உலகச் செய்திகள்


கீதை­யுடன் பைபிள், குர்ஆன் சர்ச்­சை

ஈராக் தூதரகத்தில் தாக்குதல்

அமெ­ரிக்க அதி­கா­ரி­களை ரஷ்­யாவை விட்டு வெளி­யேற புட்டின் உத்­த­ரவு

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் இரட்டைக் குண்டு வெடிப்பு : 30 க்கும் மேற்பட்டோர் பலி


கீதை­யுடன் பைபிள், குர்ஆன் சர்ச்­சை

31/07/2017 பேய்க்­க­ரும்பில் திறக்­கப்­பட்ட அப்துல் கலாம் சிலை முன்பு பகவத் கீதை­யுடன் வைக்கப்பட்ட குர்ஆன், பைபிள் ஆகிய புனித நூல்­கள் அகற்றப்பட்டுள்ளன.



மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்­னிட்டு 15 கோடி ­ரூ­பா செலவில் அமைக்­கப்­பட்ட மணி மண்­ட­பத்தை பிர­தமர் நரேந்­திர மோடி திறந்து வைத்தார். இம் மணி மண்­ட­பத்தில் வீணை மீட்­டு­வது போன்ற கலாம் சிலை வைக்­கப்­பட்டு இருந்­தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்­தது. 
ஆனால் , அப்­துல்­கலாம் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும் வைக்­கப்­பட்­டதால் சர்ச்சை ஏற்­பட்­டது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்­ளிட்ட தமி­ழக அர­சியல் கட்சித்தலை­வர்கள் பலரும் இதற்கு  எதிர்ப்பு தெரி­வித்து வந்­தனர்.
சர்ச்­சைகள் எழுந்­ததையடுத்து, பேய்க்­க­ரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே அவ­ரது அண்ணன் பேரன் சலீம் குர்ஆன் மற்­றும் பைபி­ளை நேற்று வைத்­தார். பின்னர் நேற்று மதியம் அவ் இரு நூல்களையும் அகற்றிய அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக இரு நூல்களும் அகற்றப்பட்டன. இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்றார். இதேவேளை கலாம் சிலை அருகே பை பிள் மற்றும் குர்ஆனை அனுமதியின்றி வைத்ததாக சலீம் மீது இந்து மக்கள் கட்சியினர் பொலிஸில் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  நன்றி வீரகேசரி 












ஈராக் தூதரகத்தில் தாக்குதல்

31/07/2017 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈராக் தூதரக அலுவலகம் அருகே இன்று கார் குண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வெடி குண்டுகள் நிரப்பிய காரில் வந்த தீவிரவாதி அதை வெடிக்க செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நொறுங்கின. கட்டிடங்கள் இடிந்தன. இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் மற்றும் காயம் அடைந்தோர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.  நன்றி வீரகேசரி











அமெ­ரிக்க அதி­கா­ரி­களை ரஷ்­யாவை விட்டு வெளி­யேற புட்டின் உத்­த­ரவு

01/08/2017  ரஷ்­யா­வி­லி­ருக்கும் அமெ­ரிக்கத் தூத­ரக அதி­கா­ரிகள் 755 பேரையும் உடனே நாட்டை விட்டு வெளி­யேறச் சொல்லி, ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் உத்­த­ர­விட்­டுள்ளார். 
உக்ரைன் மற்றும் சிரியா விவ­கா­ரத்தில் அமெ­ரிக்­கா­வுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடையே மோதல் நீடித்­து­வ­ரு­கி­றது. இந்த நிலையில், ரஷ்யா மீது புதிய பொரு­ளா­தாரத் தடை­களை விதிக்க வகை­செய்யும் சட்ட மசோதா, அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டது. 
அந்த மசோ­தா­வுக்கு ஒப்­புதல் அளிக்க அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் முடி­வு­ செய்­தி­ருப்­ப­தாக வெள்ளை மாளிகை அறி­வித்­தது. இதை­ய­டுத்து, அமெ­ரிக்­காவின் பொரு­ளா­தாரத் தடைக்குப் பதி­ல­டி­யாக, ரஷ்­யாவில் பணி­யாற்றும் அமெ­ரிக்கத் தூத­ரக அதி­கா­ரிகள் பலரை ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் நாட்டை விட்டு வெளி­யேற்­றுவார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. 
இப்­போது எதிர்­பார்த்­ததைப் போலவே விளா­டிமிர் புட்டின், ரஷ்­யா­வி­லி­ருக்கும் அமெ­ரிக்கத் தூத­ரக அதி­கா­ரிகள் 755 பேரையும், உடனே நாட்டை விட்டு வெளி­யேறச் சொல்லி அதி­ர­டி­யாக உத்­த­ர­விட்­டுள்ளார். இதனால், இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவில் விரிசல் உரு­வா­கி­யுள்­ளது.  நன்றி வீரகேசரி














ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் இரட்டைக் குண்டு வெடிப்பு : 30 க்கும் மேற்பட்டோர் பலி

02/08/2017 மத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரத்திலுள்ள ஜாவாடியா பள்ளிவாசலில் ஏற்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பெருந்தொகையானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குண்டுவெடிப்புச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிதாரி ஒருவரால் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
அப் பிரதேச அரச அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நேற்று இரவு  உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக இருந்ததாகவும் இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் காயமடைந்தோர் 64 இற்கும் மேற்படலாம் எனவும் தெரிவித்தார்.
இத் தாக்குதலை மேற்கொண்ட இருவரும் உயிரிழந்துள்ளதாகவும்  இது வரை குண்டு வெடிப்பு சம்பவத்தை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் அந் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி




No comments: