மரண அறிவித்தல்

.                              திருமதி சிசிலியா மனுவேற்பிள்ளை காலமானார்
    மறைவு  04 11 2016 
கரம்பனைப் பிறப்பிடமாகவும் சிட்னி  அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிசிலியா மனுவேற்பிள்ளை 04.11.2016 காலை இறைவனடி சேர்ந்தார். இவர் காலம் சென்ற திரு அந்தோனிப்பிள்ளை மனுவேற்பிள்ளையின் அன்பு மனைவியும்
பஸ்தியாம்பிள்ளை , றோசம்மா தம்பதியினரின் அன்பு மகளும் , அந்தோனிப்பிள்ளை , அந்தோணியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் , அந்தோணியாப்பிள்ளை அலோசியஸ் (கனடா ), பிலோமினா மரியதாஸ் (இலங்கை ), ஆகியோரின் அன்புச் சகோதரியும் .
காலம் சென்றவர்களான ஜோசப் , சேவியர் , அல்பிரட் ,மக்டலின் , மாகிரட்(கொலன்ட்), அலோசியஸ் (கனடா) ,காலம் சென்ற மரியதாஸ் ஆகியோரின் மைத்துனியும்
யசிந்தா இக்னேசம்மா தேவராஜா (சிட்னி), யூலியா சதானந்தராஜா (இலங்கை), றோஸ்மலர் (சூரி) சங்கரப்பிள்ளை (சிட்னி) , ஜெறோம் எமிலியானஸ் (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்
காலம் சென்ற தேவராஜா ஐசக் , சதானந்தராஜா (இலங்கை), சங்கரப்பிள்ளை (சிட்னி) , கொன்சிலா மதுபாலா (சிட்னி), ஆகியோரின் அன்பு மாமியாரும்
வினோத் டொனால்ட் , ஜெனட் பெனா, டினேஷ், ஆன்ருசாந்தினி, கிரிஸ்டி, அரவிந்த் ,கிரிஷாந், சகானா, இன்பனா, ஆரணா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் , நிக்கில் , நத்தானியேல் , ஜொசான், ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார் .
அன்னாரின் பூதவுடல் நவம்பர் மாதம் 8ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிமுதல் 8.30 மணிவரை இல 7, Grantham Rd,Seven hills இல் அமைந்துள்ள Our Lady of Lourdes தேவாலயத்தில் செப வழிபாட்டுக்காகவும் இறுதி அஞசலிக்காகவும் வைக்கப்படும் 
நவம்பர் மாதம் 9ம் திகதி புதன்கிழமை மதியம் 1 மணிக்கு Our Lady of Lourdes தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, Kington St, Minchinbury இல் அமைந்துள்ள Pine Grove Memorial Park சேமக்காலைக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
மேலதிக விபரங்களுக்கு
ஜெறோம்    0425 233 287
சூரி சங்கரப்பிள்ளை 0428 129 738
வினோத் டொனால்ட் 0421 889 110

No comments: