உலகச் செய்திகள்

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் இரு­வ­ருக்கு மர­ண­தண்­டனை

ஆப்­கா­னிஸ்­தானில் தலிபான் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் 11 படை­வீ­ரர்கள் பலி

இந்தோனேசியா விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு

யேமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி; 41 பேர் காயம்

40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: மிசேல் ஒபாமா அதிரடி அறிவிப்பு


ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் இரு­வ­ருக்கு மர­ண­தண்­டனை

29/06/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் இரு­வ­ருக்கு துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனையை நிறை­வேற்­றி­யுள்­ளனர். சிரிய ரக்கா நகரில் இந்த மர­ண­தண்­ட­னைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.



வீதி­க­ளி­னூ­டாக ஊர்­வ­ல­மாக அழைத்துச் செல்­லப்­பட்ட அந்த இரு­வரும் 'மிக்21' விமா­ன­மொன்றின் சிலைக்கு முன்­பாக மண்­டி­யிட்டு அமர்ந்­தி­ருக்க நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கின்­றனர்.
இத­னை­ய­டுத்து இரு முக­மூடி அணிந்த இரு துப்­பாக்­கி­தா­ரிகள் அந்த இரு­வ­ரதும் தலையில் துப்­பாக்கிச் சூட்டை நடத்தி அவர்­களைக் கொல்­கின்­றனர்.
ஆயு­தம்­தாங்­கிய பெரு­ம­ளவு பொது­மக்கள் மற்றும் தீவி­ர­வா­திகள் முன்­பா­கவே இந்த மர­ண­தண்­டனை நிறை­வேற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன.
சிவப்பு நிற பிளாஸ்டிக் ஆடைகள் அணி­விக்­கப்­படும் அந்த நபர்­க­ளது சட­லங்கள் சிலு­வை­யொன்றில் கட்டித் தொங்­க­வி­டப்­ப­டு­கின்­றன.
இந்­நி­லையில் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­யினர் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் 14 இலக்­குகள் மீது தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளன.
அவற்றில் 4 தாக்­கு­தல்கள் துருக்­கிய எல்­லை­யி­லுள்ள கொபேன் நகரில் இடம்­பெற்­றுள்­ளன.

கொபேன் நகரை கைப்பற்றும் முகமாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 145 பேர் பலியாகியுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.   நன்றி விரகேசரி 











ஆப்­கா­னிஸ்­தானில் தலிபான் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் 11 படை­வீ­ரர்கள் பலி

30/06/2015  ஆப்­கா­னிஸ்­தானின் மேற்கு ஹேரத் மாகா­ணத்தில் தலிபான் தீவி­ர­வா­திகள் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 11 ஆப்கான் படை­வீ­ரர்கள் பலி­யா­கி­யுள்­ளனர்.

காருக் மாவட்­டத்தில் படை­யினர் பய ணம் செய்த வாகனத் தொட­ர­ணியை இல க்­கு­வைத்து நடத்­தப்­பட்ட இந்தத் தாக்­கு­தலில் 6 க்கு மேற்­பட்ட படை­வீ­ரர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.
தொடர்ந்து அங்­கி­ருந்து பெருந்­தொ­கை­யான ஆயு­தங்­களை தீவி­ர­வா­திகள் கடத்திச் சென்­றுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தனர்.

கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து படை­யி­ன­ருக்கு எதி­ராக தலிபான் தீவி­ர­வா­திகள் தாக்­கு­தல்­களை நட த்தி வரு­வது அதி­க­ரித்­துள்­ளது.
இந்­நி­லையில் அந்­நாட்டில் இந்த வரு­ட த்தில் முந்­திய வரு­டங்­களை விடவும் மோச­மான வன்­மு­றைகள் இடம்­பெ­றலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.
ஆப்­கா­னிஸ்­தா­னி­லான நேட்­டோவின் படை நட­வ­டிக்கை 13 வரு­டங்­களின் பின் கடந்த டிசம்பர் மாதம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது.
இந்­நி­லையில் உள்­நாட்டுப் படையி னருக்கு பயிற்சி மற்றும் ஆதரவுகளை வழங்கும் முகமாக சொற்ப படையினர் மட்டும் அந்நாட்டில் தொடர்ந்து தங்கியுள் ளனர்.   நன்றி விரகேசரி








இந்தோனேசியா விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு

01/07/2015 இந்தோனேசியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் தயாரிப்பான ‘சி–130 ஹெர்குலிஸ்’ என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்தோனேசிய நேரப்படி நேற்று மதியம் 12.08 மணிக்கு சுமத்ரா தீவில் மேதன் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேட்டுனா தீவுக்கு 113 பேருடன் புறப்பட்டு சென்றது.
 இதில் 3 விமானிகள் , சிப்பந்திகள் உட்பட 101 பேர் பயணிகள் இதில் பயணித்துள்ளனர். இவ்வாறு பயணித்தவர்கள் விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர்.

இந்நிலையில், குறித்த விமானம் புறப்பட்டுச்சென்ற 2 நிமிடங்களில் விமானப்படை தளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. மக்கள் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து எரிந்ததில் அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் என்பன எரிந்து பலத்த சேதம் அடைந்தன. 
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். இந்த விபத்தில் 30 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.
பின்னர் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இறுதியில் விமானத்தில் பயணம் செய்த அத்தனைபேரும்  பலியாகி விட்டதாகவும்  கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் அகப்பட்ட பொதுமக்களும் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்ததுள்ளது. விமான விபத்துக்கு இயந்திரக்கோளாறு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் விபத்துக்குள்ளான விமானம் 51 ஆண்டுகால பழமை வாய்ந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி விரகேசரி








யேமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி; 41 பேர் காயம்

02/07/2015 யேம­னிய ஏடன் நகரில் கிளர்ச்­சி­யா­ளர்கள் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 20 பொது­மக்கள் பலி­யா­ன­துடன் 41 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

அல் மன்­சூரா பிராந்­தி­யத்தின் மீது நடத்­தப்­பட்ட ஏவு­கணைத் தாக்­கு­த­லி­லேயே இவ்­வாறு பொது­மக்கள் பலி­யா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அதே­ச­மயம் சிறைச்­சா­லை­யொன்­றி­லி­ருந்து அல் கொய்தா சந்­தே­க­ந­பர்கள் உட்­பட சுமார் 1500 கைதிகள் தப்பிச் சென்­றுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.
மத்­திய தாயிஸ் நக­ரி­லுள்ள சிறைச்­சா­லையில் இடம்­பெற்ற மோதல்­க­ளை­ய­டுத்தே கைதிகள் தப்பிச் சென்­றுள்­ளனர்.
கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றார்கள் என்பது தொடர்பில் அறியப்படவில்லை.    நன்றி விரகேசரி









40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: மிசேல் ஒபாமா அதிரடி அறிவிப்பு

02/07/2015 அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்பாக புகைப்படம் எடுப்பதற்கு 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி  மிசேல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

 அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் வெள்ளை மாளிகை பாதுகாப்பு மிகுந்த இடமாகும். அரசின் அறிவிப்புகள் வெளியாகும் இடம் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 40 ஆண்டுகளாக அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கமராக்களில் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அங்குள்ள பென்சில்வேனியா அவென்யூவில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும், அந்நாட்டின் முதல் குடிமகளுமான மிசெல் ஒபாமா 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாறாக, புகைப்பட துறையை ஊக்குவிக்கும் வகையில் புதிய அடையாளத்துடன் வெள்ளை மாளிகை இனி திகழும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 
சுற்றுலா பயணிகள் இனி வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், பிளாஷ், வீடியோ மற்றும் நேரடி ஒளிபரப்புகளுக்கு தடை நீக்கப்படவில்லை. ஓரிரண்டு சாதாரண புகைப்படங்கள் மாத்திரமே எடுத்துக் கொள்ள முடியும்.    நன்றி விரகேசரி





No comments: