இலங்கைச் செய்திகள்


யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்!

பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் - ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

சிறையில் சுந்­த­ர­காண்டம் வாசிக்கும் நாமல் எம்.பி.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்  அலரி மாளிகையில் தேசிய தீபாவளி விழா





யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்!
17/10/2017 தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் விடுதலை கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்தன சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் மற்றும் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தருமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். எனினும், அது குறித்து எந்த பதிலும் கிடைக்காததையடுத்து மாணவர்கள் உண்ணாவிரத்தில் குதித்தனர்.
இந்நிலையில், நாளை மறுதினம் (19) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்கித் தந்திருப்பதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதத்தை இடைநிறுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின், சம்பிரதாயபூர்வமாக பழரசம் அருந்தி மாணவர்கள் தமது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.  நன்றி வீரகேசரி 













பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் - ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு
17/10/2017 பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தானிய வெளியுறவுச் செயலர் தெஹ்மீனா ஜான்ஜிவா, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்போது, பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு பாகிஸ்தானில் மிக மகத்தான நன்மதிப்பு காணப்படுவதாகவும் அதனூடாக இரு நாடுகளினதும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கிடையிலான வர்த்தக உறவுகளை  மேம்படுத்துவதற்கான ஆர்வத்தினை இதன் போது ஜனாதிபதியிடம் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி











சிறையில் சுந்­த­ர­காண்டம் வாசிக்கும் நாமல் எம்.பி.

16/10/2017 தங்­காலை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் புதல்­வரும் அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக் ஷ எம்.பி. இரா­மா­ய­ணத்தின் சுந்­தர காண்டம் பகு­தியை வாசிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றாராம்.

மத்­தள விமான நிலையம் உட்­பட நாட் டின் வளங்­களை வெளிநா­ட்டிற்கு விற்­பனை செய்­வதை கண்­டித்து கடந்த ஆறாம் திகதி அம்­பாந்­தோட்­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்டம் தொடர்­பாக கடந்த 10ஆம் திகதி மாலை கல­கம பொலிஸ் நிலை­யத்தில் இடம்­பெற்ற மூன்று மணி நேர விசா­ர­ணை­களை அடுத்து  அரச சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்த குற்­றச்­சாட்டில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தின் கூட்டு எதி­ரணி ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாமல் ராஜ­பக் ஷ, டி.வி. சானக்க, கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிர­சன்ன ரண­வீர, மேல் மாகாண சபை உறுப்­பினர் உபாலி கொடி­கார, தென் மாகாண சபை உறுப்­பினர் சம்பத் அத்­து­கோ­ரள மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் சட்­டத்­த­ரணி அஜித் பிர­சன்ன ஆகிய அறு­வரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.
இவர்கள் அம்­பாந்­தோட்டை நீதி­மன்ற நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து தங்­காலை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் அறு­வரும் ஒரே சிறைக்­கூ­டத்­தி­னுள்­ளேயே தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் நாமல் ராஜ­பக் ஷ எம்.பி.சிறைக்­கூ­டத்தில் இரா­மா­ய­ணத்தின் சுந்­தர காண்டம் பகு­தியை வாசிப்­ப­தற்கு ஆரம்­பித்­துள்­ளாராம்.
சுந்­தர காண்டம் பகு­தியை வாசிப்­பதால் பல்­வேறு நன்­மைகள் கிடைக்கும் என அவரின் தமிழ் நண்­ப­ர்கள் அளித்த ஆலோ­ச­னையை  அடுத்து இந்த செயற்­பாட்டை ஆரம்­பித்­துள்­ளாராம். இரா­ம­ாய­ணத்தின் ஏழு காண்­ட­களில் சுந்­தர காண்­ட­மா­னது விஷ்­ணுவின் அவ­தா­ர­மான இரா­ம­னு­டைய ஆத்­மான பக்­த­னான ஆஞ்­ச­நே­யரின் அறிவுக் கூர்மை, வீரம், சொல்­வன்மை, பெருமை, பக்தி உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.
குறிப்­பாக சுந்­தரகாண்­டத்­தினை பாரா­யணம் செய்­வதால் அல்­லது வாசிப்­பதால், இறை­பக்தி, மனதிற்கு நிம்மதி, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மனோ பலம், துன்பங்கள், துக்கம் நிறைவுக்கு வந்து தைரியம் என்பன கிடைக்கும் என முன்னோர்கள், ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி









ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்  அலரி மாளிகையில் தேசிய தீபாவளி விழா

15/10/2017           2017 ஆம் ஆண்டு தேசிய தீபாவளி விழா இன்று  பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இம்மாதம் 18 ஆம் திகதி இடம்பெறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தயாராகிவருகின்றனர்.

இதனை முன்னிட்டு அனைத்து இந்துக்களுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சமய அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமையளித்து விழா நடைபெற்றதுடன், எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன், அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



நன்றி வீரகேசரி

No comments: