இலங்கைச் செய்திகள்


தொடரும் யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்...!

வவுனியா பள்ளிவாசலை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் போராட்டம்

சந்திவெளியிலும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிர்ப்பு

கருணா அம்மான் விடுதலை.!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சித்த மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்

10 ஆயிரம் வீடு­களை வழங்­கிய நரேந்திர மோடி.!




தொடரும் யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்...!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.



அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நேற்றுமுன்தினம் தொடக்கம் கதவடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். 
குறித்த அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே இந்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் வணிக பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி 













வவுனியா பள்ளிவாசலை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் போராட்டம்

31/10/2017 வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சட்டவிரோத வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரி இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இன்று காலை நகரபள்ளி வாசலுக்கு முன்பாக ஒன்றிணைந்த இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட வியாபார நிலையங்களை அகற்றுவதற்கான தமது போராட்டமே இது, இனங்களுக்கிடையே மதங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல இதை தவறாக புரிந்துகொள்ளவேண்டாம். கடந்த 1995ஆம் ஆண்டு 16 வியாபார நிலையங்களுக்கு அப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது 80 ற்கும் அதிகமாக வியாபார நிலையங்கள் சட்டவிரோதமான முறையில் நடைபாதையிலும் பள்ளியை அண்மித்த பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. வவுனியா நகரசபையில் முன்னர் ஆட்சிபுரிந்த அரசியல் பிரமுகர்கள் இதற்கு அனுமதியளித்துள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் குறிப்பாக வீதி அதிகாரசபையிடம் வினவியபோது அரசியல் தலையீடு காரணமாக முன்னர் அவற்றை அகற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். நடைபாதையில் வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோருவதுடன் அகற்றும் வரை எமது போராட்டத்தினை தொடருவோம் என்றும் இன்று போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர். தயாபரன் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இச்சம்பவம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபையிடமே உள்ளதாகவும் இவ்விடயமாக தலையிடுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை ஆனால் இன்று இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக வீதி அதிகாரசபையினருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் கடிதம் ஒன்றினை அனுப்ப முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள் நகரசபை செயலாளருக்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வியாபார நிலையங்களின் வரைபடம், வழங்கப்பட்ட கடைகளின் விபரங்களை தற்போது உள்ள கடைகளின் விபரங்களையும் ஒன்றிணைத்து மகஜராக கையளித்துள்ளனர். நன்றி வீரகேசரி















 சந்திவெளியிலும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிர்ப்பு
31/10/2017 மட்டக்களப்பு, சந்திவெளி  வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட  உள்ளுர் வாசிகளிடமிருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளையடுத்து முஸ்லிம் வியாபாரிகள் திரும்பிச் சென்று விட்டனர்.

வாழைச்சேனை பிரதேச  சபையின்  கீழ் உள்ள சந்திவெளி வாராந்த சந்தை இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. வழமைக்கு மாறாக பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
 
முஸ்லிம் வியாபாரிகள் வழமை போல்  விற்பனைக்கான பொருட்களை வாகனங்களில் அங்கு எடுத்து வந்திருந்த வேளை வியாபாரத்தில் ஈடுபட அனுமதி இல்லை என அங்கு கூடிய சிலரால் தெரிவிக்கப்பட்டது . இதனைதையடுத்து அவர்கள் திரும்பி விட்டனர். இதனால் வழமைக்கு மாறாக வியாபார நடவடிக்கைகள் சூடு பிடிக்கவில்லை.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை   கிரான் வாராந்த  சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றப்பட்டிருந்தனர். செங்கலடி சந்தையிலும் அவர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகின்றது.



வாழைச்சேனை சந்தியில் கடந்த வாரம் பஸ் தரிப்பிடமொன்று அமைப்பது தொடர்பாக  தமிழ் - முஸ்லிம் தரப்பில் ஒரு சிலருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் எதிரொலியாகவே  இது போன்ற சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  நன்றி வீரகேசரி












கருணா அம்மான் விடுதலை.!

30/10/2017 9 கோடி ரூபாய் பெறுமதியான வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர்  விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, விநாயகமூர்த்தி முரளிதரனை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அதிசொகுசு வாகனமொன்றை மீளகையளிக்காமல் தொடர்ந்து பயன்படுத்திவந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நன்றி வீரகேசரி












தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சித்த மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்

30/10/2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவர்கள் இன்று யாழ்.கைதடி ஏ-9 வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இன்று காலை 9 மணி தொடக்கம் சுமார் 2 மணி நேரம் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது நல்லாட்சி அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். என்ற கோஷங்களை எழுப்பியவாறும் கோஷங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் வகுப்புக்களையும் புறக்கணித்திருந்தார்கள்.




நன்றி வீரகேசரி
யாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்
30/10/2017 அரசியல் கைதிகளின் போராட்டத்திற்குரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இதன்படி இன்றிலிருந்து பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப் பட்டுள்ளன.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த மூன்று அரசியற்கைதிகள், தமது வழக்கினை தமிழ் பிரதேச நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

குறித்த கைதிகளின் கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்வழி பல்கலைக்கழக மாணவர்களும் தமது போராட்டங்களினை நடத்திவந்த நிலையில் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பிலும் சாதகமான நிலை எதுவும் எட்டப்படாத நிலையிலேயே ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக சமூகம் இந்த கதவடைப்பு போராட்டத்தினைத் தொடங்கவுள்ளனர்.

இதேவேளை பல்கலைக்கழகத்தில் பருவகாலப் பரீட்சைகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் பலவும் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்திற்கும் மத்தியிலேயே குறித்த கதவடைப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி









10 ஆயிரம் வீடு­களை வழங்­கிய நரேந்திர மோடி.!
30/10/2017  மலை­யக மக்க­ளுக்­கான வீட­மைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்­பரம் சிறந்த முறையில் மேற்­கொண்டு வரு­கின் றார். அதில் திருப்தி கண்­டதால் தான் இந்­தியப் பிர­தமர் நரேந்திர மோடி மேலும் 10 ஆயிரம் வீடு­களை வழங்க முன்­வந்­துள்ளார் என ஐ.தே.க. தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று அட்டன் டன்பார் மைதா­னத்தில் இடம்­பெற்ற காணி உறுதிப்பத்­தி­ரங்கள் வழங்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரி­வித்தார்.
மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடாக பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு தலா ஏழு பேர்ச் காணியில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் தனி வீடு­க­ளுக்­கான காணி உறுதிப் பத்­தி­ரங்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் பழனி திகாம்­பரம் தலை­மையில் “எங்கள் நிலத்தில் – எங்கள் வீடு” என்னும் தொனிப் பொருளில் இடம்­பெற்­றது. நிகழ்வில் காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக, கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வீ. இரா­தா­கி­ருஸ்ணன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எம். தில­கராஜ், வடிவேல் சுரேஷ், வேலு குமார், கே.கே. பிய­தாஸ, சுஜித் பெரேரா, அமைச்சின் செய­லாளர் திரு­மதி ரஞ்­சினி நட­ரா­ஜ­பிள்ளை, மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்கள் சோ. ஸ்ரீதரன், எம் உத­ய­குமார், சிங். பொன்­னையா, சரஸ்­வதி சிவ­குரு, எம். ராம். ஆர். இரா­ஜாராம்  “ட்ரஸ்ட்” நிறு­வனத் தலைவர் வீ. புத்­தி­ர­சி­கா­மணி உற்­பட பலர் கலந்து கொண்­டார்கள்.
   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்து பேசு­கையில்,
1993 ஆம் ஆண்டில் டி.பி. விஜ­ய­துங்க ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது, பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு வீட­மைப்புத் திட்­டத்தை ஆரம்­பித்தேன், எனினும் முடி­யாமற் போய் விட்­டது. இன்று 20 வரு­டங்­களின் பின்னர் அந்தத் திட்டம் நிறை­வேறி வரு­கின்­றது. எமது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் மலை­ய­கத்தில் புதிய கிரா­மங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான அமைச்சு உரு­வாக்­கப்­பட்டு அதற்கு திகாம்­பரம் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டு தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடு­களை அமைத்து வரு­கின்றார். அதில் 2864 குடும்­பங்­க­ளுக்கு இன்று காணி உறுதிப் பத்­தி­ரங்கள் வழங்கப் படு­வது மகிழ்ச்­சி­யான விடயம் ஆகும்.
எத்­த­னையோ அர­சாங்­கங்கள், அமைச்­சர்கள் வீடு­களைக் கட்டித் தரு­வ­தா­கவும், காணி­களைப் பெற்றுக் கொடுப்­ப­தா­கவும் கூறி­னார்கள். ஆனால், யார் பெற்றுக் கொடுத்­தார்கள்? திகாம்­பரம் அமைச்­ச­ரான பிறகு அதை நடை­மு­றையில் செய்து காட்டி வரு­கிறார். எமது வீட­மைப்புத் திட்டம் சிறந்த முறையில் இடம்­பெற்று வரு­வதை மலை­ய­கத்­துக்கு விஜயம் செய்திருந்த இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் கவ­னத்­துக்குக் கொண்டு வந்தோம். அதன் பய­னாக மேலும் 10 ஆயிரம் வீடு­களை இந்­தியப் பிர­தமர் வழங்­கி­யுள்ளார்.
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சத்­தியக் கட­தாசி மூலம் 1986 இல் பிர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டது. ஸ்ரீமா – சாஸ்­திரி ஒப்­பந்­தத்தின் மூலம் தாயகம் திரும்­பியோர் போக எஞ்­சி­யி­ருந்­த­வர்­க­ளுக்கும் பிர­ஜா­வு­ரிமை கிடைத்­தது. எனவே, இலங்கைப் பிர­ஜைகள் என்ற ரீதியில் அவர்­க­ளுக்கு காணி பெறு­கின்ற உரிமை இருக்­கின்­றது. இந்த நாட்டில் ஏனைய மக்­க­ளுக்கு இணை­யாக அவர்­களும் வாழ வேண்டும். அவர்­களின் வாழ்க்கை மேம்­பாடு காண வேண்டும்.
இந்த நாட்டில் அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தற்கு  2015 இல்  தமிழ், சிங்­கள, முஸ்லிம், பறங்­கியர் மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளர்கள். அதன் அடிப்­ப­டையில் ஐ.தே.கட்­சியும், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்த நல்­லாட்சி மலர்ந்­துள்­ளது. மகிந்த ஆட்­சியை நீக்கி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாகக் கொண்டு வந்­துள்­ளார்கள் இந்த இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­தது போல, மக்­களும் ஒன்­று­பட்டு நாட்டை முன்­னேற்றி அபி­வி­ருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டில் இடம்­பெற்று வந்த 30 ஆண்டு கால யுத்தம் முடி­வுகுக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. மக்கள் அனை­வரும் சமா­தா­னத்­துடன் அமை­தி­யாக வாழ வேண்டும்.
உல­கத்தில் உள்ள ஒரே­யொரு பௌத்த நாடு இலங்கை ஆகும். நாம் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ வணக்க­த­லங்­களை அபி­வி­ருத்தி செய்து வரு­கின்றோம் ஒவ்­வொ­ரு­வ­ரது கலை கலா­சார விழு­மி­யங்­களை பேணிப் பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். மொழிப் பிரச்­சினை பிரி­வி­னைக்கு வழி வகுத்து விடக் கூடாது. இன்­றைய அர­சியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பொது மக்கள் வழங்கிய வரத்தினை கொண்டு இம்மக்களின் உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காத நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது அவசியமான தேவையாகவும், நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.
அன்று மொழி பிரச்சினை இருந்ததால் தனிநாடு பிரச்சினை உருவாகியது. இதனால் 30 வருட யுத்தத்திற்கும் நாம் முகம்கொடுத்தோம். பல துன்பகரமான நிகழ்வுகளிலிருந்து தற்பொழுது மீண்டுள்ளோம். புதிய அரசியல் யாப்பு ஊடாக இந்த நாட்டில் ஒருமித்த மக்களாக மட்டுமன்றி உரிமை பெற்ற மக்களாக அனைவரையும் வழிநடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் முதல் முதலாக ஒன்றிணைந்து அரசியல் யாப்பை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றன.
இந்த உயர்வான நிலை நாம் வரவேற்கின்றோம். கிடைத்திருக்கும் மக்களின் ஆணைக்கேற்ப அரசியல் யாப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். சந்தர்ப்பங்களை பிரயோசனப்படுத்தவேண்டும்.
புதிய அரசியல் அமைப்பு பற்றி பலவாறு விமர்சனம் செய்து வருகின்றார்கள். யாரும் நாட்டைப் பிரிக்க முயலவில்லை. புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு அல்ல. நாம் அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்லவே விரும்புகிறோம் என்றார்.   நன்றி வீரகேசரி

No comments: