18/12/2017 கலஹா புபு­ரஸ்ஸ டெல்டா தோட்ட  பச்­சைக்­காட்டுப் பிரிவில் கற்­குகை ஒன்­றி­னுள்­ளி­ருந்து  பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. அருள் வாக்­குக்­கூறும் நப­ரொ­ரு­வரின் தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த சிலை மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 மேற்­படி சிலை­யா­னது  தோட்­டத்தில் அமைந்­துள்ள ஆறு ஒன்­றுக்கு அருகில் இருந்த கற்­குகை ஒன்­றுக்­குள்­ளி­ருந்தே மீட்­கப்­பட்­டுள்­ளது. குறித்த தோட்­டத்தில் மார்­கழி பஜ­னையை முன்­னிட்டு வெள்­ளிக்­கி­ழமை  இரவு 8 மணி­ய­ளவில் கரகம் பாலிக்கும் நிக ழ்வு இடம் பெற்­றுள்­ளது.

 இதன் போது பஜனை குழுவில் பிர­தான  பங்கு வகிக்கும் வசின்டன் என்ற    அருள்­வாக்கு கூறும் நபர் பூஜையின் உச்­சத்தின் போது  மேற்­கு­றிப்­பிட்ட  இடத்தை சுட்­டிக்­காட்டி அங்கு  சிவ­னு­டைய சிலை ஒன்று இருப்­ப­தா­கவும் அதனை மீட்டு பூஜை­களை மேற்­கொள்­ளு­மாறும்  கூறி­யுள்ளார். இதை­ய­டுத்து   தீப் பந்­தங்களை கொளுத்­திக்­கொண்டு   அவ்­வி­டத்­திக்குச் சென்ற இளை­ஞர்கள் குறித்த நபர் கூறிய இடத்­தி­லி­ருந்த கற்­கு­கைக்குள் சென்று பார்த்த போது குறித்த சிலை மண் நிறத்தில் காணப்­பட்­டுள்­ளது.

 இதன் போது  சிலை மீட்­கப்­பட்டு  அதற்கு அபி­ஷேகம் செய்­யப்­பட்டு இராமர் கோயிலின் ஒரு புறத்தில் வைத்­துள்­ளனர்.
சிலை மீட்பு தொடர்­பாக கேள்­வி­யுற்ற கலஹா பொலிஸார் ஸ்தலத்­திற்கு விரைந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­தோடு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு இது குறித்து அறி­வித்­துள்­ளனர். குறித்த சிலை­யினை பார்வையிடுவதற்காக கண்டி ,கம்பளை புஸல்லாவை  நுவரெலியா போன்ற பிரதேசங்களிலிருந்தும் மக் கள் வருகை தந்த வண்ணமுள்ளமையும் குறிப்பிடதக்கது.