.
கடவுளர்க்கு நிழல் உண்டா?
இருந்தாலும் யார் கண்டார்?
எம்
நெருப்புக்கும் கண்ணீருக்கும்
இல்லை.
சுக்கிலத்தாலும் குருதியாலும்
வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக
நாம் அனுப்பும் கணை
எதுவெனத் தேடிக் காட்டுக்குள்
போக முடியாது. காடும் எரிகிறது.
ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது
இருப்பதே ஒரு கால்
உருவற்ற கவிதையின் உயிரை
தேடாதே
தீ பெருகும் என்றாள்
பெருகுவது எல்லாம் நன்மைக்கே
எனத் தொடர்ந்து நடந்தேன்
கடலோரம்
வழி விடா நீர்
வழி தரும் மொழி
கடவுளர்க்கு நிழல் உண்டா?
இருந்தாலும் யார் கண்டார்?
எம்
நெருப்புக்கும் கண்ணீருக்கும்
இல்லை.
சுக்கிலத்தாலும் குருதியாலும்
வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக
நாம் அனுப்பும் கணை
எதுவெனத் தேடிக் காட்டுக்குள்
போக முடியாது. காடும் எரிகிறது.
ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது
இருப்பதே ஒரு கால்
உருவற்ற கவிதையின் உயிரை
தேடாதே
தீ பெருகும் என்றாள்
பெருகுவது எல்லாம் நன்மைக்கே
எனத் தொடர்ந்து நடந்தேன்
கடலோரம்
வழி விடா நீர்
வழி தரும் மொழி