பெருவெளியில்
  அடர்ந்த  காடெங்கே
  அடர்மர  நிழலெங்கே
  எதோ   ஆங்காங்கே
  இருக்கின்ற மரங்களில்தான்
  குயிலிருந்து கூவவேண்டும்
  குஞ்சுகளைப் பேணவேண்டும்

  எங்கள் குடியிருப்பில்
  ஏழெட்டு மரங்களுண்டு
  ஏழெட்டு மரமெனினும்
  எல்லாம்  அடர்மரங்கள்
  வெயிலே நுழையாது
  விரித்த உயிர்க்குடைகள்
  அங்கேதான் பறவைகளின்
  அன்றாடக் கச்சேரி


at 12:25 AM No comments:

சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா 3ம் நாள்

.

at 12:25 AM No comments:

இளம் தென்றல் 2017 08/04/2017





at 12:25 AM

அசோகமித்திரனைக் கொண்டாடிய மாலைப்பொழுது

.
அசோகமித்திரனைக்  கொண்டாடிய   பொன்மாலைப்பொழுது
பிரயாணம் கதையில் கற்றதும் பெற்றதும் தேடலும்
                                                                                   முருகபூபதி


"  என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம் பயின்ற நான் வாயை எக்காரணம் கொண்டும் மூச்சு விடுவதற்குப் பயன்படுத்தாமல்  இருக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். ஐம்பது, அறுபது வருட காலம் முதிர்ந்து  யோகியாகவே வாழ்க்கை நடத்திய என் குருதேவர், அந்நேரத்தில் வாயைத் திறந்து வைத்துக் கொண்டும்கூட  மூச்சு விடுவதற்குப் பெரும் உபாதைப்பட்டுக் கொண்டிருந்தார். பதினைந்து நாட்களுக்கு முன்பு திடீரென்று வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு ”அம்மா” என்று அவர் கீழே விழும்வரையில், அவர் சுவாசம் விடுவதே மிகவும் கூர்ந்து கவனித்தாலன்றித் தெரியாது. அப்படிப் புலனானால், ஒரு
மூச்சுக்கு  இன்னொன்று மிக நீண்ட சீரான இடைவெளிவிட்டு வருவதை உணர முடியும்.  இப்போது அவர் வாயால் மூச்சு விடுவதற்குத் திணறிக் கொண்டிருந்தார். "
இந்த வரிகள் அண்மையில் மறைந்த இலக்கிய மேதை அசோகமித்திரனை நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்ட  சந்திப்பில் வாசிக்கப்பட்டது.
ஒருவரின் மறைவைக்கொண்டாட முடியுமா...? எனக்கேட்க முடியும். நாம் பல பேராளுமைகளைக் கொண்டாடிக்கொண்டிருப்பதற்கு அவர்களின்  ஆத்ம பலம்தான் அடிப்படை. கம்பனையும் பாரதியையும் பாரதிதாசனையும் புதுமைப்பித்தனையும் அவர்கள் மறைந்தபின்னர்தான் கொண்டாடி வருகின்றோம்.


at 12:24 AM No comments:

உலகச் செய்திகள்


ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 பேர் கைது..!

மற்றுமொரு ரொக்கெட் என்ஜினைப் பரிசோதித்தது வடகொரியா

கிம் ஜோங் நம்மின் உடலை கொடுப்பதற்கு மலேசியா தீர்மானம்..!

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிரித்தானியா : 'லாயிட்ஸ் ஒப் லண்டன்' அதிரடி அறிவிப்பு


ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 பேர் கைது..!

27/03/2017 ரஷ்ய பிரதமருக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 போராட்டக்காரர்களை, அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.


at 12:23 AM

இலங்கையில் பாரதி - அங்கம் 14 - முருகபூபதி

.


புரிந்துணர்வும்  ஓரளவு கருத்தொற்றுமையும் கொண்டிருந்த சில இலக்கியவாதிகளினால் 1975 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது ' அலை' இலக்கிய வட்டம். இந்த அமைப்பின் காலாண்டு இதழாக வெளியானது ' அலை'.
முதல் இதழ் 1975 நவம்பரில் வெளியானது. தொடக்கத்தில் அலையின் ஆசிரியர் குழுவில் அ.யேசுராசா, மு.புஷ்பராஜன், குப்பிளான் ஐ. சண்முகன், இ. ஜீவகாருண்யன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.
1972 ஆம் ஆண்டளவில் ஆழ்ந்த சிந்தனையாளர்கள் சிலரது கூட்டு முயற்சியால்  வெளிவரத்தொடங்கி, சில இதழ்களை இலக்கிய உலகிற்கு  வரவாக்கிய 'பூரணி' காலப்போக்கில் மறைந்ததனால், அந்த இடைவெளியை அல்லது அதன் இடத்தை 'அலை' நிரப்பும் என இலக்கிய வாசகர்கள்  எதிர்பார்த்தனர்.
'பூரணி'க்கு நேர்ந்தது போலவே அலை ஆசிரியர் குழுவினர் மத்தியிலும் அதன் உள்ளடக்கம் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் தோன்றியமையால், பின்னாளில் அலையின் இணையாசிரியர்களாக அ.யேசுராசாவும் மு. புஷ்பராஜனும் மாத்திரமே அள்ளுண்டு சென்றுவிடாமல் ' அலை' யுடன் தாக்குப்பிடித்துக்கொண்டனர்.
 இலங்கையில் பாரதி தொடரில் மல்லிகை இதழ் பற்றிய பதிவில்,  "பொதுவுடைமையில் நம்பிக்கை வைத்திருந்த மல்லிகை ஜீவா, தமது மல்லிகை விடயத்தில், கூட்டுச்சேர்தல் -  கூட்டுறவு அடிப்படை - குழுவாக செயற்படல் முதலான வழிமுறைகளை பின்பற்றவில்லை."  என்று எழுதியிருந்தோம்.

at 12:22 AM No comments:

தமிழ்நாடு செய்திகள்


Image result for nellai banana

.
நெல்லை அருகே 10 ஆயிரம் வாழைகள் சரிந்தன
நெல்லை, மார்ச்.30-
நெல்லை மாவட்டம் பேட்டை அருகே கருங்காடு அமைந்து உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான வாழைகள் பயிரிடப்பட்டு உள்ளன. இந்த வாழை மரங்கள் குலை தள்ளும் பருவத்தில் உள்ளன.
இந்த நிலையில் திடீரென வீசிய சூறாவளி காற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்து உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
--------------------------------------------------------
இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிய விளையாட்டு வீரர்
நெல்லை, மார்ச்.30-
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2016-17-ம் ஆண்டிற்கான கூடைப்பந்து போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கின்றன. மாநில அளவிலான இப்போட்டிகளில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்ற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜவஹர் (36) என்ற கூடைப்பந்து வீரர் வந்து உள்ளார். இவர் எதிர்பாராதவிதமாக, கால்நடைகள் மைதானத்திற்குள் நுழைவதை தடுக்க அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கூடைப்பந்து வீரர் ஜவஹரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேர பரபரப்பை ஏற்படுத்தியது.

at 12:21 AM No comments:

இலங்கைச் செய்திகள்


33 ஆவது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 37 வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.!

முல்லைத்தீவில் வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்!


33 ஆவது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

28/03/2017 வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (28) 33 ஆவது நாளாக  தொடர்கிறது.


at 12:21 AM

தமிழ் வளர்த்த சான்றோர் விழா - 29 04 2017

.

at 12:20 AM No comments:

எச்சரிக்கை - ஒரு பக்கக் கதை - ஆவூரான்-

.
               
வானதியும் கிரிஜாவும் நல்ல நண்பிகள்.இருவரும் ஒரே பாடசாலையில் தான் ஆசிரியராகக் கடமை பார்க்கிறார்கள். வானதி விஞ்ஞானப் பாடம் கற்பிப்பதால்  தனக்கு நிறைய வாசிக்க வேண்டும் என்று சொல்லி கிரிஜாவின்  காரிலேயே காலையில் பாடசாலைக்குப் போவதும், மாலை வீடு திரும்புவதுமாக காலம் போய்க் கொண்டு இருந்தது.
அன்றும் கிரிஜா  கார் ஓடி வர வானதி விஞ்ஞானப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்
“இஞ்ச …பார் வானதி வாகனம் ஓடிக்கொண்டு டிவைசைப் பாவிக்கிறது லயிற் சிக்கினல் விழுந்ததும் தெரியாமல் சற் பண்ணிக் கொண்டு நிற்கிற ஆட்களைக் கண்டால் வெறுப்பு வெறுப்பாக வருகுதுதடி.”
“ஓமடி கிரிஜா இப்படியான ஆட்களுக்கு டிவைஸ்யே தொடாத மாதிரி பயங்கரமான எச்சரிக்கை கொடுத்து கூடுதல் (F)பயின் அடிக்க வேணும்”
இருவரும் கதைத்து கொண்டு வந்ததில் வீடு வந்து விட்டது. கிரிஜா காரை நிறுத்தியதும்.
“கிரிஜா உள்ள வாவன் நேற்று பலூடா செய்து பிறிச்சுக்குள்ள வைச்சனான் ஒரு கிளாஸ் குடிப்பம்”
வீட்டினுள்ளே போய் வானதி கொடுத்த பலூடாவை குடிக்கும் போது வானதியின் கணவர்  பிள்ளைகளை முற்றத்தில் இறக்கி விட்டு விட்டு தபால் பெட்டியில் இருந்த கடிதங்களை கைய்ல் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவர்
“வானதி உமக்கு…”என்று ஒரு கடித உறைய அவளிடம் நீட்டினான்
“எனக்கா..” அலட்சியமாக கடிதத்தை வாங்கி உடைத்தவள் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.
மூன்று வாரங்களுக்கு முன் சனிக்கிழமை ஸ்ப்பிறிங் வேல் றோட்டில் புத்தகம் வாசித்துக் கொண்டு கார் ஒடியதற்காக  கைவேப் பொலிசாரின் கமராவில் பிடி பட்டிருப்பதாக  பொலிசார் $900.00 டொலர்கள்(F) பயின் அனுப்பியிருக்கிறார்கள் .
பலூடா குடித்துக் கொண்டிருந்த கிரிஜா சத்தமில்லாம்  வெளியேறினாள்.






   
at 12:20 AM

ஆஸ்திரேலியா சிட்னி துர்க்கை அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விஞ்ஞா பனம் 07/05/2017






at 12:19 AM

புதுமைப்பெண் - ஃபாத்திமாஹமீத்; ஷார்ஜா.

.


அரசுப்பொதுத் தேர்வில்
மாணவிகள் முதலிடம்!
ஆசிட் வீச்சில்
மாணவிகள்  மரணம்!

பலகலை நிகழ்ச்சிகளில்
மாணவிகள் முதலிடம்!
ஒருதலைக் காதலால்
மாணவிக்கு அரிவாள்வெட்டு!

விண்வெளியை ஆராய்ந்திட
விரைகிறார்கள் பெண்கள்!
பாலியல் பலாத்காரத்தால்
பலியாகிறார்கள் பெண்கள்!

மாதவம்செய்து மங்கையராய்ப் பிறந்தால்
சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிறார்கள்!
at 12:18 AM No comments:

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன்

.
ஸ்ரீராமுக்கு வயது இருபத்தொன்று நடந்துகொண்டிருந்தது. பி. ஏ. பரிக்ஷை எழுதியிருந்தான். பரிக்ஷை முடிவுகள் ஜூன் மாதத்தில் வரும். நடந்து கொண்டிருந்தது ஏப்ரல் மாதம்.
ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமின் அடுத்த வீட்டுக்காரர். மருந்துக் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார். அவருக்கு ஐந்து குழந்தைகள். முதல் மூன்றும் பெண்கள். அப்புறம் நான்கு வயதில் ஒரு பிள்ளை. கடைசியாக ஒரு பெண். அது பிறந்து ஒன்பது மாதங்கள்தான் ஆகியிருந்தன.
ஸ்ரீராம் ஒரு ஆங்கில தினசரிக்குச் சந்தாதாரர். பத்திரிகை தினமும் காலை ஆறு மணிக்குashkiஅவன் வீட்டில் விநியோகிக்கப்பட்டுவிடும். வழக்கமாகப் பத்திரிகை கொண்டு வருபவனுக்கு அன்று கோர்ட்டுக்குப் போக வேண்டியிருந்தது. ஆதலால் அவன் தன் மகனிடம் பத்திரிகைகளைக் கொடுத்து விநியோகித்து வரச் சொல்லியிருந்தான்.
ராமஸ்வாமி ஐயர் காலையில் எழுந்தபோது அவர் வீட்டு ஜன்னல் வழியாகப் பத்திரிகை ஒன்று நீட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அது யாருடையது என்பது அவருக்குத் தெரியாது. முகம் கழுவி, காப்பியும் குடித்த பிறகு அந்தப் பத்திரிகையை ஒரு வரி விடாமல் படிக்க ஆரம்பித்தார்.
தெருவில் ஒருவன் புதுப்புளி விற்றுக்கொண்டு போனான். விலை மிகவும் மலிவு. ராம்ஸ்வாமி ஐயர் வெளியே வந்து புளி விற்பவனை ஒரு மணங்கு நிறுத்துப் போடச் சொன்னார். புளி விற்பவன் தராசில் ஒரு தடவைக்கு இரண்டு வீசையாக நிறுத்தான். புளி உருண்டைகளை உள்ளே கொண்டுபோய்ப் போட்டுவர ஏதாவது தேவைப்பட்டது. ராமஸ்வாமி ஐயர் கையில் பத்திரிகை இருந்தது. அது யாருடையது என்று அவருக்குத் தெரியாது. அவர் மூன்றாவது தடவையாகப் புளி உருண்டையை உள்ளே கொண்டு செல்லும்போது ஸ்ரீராம் வெளியே வந்து யாரிடமோ பத்திரிகைக்காரன் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். ராமஸ்வாமி ஐயர் உள்ளே விரைந்து சென்று புளியை உதறினார். அவரால் முடிந்தவரை அந்தத் தினசரியைச் சுத்தம் செய்து,  வெளியே வந்து அதுதான் அவன் பத்திரிகையாக இருக்கக் கூடுமோ என்று ஸ்ரீராமிடம் கேட்டார். ஸ்ரீராம் பத்திரிகையை அவரிடமிருந்து பறித்துக் கொண்டு பிரித்துப் பார்த்தான். முன் பக்கத்தில் ஒரு சினிமாப் 

at 12:17 AM

இளையநிலா பொழிகிறதே - தரிசனம் 2017 12 02

.

at 12:16 AM

தமிழ் சினிமா

கடுகு


எளிமையான மனிதர்களை வைத்து சாட்டையடி போல் படைப்புகளை கொடுக்கும் ஒரு சிலர் இயக்குனர்களில் முக்கியமானவர் விஜய் மில்டன், கோலிசோடா படத்துக்கு பிறகு மீண்டும் தனது முத்திரையோடு கடுகு படைப்பின் மூலம் களமிறங்கியுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். இப்படத்தை பார்த்த நொடியிலேயே சூர்யா தனது 2டி மூலம் வெளியிட்டதே நல்ல படைப்புக்கான சாட்சி.

கதை

Kaduguகடுகு சிறிதானாலும் காரம் குறையாது என்பார்கள் அது குமார் ஆளை பார்த்து யாரும் எடை போட கூடாது என்பது கடுகு படத்தின் கரு. புலி வேஷம் போடும் ராஜகுமாரன் காலப்போக்கில் அந்த கலை அழிய தொடங்கியதால் வேறு வழியில்லாமல் போலீசாக வரும் இயக்குனர் வெங்கடேஷுக்கு சமைத்து தரும் வேலைக்காரனாக வருகிறார். அதே ஊரில் இளைஞர்களுக்கு பாக்ஸிங் சொல்லித்தரும் இளைஞராகவும், அரசியலில் சுயேச்சையாக வென்று அந்த ஊரில் நல்ல பெயருடன் இருப்பவர் பரத்.
ஒரு சந்தர்ப்பத்தில் தப்பு நடக்கிறது என்று தெரிந்தும் தனது சுயநலத்துக்காக பரத் உதவி செய்யமால் வேடிக்கை பார்ப்பதும், அந்த தப்பை பற்றி அறிந்த அதற்க்காக போராடும் ராஜகுமாரன், ராதிகா ப்ரஸிதா பாதிக்கப்படுவதும் என பல விளைவுகளை நோக்கி பயணிக்கிறது கடுகு திரைப்படம்.

படத்தை பற்றிய அலசல்

புலிபாண்டியாக வரும் ராஜகுமாரன் தனது உடல் வாகுக்கு ஏற்றார் போல் உதவும் மனப்பான்மை, அதிக இரக்க குணம், வெகுளித்தனம் நிறைந்த எளிமையான மனிதர்களை பிரதிபலிக்கிறார். அதுவும் ஒரு போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் உனக்கு நண்பர்கள் இல்லையே என்ற கேள்விக்கு இருக்காங்களே 350 நண்பர்கள் பேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்று வெகுளித்தனமாக சொல்வதும், தன் கண் முன்னே எதாவது பிரச்சனை என்றால் உதவுவதும், அதே சமயம் உதவி செய்யமுடியவில்லையே என்று பரிதவிப்பதிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக கிளைமாக்ஸில் பரத்துடன் அவர் போடும் சண்டை காட்சி, அதன் பிறகு அவர் பேசும் வசனங்களும் மிகப்பெரிய கைதட்டல்களை அள்ளுவது உறுதி. நல்லவனுக்குள்ளும் சுயநலத்துக்காக ஒரு கெட்ட குணம் ஒளிந்திருக்கும் என்பது தான் பரத்தின் பாத்திர வடிவமைப்பு. கண்டிப்பாக பரத்துக்கு இந்த படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.
டீச்சராக வரும் ராதிகா ப்ரஸிதா வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக சில சந்தர்ப்பத்தால் செய்யாத குற்றத்தால் தப்பானவள் என்ற பெயருடன் வாழும் கதாபாத்திரம். உண்மையில் கிளைமாக்ஸ்க்கு முன்பு வரும் திருப்புமுனையான காட்சிக்கு இவரின் கதாபாத்திரம் உதவியுள்ளது.
குறிப்பாக ராஜகுமாரனுக்கு நண்பராக வரும் அனிருத் ராஜகுமாரனுடன் சேர்ந்து செய்யும் பேஸ்புக் கலாட்டாக்கள் யதார்த்தமான சிரிப்பலைகள். அதுமட்டுமில்லாமல் பொலிஸாக நடித்துள்ள வெங்கடேஷ், பரத்துக்கு பாட்டியாக வருபவர், பாதிக்கப்படும் சிறுமி போன்ற இதர கதாபாத்திரங்களும் இப்படத்துக்கு முக்கிய தூண்களாக தான் வருகின்றனர்.

க்ளாப்ஸ்

1 படத்தின் கிளைமாக்ஸ், கோலிசோடா போல் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்களும் பேசப்படும்.
2. இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் குறிப்பாக ராஜ்குமாரனின் கதாபாத்திரம், ஜோக்கராக இருக்கும் ஒருத்தன் எப்படி ஹீரோவாகிறான் என்பதை காட்டிய விதம் பிரமாதம்.
3. முதல் பாதியில் படத்தை ஒப்பிடும் சில நகைச்சுவை காட்சிகள், எந்தவொரு அலட்டலும் இல்லாத ஒரு திரைக்கதை, நம் உணர்வோடு ஒத்துக்கொள்ளும் சில வசனங்கள்

பல்ப்ஸ்

1. படத்தின் பின்னணி இசை, பாடல்கள் சொல்லும் படியில்லை.
2. இரண்டாம் பாதி தொடங்கி 20 நிமிடங்கள் எங்கு செல்கிறது என்று புரியாமல் ஜவ்வு போல் இருக்கும் திரைக்கதை.
ராஜகுமாரன் நடித்த கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்க ஆசைப்பட்டாராம், அதற்கு கதை தான் ஒரு நடிகனை தேட வேண்டும். யதார்த்தத்தை மீறிய ஒரு நடிகனை என்னால் போட முடியாது என்ற விஜய்மில்டனுக்கு ஒரு சபாஷ்.
மொத்தத்தில் கடுகின் காரம் சுவைக்கும் அளவுக்கு உள்ளது.
Kadugu Movie Review
Cast:
A. Venkatesh, Bharath, Rajakumaran
Direction:
Vijay Milton
Music:
S.N.Arunagiri

நன்றி Cineulagam
at 12:16 AM
‹
›
Home
View web version
Powered by Blogger.