உலகச் செய்திகள்

.
துருக்கிய கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து படகு 5 சிறுவர்கள் உட்பட 17 குடியேற்றவாசிகள் பலி

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது

 படகில் குண்டு வெடிப்பு : உயிர் தப்பிய மாலைத்தீவு ஜனாதிபதி

தாய்­லாந்தைத் தாக்­கிய சூறா­வளி

மும்பை தொடர் குண்டு வெடிப்பு : 5 பேருக்கு மரண தண்டனை - 7 பேருக்கு ஆயுள் தண்டனை

துருக்கிய கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து படகு 5 சிறுவர்கள் உட்பட 17 குடியேற்றவாசிகள் பலி

28/09/2015 துருக்­கிய கடற்­க­ரைக்கு அப்பால் குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற பட­கொன்று ஞாயிற்­றுக்­கி­ழமை கவிழ்ந் ­ததில் 5 சிறு­வர்கள் உட்­பட குறைந்­தது 17 சிரிய பிர­ஜைகள் கடலில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ளனர்.




துருக்­கிய விடு­முறை வாசஸ்­தல நக­ரான பொட்­ர­மி­லி­ருந்து கிரேக்க லெரொஸ் தீவை நோக்கிப் பய­ணித்த மரப் படகே இவ்­வாறு கவிழ்ந்­துள்ளது.கவிழ்ந்த அந்தப் படகில் வெளி­யேற முடி­யாது சிக்கிக் கொண்ட குடி­யேற்­ற­வா­சி­களே இந்தப் படகு அனர்த்­தத்தில் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
இந்­நி­லையில் உயி­ரி­ழந்த குடி­யேற்­ற­வா­சி­களின் சட­லங்­களை துருக்­கிய கரை­யோர காவல் படை­யினர் மீட்­டுள்­ளனர்.அந்தப் பட­கி­லி­ருந்த ஏனைய 20 குடி­யேற்­ற­வா­சிகள் உயிர் தப்பி கடற்­க­ரைக்கு நீந்தி வந்­துள்­ளனர்.
மேற்படி குடி­யேற்­ற­வா­சிகள் அனை­வரும் உயிர் காக்கும் மேலங்­கி­களை அணிந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.இந்­நி­லையில் இந்த சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த குடி­யேற்­ற­வா­சி­களின் சட­லங்கள் பொட்ரம் நக­ரி­லுள்ள சவச்சாலையொன்றில் அடையாளம் காணப்படுவதற்காக வைக் கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்தி கள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி 






ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது

28/09/2015 இலங்கை தொடர்பிலான அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் வைகோ உள்ளிட்ட 200 ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதன் போது வைகோ உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நன்றி வீரகேசரி 













படகில் குண்டு வெடிப்பு : உயிர் தப்பிய மாலைத்தீவு ஜனாதிபதி

28/09/2015 மக்காவில் ஹஜ் யாத்திரையை முடித்து விட்டு இன்று காலை டெல்லியிலிருந்து மாலத்தீவு திரும்பியபோது படகு வெடித்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் உயிர் தப்பியுள்ளார்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்த ஜனாதிபதியின் மனைவி பாத்திமா இப்ராஹிம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த விசாரிக்கும் புலனாய்வாளர்கள் சம்பவத்துக்கான காரணம் குறித்து இன்னமும் எதுவும் கூறவில்லை என்று டெல்லியில் உள்ள மாலைத்தீவு தலைமை தூதர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 








தாய்­லாந்தைத் தாக்­கிய சூறா­வளி

29/09/2015 தாய்­லாந்தை திங்­கட்­கி­ழமை மாலை துஜுவான் சூறா­வளி தாக்­கி­யுள்­ளது.

இந்த சூறா­வ­ளி­யை­யொட்டி முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக 7,000 க்கு மேற்­பட்ட மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.
மேற்­படி சூறா­வ­ளியால் அந்­நாட்டின் வட பகு­தி­யி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வீடு­க­ளுக்­கான மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த சூறா­வ­ளியில் சிக்கி எவரும் காயமடைந்ததாக இதுவரை அறிக்கையிடப்படவில்லை.


நன்றி வீரகேசரி










மும்பை தொடர் குண்டு வெடிப்பு : 5 பேருக்கு மரண தண்டனை - 7 பேருக்கு ஆயுள் தண்டனை





30/09/2015 மும்பையில் ரயில்களில் இடம்பெற்ற  தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொர்பில் கைது செய்யப்பட்ட 12 குற்றவாளிகளில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 188 பேர் உயிரிந்ததுடன் 829 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி











No comments: