' விழுதல் என்பது ' நிறைவுப் பகுதி: 2 சுசிகரன் பசுபதி (இலண்டன்)

.


கனடாவில் இருந்து ஜேர்மனிக்கு வந்த கலாவை ( பத்மகலா ) சீலன் காரில் பிராங்பேர்ட் விமானநிலையம் சென்று ஏற்றி வந்து கொண்டிருந்தான் .
முரளியும் கலாவின் அக்கா மல்லிகாவும் இணைந்து ஏதாவது சதி செய்து தனது திருமணத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் இன்னும் அவனை விட்டு போகவில்லை .
நேரம் இரவு 7 மணியாகிக்கொண்டிருந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. ஏனோ  கலாவுக்கு முகம் சரி இல்லை . அவள் பேச்சு பசுமை இன்றி வெறும் சம்பிரதாயச் சொற்களாக இருந்தது.
ஒருவேளை தான்  பிராங்பேர்ட்டுக்கு  வர தாமதமாகியதுதான் காரணமோ என எண்ணினான் .  ஆனாலும் அவள் முகம் செம்ஜம்பு பழம் போல சிவந்திருந்தது.
அவள் சீலனை எதிர்பார்த்து விமான நிலையத்தில் ஒவ்வொரு இடமாக இருந்து இருந்து எழும்பி அலுத்து விட்டாள் . ' இதோ




வந்துகொண்டிருக்கிறேன்ää  இந்தா இன்னும் அரை மணித்தியாலத்தில் வந்துவிடுவேன்'  என்ற சீலனை ஒரு மணித்தியாலம் ஆகியும்  காணவில்லை என  எண்ணிக் கொண்டிருக்கையில்தான்  முரளி போன் பண்ணினான் ää  „என்ன கலா இப்ப எங்க நிக்கிறீங்கள்'  என்றவனிடம் ää நான்  சீலனை பார்த்துக்கொண்டு  எயாப்போட்டில்  நிற்கிறேன்  என கூற முரளி  ஐந்து  நிமிடத்தில் வந்து அருகில் உள்ள உணவகத்திற்கு  அழைத்து சென்றுவிட்டான்.
பின்  தான் தங்கி இருந்த நண்பனின் வீட்டுக்கு கூட்டிச்சென்றான்.  அந்த விலாசத்திற்கு சீலனை வருமாறு கலா மூலமாக கேட்டுக்கொண்டான். முரளி- சீலன் இருவரும் பேசுவதில்லை.  எல்லாம் கலாவை யார் திருமணம் செய்வது என்ற  போட்டியால் வந்த சர்ச்சை .
கார் விரைவுப்  பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. ஓரிரு வாகனங்கள் அவ்வப்போது பின்னால் இருந்து வந்து கடந்து போனது. இன்னும் மழை விட வில்லை.  மெதுவாக தூறிக்கொண்டு இருந்தது.
வண்டி  தண்ணீரில் மிதப்பதுபோல ஆனால் வேகமாக சென்றுகொண்டிருந்தது. ஜேர்மனிய வெள்ளைக்கார நண்பர் ஜோசப் காரை லாவகமாக அதேவேளை நிதானமாக ஓட்டிக்கொண்டிருந்தார் .
கலாவுக்கு பயண அலுப்பு சீற்றில் சாந்தபடி தூங்கிவிட்டாள். காரினுள் இருந்த இருட்டு எல்லோரையும் போர்த்தியிருந்தது. அந்தப்  பயணச்சு10ழல் நல்ல இதமான கதகதப்பான அனுபவமாக இருந்தபோதும்  அவை ஒன்றிலும் சீலனின் புலன் லயிக்க வில்லை.
அவனின் மனம் கடந்து வந்த பாதையையும் ää சந்தித்தவர்களையும் ää சம்பவங்களையும் மாறி மாறி சுற்றி வந்துகொண்டிருந்தது.
முதல் முதல் வெளிநாடு வந்தபோது இருந்த மனநிலை இப்போது துண்டற மாறி இருந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் படையினரால் கைது செய்யப்பட்டபோது கருக்கொண்ட இந்த வெளிநாட்டுப்பயண எண்ணம் முதற்கட்டத்திலேயே  எதுவும் பிடிக்காமல் பைத்தியம் மட்டும் பிடிக்கும் நிலையில் இருந்தது.
அன்று சுவிசில் அந்த வெள்ளைக்காரார் இறங்கசொன்ன இடத்தில் கால் வைத்து ஆரம்பித்த  ஐரோப்பிய வாழ்க்கைப்பயணம்ää உயிரை உறையவைக்கும் பல தருணங்களை தனித்தே கடந்து நாளை முதல் சுமுகமாக இன்னொருவரின் துணையுடன் வேறொரு இன்பப் பாதையில் பயணிக்க இருக்கிறது .
எனக்கும் கலாவுக்கும் நாளை திருமணம் என நினைக்கையில் மனம் விரிந்து உடல் பூரித்தது . கிழக்கிலங்கை பெண்ணுடனான வாழ்வை இந்த மேற்கத்தேய  திசையில் கட்டி முடிக்க உதவியவர்களை நன்றியோடு எண்ணிப்பார்த்தான்.
சுவிஸ்  கோப்பிக்கடையில் கண்ட முதல் ஐரோப்பிய வாழ் தமிழ் மகன் ää முதல் முதல் தனது தமிழை பிறமொழியாக்கிய மொழிபெயர்ப்பாளர் இராஜேஸ்வரன் ää கூட  குடியிருந்த தவத்தார் ää முதல் முதல் அம்மாவிடம் பேசிய சுவிஸ் கட்டணத் தொலைபேசிää அருகிலே கண்ட முத்தமிடும்  பூங்கா காதலர்கள் ää முத்தம் என்றதும் தான் ஏன் நானும் ஒருமுறை கலாவை கொஞ்சினால் என்ன ..? பின் சீற்றில்தானே இருக்கிறாள். களவின்பத்தை ஒருமுறை கண்டுவிட்டால்  என்ன...?  நாளை கட்ட போறவள் தானே ; சீச்சீ......- " தொடுகையற்ற தமிழ்க்காதல் ;  உணர்வுகளால்  மீண்டும் ää மீண்டும் உயிர்ப்புடன்  துளிர்க்கும் " என ஞாபகம் வரவே  இன்னும் ஒரு நாள் தானே - நாளை பார்க்கலாம் - என அவ் எண்ணத்தை விட்டுவிட்டான்.  ஆனாலும் கலா - இப்போதும் சீலனே கணவன் - என்ற நினைப்பில் வாழ்பவள்  என நினைக்கும் போது  எங்கோ ஏதோ செய்தது.  கூடவே அவளை இறுதியாக ஊரில் கண்டது நினைவில் வந்தது.
சுதந்திரதினத்திற்கு கறுப்புக்கொடி கட்டியமை ää முரளி காட்டிக்கொடுத்தது . " மருத்துவர் பத்மகலாவாகத்தான் பார்க்க வேண்டும்" என்று விட்டு காதலி கலாவிடம் இருந்து விடைபெற்றது ää " முடிந்தவரை உழைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பு " என்று பேசிய அவுஸ்ரேலிய குணரட்ணம் வரை நினைத்தான் ää பழையவையே தன்னை இங்கே கொண்டுவந்த பாலங்கள் . அந்த ஏணிப்பாலங்களை எண்ணுகையில்  நன்றியுணர்வு பெருக மனம் அமைதி அடைந்தது.

மக்டொனால் வேலை எடுத்து தந்த டானியல் அண்ணன்  ää கூட வேலை செய்த நண்பன் மகேந்தி ää அவன் சொன்ன - போடர் கடக்கும்போது-  கூட பயணித்த செல்வம் என்பவன்  பனியாற்றில் புதைந்து செத்த கதை ää புருசோத்தை குளிர் கொன்ற - அவலக்கதை ää விமானத்தையே வாடகைக்கமர்த்தி உறவுகளை இக்கரையில் சேர்த்த  ஏஜென்சிகளின் சாகசக்கதை ää உயிர்வாழ  படகேறிய உறவுகளின்  உயிர் பறித்து உடல் கரைத்த அவுஸ்ரேலிய கடல்கதை ää பேரவலத்தின் பிறிதொரு சொல்லான முள்ளிவாய்க்கால் என வரிசைய் எண்ணத் திரையில் வர  மனம் நடுங்கியது .

தான்  இங்கு வர உதவிய முகம் ää பெயர் ää ஊர் தெரியாதவர்கட்கும் உதடுகளுக்குள்ளே நன்றி நினைத்தான். சக சிங்களவர்கள் கூட அதிலிருந்தார்கள். என்னே ஒரு அவலப் பெரும் பயணம் .
தமிழா...... !
சுதந்திரம் அவ்வளவு சுலபமானதல்ல.
பட்டதை சொல்லி
கட்டி அழுவதை விட்டு
முட்டி மோது....
விழ விழ எழு ....ää
விதை விழாது முளை ஏது ....ää?
விழுதலே எழுதலின் முதற்படி அல்லவா ?
- விழுதல் என்பது - அதுவே
என மனத்திரையில் ஒரு பெரு வெடிப்பு தோன்றி மறைய உடல் சிலுர்த்தது.
வலியாகவும்ää   ஏமாற்றமாகவும்  தமிழராய் இங்குள்ள எல்லோர் குரலின்  அடியிலும் சொல்லாத சொற்களாக படிந்திருப்பது சோகமே......
சொற்கள் என்றதும் அதன் முதல் சொந்தக்காரர் அம்மா நினைவுக்கு வந்தார். அம்மாவை கொழும்புக்கு மாற்றி பின் யாழுக்கே அழைத்ததையும் ää அதற்காக கடனாக தன்னை நம்பி முதல் முதல் மூன்று லட்சத்தை தந்துதவிய பானுவும் வந்துபோனாள் .
யாழ் பல்கலைக்கழகத்தில்  துளிர்த்த நட்பை மறக்காமல்  இங்கும் வந்து பார்த்து சென்ற தொப்புள் கொடி உறவு பேராசிரியை மங்கயற்கரசியும் மனதில் நின்றார்.
கண்ணால் இப்புற தேச உலகை காண முன்; செய்தித்தாள் மூலம் படித்து அறியும் வகை செய்த   அம்மையா பிரக்கராசி கந்தவடிவேலரைதான் விட்டுவிட முடியுமா ää டென்மார்க்கில் மாரிமுத்து வடிவில் இருந்த சீலனை  கண்டுகொண்ட மொழிபெயர்ப்பாளன் சாந்தனின் உதவிää  காந்தன் அண்ணா மூலம் கிடைத்த  புடவைக்கடை வேலைää அதன் தங்க மனசுக்கார முதலாளி ஆனந்தர்ää வழிப்பறியில் எல்லாவற்றையும் இழந்து இன்னுமொருமுறை  விழுந்து  நொந்த போது - என்னைப்பற்றிக்கொண்டு எழுந்து வாடா சீலா.... ! என நான் காருக்குள் நித்திரையில் இருக்கும் போதே மன்றொரு போடரை கடந்து வந்த  விவேக் அண்ணனை ää  எல்லாம் இழந்த  யோசனையால் வந்த தலையிடியை எதை  மறக்கமுடியும்.
நல்லவர் மட்டுமா பாதையில் வந்தார் தங்கையின் திருமணத்திற்காக சேர்த்த உழைப்பை சீட்டு என்ற பெயரில் சுறுட்டிக்கொண்ட சிவம்ää  ' இன்னொருவன் மனைவி பானுவோட சுத்துறியாம் ' என்ற கலாவின் சுடு சொல.; பின்ää அருகில் அக்கா மல்லிகா நின்றதால்தான் அப்படி கேட்டேன்  என நீரூற்றி அணைக்கப்பட்டமைää இவற்றின் பின்னுள்ள சூத்திரதாரி முரளிää மன்னித்தாலும்  இவற்றை மறக்கமுடியுமா... ?-
சங்கம் வளர்த்து சண்டை பிடிக்கும் கூட்டமும் அவன் எண்ண திரையில் வந்து போனது.
துன்ப சங்கட நிலை ஓரளவுக்கு முடிவுக்கு வர  சந்தோச சங்கம் பிறந்தது. விசாவுடன் வேலை வந்ததும் மாமா பத்மநாதன் மகள் சாம்பவியை சீலனுக்கு மனைவியாக்க விரும்பினார். சத்தியநாதன் அண்ணனின் மகள் குமுதாவை கட்டிவைக்க லண்டோவ் நகர் நல்லுள்ளங்கள் முயன்றன . பல வரன் தேடி வந்ததை நினைக்கääதேடி வந்து கட்டி கைவிட்ட சுபத்திரா மனதில் நிழலாடினாள்.
வெளிநாட்டு மாப்பிள்ளைத ;திருமணம் என்ற பந்தத்தில் சுக்குநூறாகி  விட்ட சுபத்திராவை விபச்சாரத்தில் தள்ளிவிட்டதை எண்ணும்போது மனம் புண்ணாகியது.
இன்றும் வெளியில் சொல்ல முடியாது உள்ளே புளுங்கி தினமும் நசிந்து பிள்ளைக்காகவும்ää குடும்ப பேருக்காகவும் வாழ்வை தாங்கி பயணிக்கும் பெண்ணினத்தை எண்ணுகையில் ஏக்கமே மிஞ்சியது. .
ஆஸ்திரியாவில் கணவனிடம் போக வந்த சாந்தி ஏஜென்சியால் கசக்கி மணக்கப்பட்டதையும்  பின் அவனையே குத்தி கொன்றுவிட்டு ஏழாம் மாடியில் இருந்து - என்னை மன்னித்துவிடுங்கோ அண்ணா - என ஆறுதல் சொன்ன சீலனிடம் கூறியபடி குதித்து இறந்தவளை நினைக்க ஒரு பெரு மூச்சு வந்துபோனது.
கார் வண்டியோ இது எதையும் காதில் வாங்காதது போல லண்டோவ் நகரை நோக்கி நெடுஞ்சாலை ஏ 65 ( அவுட்டபான் - யு 65 ) இல் ஓடிக்கொண்டு இருந்தது.
மழை இப்போது விட்டிருந்தது. வயிறு தானும் அவனுடன் பயணிப்பதாக கிள்ளி காட்டியது. மனம் உணவை நாடவில்லையாயினும் வயிறு பசிக்கவே செய்தது.
முதல் முதல் ராமலிங்கத்தாருடன் தவம் வீட்டில் சப்பிட்ட ஊர் சாப்பாடு நினைவை நிரப்பியது . கூடவே ஊரில் இருந்து பேசி வந்த மாப்பிள்ளை முரளி - காலை கட்டிய தாலியோடு - இரவு ஆபிரிக்க காதலனுடன் ஒடிய நிரோஜா  ää மைத்துனன் குணாவின் குடி மரணம்ää  தொடர்ந்து கிடைத்த சுவிஸ் அகதி அனுமதிää கனடாவில் இருந்து  ' உங்கள் பத்மகலா ' என முதல் முதலாய் அழைத்த காதலி கலாவின் குரல் ää  முரளி கலாவை அடைய காதல்வாழ்வில் குறுக்கிட்டு முடியாமல் போக - இருவரையும் பிரிக்க முயன்றது - என கடந்து வந்த  நெடிய பாதையை ஒரு மின்னல் ஒளியில் கருமுகிலை காண்பது போல கண்டு மீண்டான் சீலன். வண்டி ஒரு பெரு வளைவில் திரும்பி ஓடிக்கொண்டு இருந்தது.
கனடாவில் இருந்து வந்ததில் இருந்து கலா இன்னும் சரியாக பேசவே இல்லை . முரளியோடு அவள் நின்றதை அவளே சொல்ல கேட்டதில் இருந்து சீலனின் மனம் ரணமாக வெந்துகொண்டிருப்பது என்னவோ உண்மைதான்.
ஆனால் பலத்த மழை காரணமாக ஒரு விபத்து நடந்து செடுஞ்சாலை மூடி விட்டிருந்தார்கள். வேறு மாற்று வழி ஊடாக போய் அழைக்க தாமதமாகிவிட்டது.
அதற்குள் முரளி வந்து விட்டான் . அவனுக்கு நம்பர் கொடுத்தது கலாவின் அக்கா மல்லிகாவாகத்தான் இருக்கும் என எண்ணினான் . மல்லிகா ஒன்றும் கனடாவில் இருந்து இந்த காரியத்தை செய்யவில்லை .
கலா - சீலன் திருமணத்தை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு முன்னரே லண்டோவ் வந்து . இப்போது விவேக் அண்ணனின் வீட்டின் பின்னால் பிரத்தியேகமாக போடப்பட்ட குசினிப்பந்தலில் பலகாரம் சுடும்  சுற்றத்துப்  பெண்களுடன்  இருந்தே இதை செய்திருந்தார்.

தான் தாமதித்ததை எண்ணியே கலா மனம் நோகுறாள் என பேசாமல் வந்தான் சீலன். அவளோ தான் முரளியிடம் பேசியது இவனை புண்படுத்தி இருக்கும் அதுதான் பேசாமல் வருகிறான் என நினைத்தாள்.
நீண்ட கால இடைவெளிக்கு பின் ஒருவரை ஒருவர் கண்ட கதலர்கள் என்றோ  அல்லது நாளையே திருமணமாகி தம்பதியராகப் போகும் இருவர்  என்றோ இல்லாமல் எந்த வித ஆரவாரங்களும் இன்றி இருந்தார்கள்.
உண்மையான பாசமுள்ளவர்கள் மத்தியில் இப்படி அடிக்கடி பிரச்சனை நடக்கும் . பின் எந்த சமரசமும் இன்றி மறு கணம் கட்டிப்புரளுவார்கள் என்பது போல இருந்து இவர்கள் இருவரினதும் நடவடிக்கை .
கலாவுக்கு கனடா - ஜேர்மனி நீண்ட விமான பயணம்.   ää பின் காத்திருப்பு  ää  கார் பயணம் என தொடர் பயணத்தால் வயிறு குமட்டி கொண்டு வந்தது .  மென்மை அதிகமான பெண்மை அவள். அவள் அதை மறைத்தாலும் ஓங்காளிப்பு குமட்டலை காட்டிக்கொடுத்தது.
இதனை அவதானித்த சீலன் முதல் வரும் தேனீர் அருந்தும் இழைப்பாறிடத்தில்  காரை நிறுத்துமாறு ஜோசேப்பிடம் கேட்டுக்கொண்டான்.
இடைத்தரிப்பிடம் வந்ததும்  அவளுக்குக் கழுவுமிடம் ( பாத்றூம் ) இருக்கும் இடத்தை காட்டி விட்டான் . அழைத்து வந்த அவனின் முன்னாள் முதலாளியும்  நண்பருமான காரோட்டி ஜோசப்  மூவருக்கும்  தேனீர் வாங்கி வந்தார். கலா ' தனக்கு வேண்டாம் வயிறு சரியில்லை இப்போதுதான் முரளியுடன் குடித்தேன் ' என்றுவிட்டாள் .
கலாவுக்கு  லீவு தாமதமாகவே கிடைத்திருந்தது  ஆனால் ஒருமாத லீவு . திருமணத்தின்  பின் என்ன செய்வதென்பது இருவரும் கூடி பேசிதான் முடிவு பண்ணவேண்டும்.
நாளைய திருமணத்தில் மணப்பெண்ணாக மணவறையில் இருப்பதை தவிர தான் எந்த உதவியும் செய்ய முடியாமையை எண்ணி உள்ளூர வருந்தவே செய்தாள் கலா . மணப்பெண் முக அலங்கார வேலைகள் ஆரம்பித்தால் வேறு எந்த வேலையும் செய்யவும்  முடியாது .
மீண்டும் இடைத்தரிப்பிடத்தை நீங்கி வண்டியை  ஓட்ட ஆயத்தமானார் ஜோசப் .  சீலன் இம்முறை கலாவுடன் பின் சீற்றில் இருந்தான் . கலாவோ சற்று நேரத்திலெல்லாம் சீற்றில் சோர்ந்து சய்ந்து  தூங்கிவிட்டாள்.
பெண்வீட்டாருக்கு என டேவிட்  அங்கிள் விவேக் அண்ணன் மூலமாக ஒழுங்கு செய்த சஹானி  வீட்டிற்கு வரும் வரை கலா தூக்கத்திலேயே இருந்தாள் . லண்டோவ் பகுதி வீடுகளும் யாழ்ப்பாணத்தைபோல் தனித்தனியே வெட்டி வீதியாக இருந்தன  . மணமகன் வீடும் மணமகள் வீடும் ஒரே ஒழுங்கையில் ஐந்து வீடு தள்ளி தள்ளியே  இருந்தது.

0000

எங்கிருந்து தான் கொண்டு வந்தார்களோ மணப்பந்தலில் செவ்விளநீர் கட்டிய கதலிக்குலையுடன் வாழைகள் இரண்டு அழகாக கட்டப்பட்டிருந்தது. ஒழுங்கையோர வாசல் மேசையில் கம்பளம் விரித்து நெல்லு பரப்பி வைத்த கும்பமும் ää இரவு தூறலில் நனைந்த மெல்லிய ஈர நிலமும்  வீதியோர பச்சைப்புல்லும் ஒருகணம் ஊரை நினைவூட்டியது.
ஏனோ ஊரை நினைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியும் பின் சிறு மனவருத்தமும் வந்தே போகிறது . எமதூராய் இருந்தாலும் அது எமக்கில்லை. எம் பிள்ளைகளுக்கானதும் இல்லை . இனி அது எமது கனவுக்கு மட்டுமே சொந்தமானது என்ற மனவருத்தம் அது.
மண்டபம் எடுத்து குறித்த மணிநேரந்துக்குள் முண்டி விழுங்கி விட்டு ää பின் அவரவர் வண்டியில் கிண்டி கிழம்பி காணாமல் போகும்.; ஒரு நண்டு திருமணமாக இல்லாமல் இப்படி வீட்டில் நடாத்த முடிவெடுத்தவரை கட்டி அணைத்தொரு முத்தமிட தோன்றியது.

மணப்பந்தல் சோடனை பூக்கள் காற்றிலாடி மின்னின. நீள பந்தலை நீலநிற கதிரைகள் இரண்டாக பிரித்திருந்தன . திருமணத்திற்கே கட்டிய வீடு போல் விவேக் அண்ணனின் வீடு கம்பீரமாக நின்றது. கண்ணாடியில் பட்டு தெறித்த ஒளி போல் காலை வெய்யில் மஞ்சளும் சூடும் குறைவாக இருந்தது.
சு10ரியகாந்தி பூவில் பறக்கும் வண்ணத்திப்பூச்சிகள் போல புத்தாடை அணிந்த இளவயதினர் குறுக்கும் நெடுக்குமாக ஒருவரை ஒருவர் கலைத்துக்கொண்டு  காலை ஒளிக்குள் ஓடிவந்து போய்க்கொண்டிருந்தார்கள் . அவர்கள் பின் குட்டி பூனையளவு நாய் ஒன்றும் ஓடித்திரிந்தது. வாசனை படர்ந்த பட்டு சேலைகளுடன் கலியாணவீட்டிற்கு வந்து கொண்டிருந்த  பெண்கள்  அச்சுற்றத்தை ரம்மியமாக்கினார்கள்.
அது எப்படியோ தெரியவில்லை பட்டு சேலையில் பருமனான பெண்களும்   பனங்கிழங்கு போலவே இருந்துவிடுகிறார்கள். பட்டு வேட்டியில் பட்டு தெறித்த சிறு கீற்றொளி ஆங்காங்கே தூர  மின்னல் போல  கண்ணை கூசியது   ' அடடா....  என்னே ஓரு இதமான தமிழ் பண்பாட்டுச் சு10ழல் ' என ஜேர்மனியர்கள் கூடி நின்று ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
வாழ்த்த வந்தவர்களால் மணப்பந்தல் நிறைந்திருந்தது  ää  மாதுளம்பூ நிறத்தில் இருந்த மணவறையில்  ஓமசாலை முன் இருந்த இரு அந்தணர்களுக்கு அருகில் சீலன் மாப்பிள்ளை கோலத்தில் எடுப்புடன்  வீற்றிருந்தான் . அவனின் பார்வை பந்தலோரம்  சுற்றிவந்தது. அவனை தோள் கொடுத்து தாங்கிய பல நல் உள்ளங்கள்  நெடு மையில் கடந்து  வந்திருந்தார்கள்.
குமாரவேல் பேராசிரியர் மனைவியுடன் முன் வரிசையில் இருந்தார். மக்டொனால்ட் மகேந்தியும் பானுவின் கணவரும் புடவைக்கடை முதலாளி ஆனந்தரும் வெற்றிலை போட்டபடி ஏதோ பந்தலை காட்டி பேசிக்கொண்டிருந்தார்கள்  ää  சுபத்திரா தலையில் கனகாம்பர பூச்சரத்துடன் ஓரமாக இருந்து சீலனை பார்த்து மெல்ல நகைத்தாள் .
அக்கால தமிழ் மரபு ஒன்று எல்லாவற்றையும் கவிதையாக பாடி விடுவது  . அது காலம் கடந்தும் பாடலாக வாழ்ந்துகொண்டிருக்கும் . அவ்வாறு நெடுந்தீவில் ஒரு திருமண பந்தலில் வீற்றிருந்தவர்களை பாடிய  பாடல் ஒன்று சீலனுக்கு நினைவில் வந்தது . பழைய காலத்தில் பெயரிலும் பட்ட பெயரே அதிகம் பயன்படுத்தப்படும். நெடுந்தீவு தேசத்தில் ஒரு துடிப்பான பெண்ணின் திருமணத்தில்
" ஆரார் கொலுவிருந்தார் ஆனசிங்கி பந்தலிலே .....
வீணானவாயர் வெறுவாயர் அங்கிருந்தார்
வேறார் கொலுவிருந்தார் ஆனசிங்கி பந்தலிலே .....
உப்பு சிரட்டையோடு உவல்பேத்தை அங்கிருந்தார்.
ஆரார் கொலுவிருந்தார் ஆனசிங்கி பந்தலிலே .....
கூடம் இறுக்கவென்று கும்பகுடம் அங்கிருந்தார்.

சீட்டு சிவத்தின் வீட்டில் இருந்த நண்பன் சிறிராமச்சந்திரன்  அனுமான் என செல்லமாக அழைக்கப்பட்டானே அவன் கூட மூலையில் இருந்து சீலனை பார்த்து சிரித்தான்.  சிவத்தைபற்றி அவனிடம் கேட்க வேண்டும் என நினைத்தான் சீலன் . தனது 20 ஆயிரம் பிராங் பணத்தை என்ன செய்தான் ? உள்ளேயா வெளியேயா ää இறுதி வரை அவன் எனக்கு கடனாளியாவேதான் இருக்க போகிறானா.... என சிந்தனை ஓடியது.
மறுபுறம் பொம்பிள பகுதி வீட்டில் பத்மகாலவுக்கு மணமகள் அலங்காரம் நடந்துகொண்டு இருக்கவேண்டும். ஆனால் அது இன்னமும் ஆரம்பிக்கவும் இல்லை.
குமுதா அவள்தான் சத்தியநாதன் அண்ணனின் மகள். அதாவது  சீலனுக்கு கனகலிங்கம் மூலம் சம்மந்தம் பேசப்பட்டவள் மிக அழகான புளியம்பூ வண்ண சேலையில் கடற்கன்னி போல வலம் வந்தாள். பார்க்க பொறாமையாக இருந்தது. அவளின் தந்தையின் முகத்தில் தான் ஒரு சோகம் படர்ந்திருந்தது . டேவிட் அங்கிள் காலில் சில்லு பூட்டி இருக்கிறாரா என கூட்டத்தின் ஊடே கூர்ந்து தேடும்படி அங்குமிங்கும்  ஓட்டிக்கொண்டிருந்தார் . அவரே இவ் நிகழ்வின் அச்சாணி. மனைவி மெற்றில்டா அக்கா பெண்வீட்டை இயக்கிக்கொண்டிருந்தார். மகள் சாலினியும் பல்கலைக்கழக விடுமுறை என்பதால் வந்திருந்தாள்.
பானு பலகாரப்பகுதியை பொறுப்பெடுத்திருந்தாள்.  விவேக் அண்ணனின் மனைவி வவா அக்கா கலியாண சமையலை கவனித்தார் . சுவிஸ் தவம் அண்ணர் மேளம்ää ஐயர்ää மணவறைää போன்ற வெளி அலுவல்களை கட்டி மேய்த்தார். ஒலிää ஒளிää வீடியோää போட்டோ விவேக் அண்ணனின் ஏற்பாடு.
எவற்றிலும் பொறுப்பின்றி எல்லாவற்றிலும் மூக்கு நுழைத்து குறை பிடித்துக்கொண்டு இருந்தார் கலாவின் அக்கா மல்லிகா . அவருக்கு இந்த திருமணத்தில் பூரண சம்மதம் இல்லை ஒரு பொழுது போக்கு சம்மதமே . டொக்ரருக்கு படித்துக்கொண்டு இருக்கும் முரளியை கட்டிக்கொடுப்பதே அவரின் எண்ணமாக இருந்து. அது சாத்தியமாகாமல் போகவே ஏனோ தானோ என இங்கு வந்திருக்கிறார்.
எல்லா துறையையும் ஒன்றிணைத்து  நெறிப்படுத்தும் டேவிட் அங்கிளுக்கு உதவியாக அவரின் மகள் சாலினி முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்தாள்.  ஆனால் அவளின் நடை பார்ப்பதற்கு ஒரு அழகிய வண்ண மெல்லிய திரை சீலை அசைவது போலவே இருந்தது. அவள் பேச்சில் வல்லின எழுத்தே இல்லாமல் இருப்பது போல இருந்தது. டொச்சு மொழி நாவில் நனைந்து வந்த தமிழை கேட்க அழகாகதான் இருந்தது. அவள் இங்கு பிறந்த பெண்.

00000

பெண்வீட்டில் மணப்பெண் கலாவுக்கு வயிறு இன்னும் சரி வர இல்லை .
நேற்றில் இருந்து  7 ää 8 தடவைக்கு மேல் வயிற்றாலை போய்விட்டது .
பனிநிலவு மல்லிகை மொட்டு போல இருந்தவள் மத்தியான கீரைப்பிடி போல வாடி இருந்தாள்  . ஏனோ நேற்றில் இருந்து அவளுக்கு சாப்பிடதெல்லாம் உடனே சத்தி வந்தது.
அடிக்கடி பாத்ரூம் போய்வந்ததால் முக ää சிகை ää நக அலங்காரம்  எதுவும் செய்ய  முடியாமல் இருந்தது . ' என்ன நடந்தது இவளுக்கு... ? இப்ப என்ன செய்வது ..? மத்தியானம் 11 மணிக்கு தாலி கட்டு விடிய ஏழு மணிக்கே இப்படி சீலைத்துணி மாதிரி கிடக்கிறாள் " என வவா அக்கா  கலாவின் அக்கா மல்லிகாவை கேட்டபடியே இருந்தார். ' இன்னும் கொஞ்சம் பாப்பம் சரி வந்திடும் ' என்பதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார்  கலாவின் கட்டிலருகில் இருந்த மல்லிகா . இந்த இருவரை தவிர கதை இன்னும் வெளியில் கசியவில்லை .  என்ன சாப்பிட்டாய் கலா என கேட்டதற்கு " விமானத்தில் சானட்;விச் சாபிட்டேன்  .  பின் முரளியுடன்  ரீ குடித்தேன்  " என்றாள் கலா.
கதை வவா அக்காவின் கணவர் விவேக் அண்ணன் ஊடாக  சீலனுக்கு வந்தது.  அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . இந்த திருமணத்தில் கலாவின் அக்கா மல்லிகாவிற்கு  இன்னும் விருப்பமில்லை அவர்தான் நாடகமாடுகிறாரா ?  முரளி நேற்று ஏதேனும் சொல்லி கலாவின் மனதை மாற்றி விட்டானா..? மனதை மாற்றினால் வயிறு ஏன் குளறுபடி செய்ய வேண்டும்ää கலாவுக்கும் இத்திருமணத்தில் விருப்பமில்லையா....?  . இத்தனை தடைகளை தாண்டி வந்தும் இந்த நேரத்திலா இப்படி நடக்க வேண்டும் .
மேலும் ஒரு சிறு ஆனால் பாரதூரமான சொல்லக் கூசும் செய்தி இம்முறை மெற்றில்டா அக்காவின்  கணவர் டேவிட் அங்கிள்  ஊடாக சீலனை வந்தடைந்தது . பொதுவாக இரகசிய அந்தரங்கங்கள்  பரவுவது எவ்வாறோ அவ்வாறுதான்  இந்த செய்தியும் வந்தது .
கலாவின் உடுப்பில் இரத்தமும் இருந்ததாம் . சீலன் என்ன என ஏங்கி முகம் கலவரமடைந்தாலும் மறுகணம் விடையம் அறிந்து  " இது எல்லாம் ஒரு பிரச்சனையா மாதா மாதம் வருவதுதானே " என்றான் . வைத்தியம் படிக்க சென்ற அவனுக்கு  இது தெரியாதா என்ன .
" ஆனாலும் இதனையும் பார்த்துத்தானே  திருமணத்திற்கு நாள் குறிக்கவேண்டும் என்பது கூட ஏன் பெண்வீட்டாருக்கு தெரியாமல் போனது  " என விவேக் அண்ணன் கேட்டார் .
" இதை எல்லம் சொல்லவா முடியும்  " என டேவிட் அங்கிள்  வாதாடினார் .

" சாமத்தியப்பட்டு பிள்ளையே அதை வெளிய சொல்ல வெக்கப்பட்டு இருக்கும் போது கண்டுபிடித்து பறை அடித்து ஊருக்கே சொல்லுவினம் ää இப்படி சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் சொன்னா மட்டும் வெக்கக்கேடா... ?" என்று ஒரு போடு போட்டார் விவேக் அண்ணன் . அவருக்கு தன் வீட்டில் நடக்கும் ஒரு நல்ல காரியம் கெட்டுப்  போகக்கூடாது என்ற பரிதவிப்பு.
சீலனுக்கு எதிராக இயற்கையும் காய் நகர்த்தியது .
இது எதுவும் தெரியாத சபை கலகலவென இருந்தது . பாட்டுப் பெட்டி பாட்டு வேற பாடி மகிழ்த்திக்கொண்டிருந்தது.  இனியும் கலாவுடன் நேருக்கு நேர்  பேசாது பிரச்சினையை தீர்க்க முடியாது என மணவறையை விட்டு எழுந்தான் சீலன்  .
" தம்பி  பொண்ணு வந்து  தாலி கட்டி முடியும் வரை மாப்பிளை மணவறையை விட்டு எழும்பக்கூடாது " என்றார் உருத்திராச்ச மாலை போட்டு  குடும்பி வைத்த சுவிஸ் ஐயர் .
அங்கிருந்தவாறே ஒருவரை தேடினான். பந்தலில் இருந்த நண்பன் அனுமான் „என்ன“  என கண்ணால் கேட்டான் . தூது போக உகந்தவன் அனுமானே என தன் சீதையிடம் அவனை அனுப்ப கண்ணை காட்டி அழைத்தான் . அவன்  எழுந்து எல்லோர் முன்னும் வர வெட்கப்பட்டு  பின் சட்டை பொத்தானை துணைக்கு  பிடித்துக்கொண்டு ஒருவாறு வந்து சீலனின் முகமருகே குனிந்து என்ன என்றான்.
" வலப்பக்க அறை மேசையில் என் போன் சாச் போட்டபடி கிடக்கு எடுத்து வா மச்சான் " என்றான் . போன் கைக்கு வந்ததும் சமையலில் நின்ற வவா அக்காவுக்கு போன் பண்ணி  " போனை கலாவிடம் கொடுங்கள் பேசவேண்டும் " என்றான் .
பாயாசக்கறண்டியுடன் நின்ற வவா அக்கா போனை அருகில் நின்ற மல்லிகாவிடம் கொடுத்து கலாவிடம் கொடுக்க சொன்னார். கலாவின் போன் ஏனோ பதிலின்றி றிங் பண்ணிக்கொண்டே இருந்தது . அருகில் மாப்பிள்ளை தோழன் ää முன்னால் சபையோர்  என எல்லோரும் அவனையே பார்த்திருந்ததால் வெளிப்படையாக பேச முடியவில்லை . குறுந்தகவல் அனுப்பினான் . செய்தி சென்று பதில் வந்துகொண்டிருந்தது.
" உடனுக்குடன் இந்த தகவல்களை அழித்துவிடும் கலா . இன்னொருவரின் போன். உமது போனுக்கும் அடித்தேன் ஏன் பதில் இல்லை . என்ன நடக்குது அங்க ?  அக்கா மல்லிகாவுக்கு இந்த கலியாணத்தில விருப்பமில்லை என எனக்கு முதலே தெரியும்.
„அவா இன்னும் மனம் திருந்த இல்லையா... ? ஏதோ ஏதோ எல்லாம் கதை வருகுது. உமக்கு என்னை கட்ட விருப்பமா ..? இல்லையா....? விருப்பம் இல்லாட்டி நேர சொல்ல வேண்டியது தானே . அதை விட்டிட்டு . நேற்று என்னோட கதைக்காம உம் எண்டு கொண்டு வந்தீர். இண்டைக்கு என்னடா எண்டால் வயித்தாலை ää சத்திää ரத்தம் என்கிறீர்“
„இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் . ஒரு சாறியை சுத்திக்கொண்டு பக்கத்தில வந்திருக்க ஏலாத அளவுக்கு  வருத்தமா... ? கலியாணம் நிண்டு போனால் நாளைக்கு கனடா போயிடுவீர் . நான் இங்க இருக்கிறவன் ää வந்திருக்கிறது முழுக்க என் நண்பர்கள்.  உமக்கென்ன நட்டம். முரளிக்கு நான் அழைப்பு கொடுக்கவே இல்லை.   மல்லிகா அக்கா காட் கொடுத்து  அவன் வந்து உங்க பலகார சட்டிக்கு முன்னால காவல் இருக்கிறானாமே. எனக்கொண்டும் விளங்கேல்ல ... . தாலி கட்டும் மட்டும் சமாளியும் எவ்வளவு பிரச்னையை கடந்து  இந்த நிலைக்கு  வந்திருக்கிறம்  எண்டு கொஞ்சம் யோசியும். "
இது சீலனின் தகவல் .  சற்று காரமாகவே கேட்டு விட்டான். கோவம் வராதா பின்ன.
„பேசவே முடியாம இருக்கிறவளை பிடிச்சு ரைப் பண்ண சொல்லுறீர்.... வருத்தம் எண்டு ஆரும் ஆசைப்பட்டு வேணுமெண்டு சொல்லுதுகளே.....அதுவும் இந்த நேரத்தில் சொல்லுவினமோ....“
„நடக்கிறதுதான் நடக்கும்.  தாலி கட்டி மனைவியாக முன்னமே  இப்படி உறுக்கிறீர். எங்கிட சொந்தக்காரன் எண்டு முரளி ஒரே ஒரு ஆள் கலியாணத்திற்கு வந்ததே உமக்கு பொறுக்கவில்லை . நான் உம்மை பற்றி பெருசா நினைச்சேன் . இவ்வளவு தானா நீர். ஏன் கதைக்க மாட்டீர்“. „உமக்குதான் குமுதா......ää சாம்பவி.....  பானு இன்னும் ஆர் ஆரோ.... வருசையில் இருக்கிகேக்க கதைப்பீர் தானே.....“
இது கலாவின் தகவல் அல்ல அவளுக்கு தெரியாமல் அக்கா மல்லிகா அனுப்பிய செய்தி.
சீலனுக்கு வாசிக்க வாசிக்க கைநடுங்கியது . வாக்கியங்கள் எண்ணைச் சட்டியில் பிளிந்த  முறுக்கு போல பொரிந்து கொண்டிருந்தது. செஞ்சு உலங்குவானவூர்தி காத்தாடி சத்தம் போல படபடத்தது.  என்னாச்சு கலாவுக்கு.  இப்படி வேண்டா வெறுப்பாக எழுதியிருக்கிறாள். போனில் காதலொழுக பேசினாளே...
முடிவெடுத்தான் .  " இண்டைக்கு தாலி கட்டுறது கட்டுறதுதான்“ää  யாருக்கு  என்பதே கேள்வி  . ஆனால்  அதற்கு முன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்கு யார்  காரணம் என கண்டு பிடிக்க வேண்டும் .
இந்த கதை மெல்ல சத்தியநாதன் அண்ணனுக்கு எட்டவே மகள் குமுதாவை கூப்பிட்டு  சாறியை மாத்தி பட்டு சேலை கட்டிக்கொண்டு வா என அனுப்பினார். அவள் அப்பாக்கு மூளைகழண்டுட்டுதா.... என மனதில் கறுவிக்கொண்டு ஏன் என்று புரியாமலே சாறி மாற்றச்  சென்றாள்.
மனம் கேட்கவில்லை வவா அக்காவை அனுப்பி கலாவிடம் பேசினான். ' என்னண்டு தெரியேல்ல சாபிட்டது உடனயே சத்தி வருகுது . வயிற்றை உளைஞ்சுகொண்டு வயிற்றாலை  போகுது ரண்டு நாள் ஆகுது சாபிட்டு . கடைசியா கனடாவில் கொஞ்சம் புட்டு சாப்பிட்டது  - எண்டு சொல்லுறாள் அவளால  போன்  கதைக்கவும் பலம் இல்லை.“ என்றார் வவா அக்கா.
மணவறையில் இருந்த சீலனின் மனம்.  தோற்றுவிட கூடாது என போராடியது. இது அவனுக்கு இயற்கை கொடுத்த வரம்.  சிவம் பணத்தை சூறையாடியபின்னும்ää குத்துவேண்டியவரை காப்பாற்ற முயன்று கொலைப்பழி விழுந்தபோதும் ää பெயரை மாற்றி மாரிமுத்து என ஆனபோது இருந்த உறுதி இப்போதும் கை கொடுத்தது.
கொழும்பு பத்மநாதன் மாமாவின் மகள் சாம்பவியை கட்டவேண்டும் என ஒரு மனம் சொன்னது. அம்மாவின் விருப்பமும் அதுவே. இரண்டாவது முறையாவது அம்மா வெற்றி அடையட்டும்  என எண்ண முற்பட்டான். மொத்தத்தில் அவன் குழம்பி இருந்தான்.
வந்தவர்களுக்கு என்ன பதில் சொல்லி அனுப்புவது. இந்த வாழ்வை சமைத்து தந்த நல்லுங்களை ஏமாற்றுவதா..?. குமுதாவைவே கட்டிவிடலாமா.... ? தெரியாமலே தயாராக வந்திருக்ருக்கிறாள் . கலாவை ஏமாற்றிவிட்டோமா...?. இல்லை கலா என்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறாளா....?. என் முன்னாலே நாடகமாடி நம்ப வைக்கிறாளா...?. இனியும் இந்த வருத்தம் வருமா...? இருக்கக்கூட முடியாத பொண்ணுக்கு தாலி கட்ட அம்மா இங்கிருந்தால் சம்மதிப்பாரா...?  கட்டிய பின் வருத்தம் வந்தால் பார்ப்பதில்லையா....?  யாருக்கு இந்த கேள்விகளுக்கு பதில் தெரியும். பதில் கேட்டு முன்னால் இருக்கும் சபை ஆரவாரிக்க முன் . அவன் பதில் தேட வேண்டும்'
ஒருவேளை உண்மையிலேயே அவளுக்கு என்னை பிடிக்காமலிருக்கலாம் ää முன்னர் கல்லூரி இளைஞன் ää இன்றோ கடின உழைப்பாளிää அவளின் கண்ணுக்கு உடல் கறுத்து மெலிந்து  இருப்பதாக தெரியலாம் . உள்ளதை உள்ளவாறு ஏற்க ஏன் மறுக்கிறாய் மனமே...
இதற்காக உயிரை விட்டுவதா... இல்லை பித்து பிடித்து வீதியில் திரியப்போகிறாயா...? இவ்வளவு தேசம் தாண்டி வந்தது இதற்காகவா....?.  கிட்டாதாயின் வெட்டென மற...
தாலி கட்டியபிறகும்  ஆபிரிக்க காரனோட ஓடி போனாளே நிரோஜா  அதை விட மோசமான ஒன்றையா நான் செய்ய போகிறேன். திருமணத்தை தானே நிறுத்தப்போகிறேன்.  எதையும் தாங்கும் சக்தி கொள் மனமே.  உன்னை விரும்பியவள்  இப்போது உன்னை காதலிக்க வில்லை . விரும்பாவிடில் மறந்து விடு மனமே....
மற்றவரை  கொண்டு வாருங்கள் அவளும் பின்னின்றால் விரும்பி முன் வரும் யாரையாவது மனைவியாக்கி வாழ்ந்து காட்டுகிறேன்.
எனக்கு என் நண்பர்கள் இன்று என் திருணமத்தை கண்டு போக வேண்டும் அவ்வளவுதான்.   எந்த பெண்ணுடனும் நான் வாழத் தயார். என்னோடு யார் வாழத் தயார்.....?
எல்லா பெண்ணும் நல்ல பெண்தான் . சில கல்லுமன ஆண்களால் கறுப்புää வெள்ளை ääஉயரம் ääகட்டை ääமெல்லிசு குண்டு என வெளிப்பார்வையை கொண்டு தவிர்கப்பட்ட பெண்களே நல்ல கணவனை அடைந்து நிறைவாக வாழ்பவர்கள்.  எல்லாவற்றுக்கும்  மனமே காரணம்.   முடிவெடுக்க தயாரானான் சீலன். எவ்வளவு காசை செலவழித்து இந்த திருமண ஏற்பாடு செய்திருக்கிறோம் வெறுமானே கனடாவில் இருந்து முதல் நாள் வந்த அவையளுக்கு என்ன தெரியப்போகிறது.
மணவறையில் மயங்கி விழுந்தான் மணமகன். முறை மச்சானுக்கு மலை சூடினாள் மணப்பெண். குடியில் மணவறைக்கு வந்தவனை முடிக்க மறுத்த பெண்ணால் நின்றுபோனது திருமணம் . கேள்விப்பட்டதில்லையா அவற்றுள் இதுவும் ஒன்று என எண்ணினான்.

தான் ஒருத்தி கழுத்தில் தாலி கட்ட முன் முரளி கலா திருமணத்தை தானே இதே மேடையிலேயே  நடாத்தி வைக்க தயாரானான். அதுவே கலாவின் விருப்பம் என்றால் ää இதுவே மல்லிகாவுக்கு மன மகிழ்ச்சியை தரும் என்றால் ää காதலை முறித்து கலாவை அடைவதே முரளிக்கு  இன்பம் தரும் என்றால்ää இங்கேயே இப்போதே கலாவின் கழுத்தில் முரளி எனது தாலியையே கட்ட நான் பூத்தூவி வாழ்த்திவிடத் தயார்.
ஒன்றல்ல இரண்டு திருமணங்களை கண்டு போகட்டும் என் சபையோர். திடம் பூண்டான். விழுதல் எல்லாம் எழுவதற்கே ää எழுவது உறுதியானால் விழுவதெல்லாம் தற்காலிகமானதே... ".
நேரம் ஆக ஆக  நிலைமை மோசமானது. எவ்வாறு சிந்தித்த போதிலும் பந்தலுக்கு முரளி வந்த போது சீலனுக்கு அவன் மேல் இருந்த சந்தேகமும் கோவமும் வலுக்கவே செய்தது. முரளி தான் ரீயில் எதையோ நேற்று கலந்திருக்கிறான். இது தெரியாத மல்லிகா உண்மையான உடல் வருத்தம் என நம்பிக்கொண்டிருக்கிறார்.
ஆனாலும் இதை வைத்து திருமணம் குழம்பினால் தன் விருப்பம்போல் முரளிக்கே கலாவை கட்டி வைக்கலாம் என நினைக்கிறார் . இதை கலாவுக்கு சொன்னால் அவள் நம்ப மாட்டாள் அக்கா பாசம் ää முரளிமேல் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் என சிந்தித்த போது டேவிட் அங்கிள் வந்தார்.
இந்த ஐரோப்பிய வாழ்வின் கடவுள் போன்ற மனிதன் அவர். உறுதியோடு  அருகில் வந்து .
" சீலன்  இது நான் அவசரத்தில எடுத்த முடிவில்லை . நான் ää என் மனைவி ää மகள் சாலினி மூவரும் பேசி எடுத்த முடிவு . கலாவின் அக்கா ஏதோ மனதில் வைத்துக்கொண்டு பிடிபடாம பேசுறா.... கலாவுக்கு அது தெரியேல்ல. கலாவை மறக்கிறதுதான் உனக்கு நல்லது. நான் சொல்லுறதை வடிவா கேட்டு யோசித்து பதில் சொல்லு சீலன். தாலி கட்டும் நேரத்திற்கு இன்னும் ஒரு மணித்தியாலம் தான் இருக்கு“.
„நானும் மெற்றில்டாவும் முறைப்படி உன்னை எங்கள் மகள் சாலினிக்கு யாழ்ப்பாணத்திற்கு போன் பண்ணி  உன் அம்மாவிடமே கட்டி தர விருப்பமா எண்டு கேட்டு அம்மாவும் ஓம் எண்டு சொல்லி விட்டார். இப்பதான் பேசினனாங்கள்.  இனி உன் விருப்பம். யோசித்து முடிவு சொல்லு ' என கேட்டு விட்டு யாரையோ வரவேற்று பன்னீர் தெளிக்க போய்விட்டார். அவர் செய்த உதவியை மறக்க முடியாது.  மகள் சாலினி அருமையான பிள்ளை அம்மாவை வேறு கேட்டுவிட்டார்கள்“ என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது தான் அந்த செய்தி வந்தது .
கலா மயங்கிவிட்டாள் அம்புலன்சுக்கு அடித்து  கொண்டுபோய் வாட்டில் மறித்து விடார்கள். மயக்கம் தெளிந்தால் தான் முடிவு தெரியும்  என்றார் விவேக் அண்ணன். சீலனால் அந்த செய்தியை கேட்டபின்னும் மணவறையில் இருக்க முடியவில்லை.
 "கலா ..... ää கலா ..... " என்று கத்தி விழித்து விட்டான் . என்ன ஆச்சரியம் கலாவின் மடியில் அவன் படுத்திருந்தான். அவன் கட்டிய தாலி அவள் மார்பில் ஆடியது. எல்லாம் கனவு.....ää கண்ட கனவை ஒன்று விடாமல் கலாவுக்கு சொன்னான்
" ஆனாலும் உன் கனவு ரொம்ப மோசம் ää அலுப்பாய் இருக்கிறாய் என கொஞ்சம் தூங்க விட்டால் இப்படியா கனவு காண்பாய். சீரோடு சிறப்பாக நடந்த திருமணத்தை இப்படி நாதாரித்தனமா அல்லவா கண்டிருக்கிறாய் ."  என்றாள் தன் தலை சோடனையை கழற்றியபடி பத்மகலா.
" சக்கரைப்புக்கையில் புதைத்து வைத்த வாழைப்பழம்போல் நல்ல இனிப்பான கதகதப்பாய் மடி இருந்தால் நித்திரை வராதா என்ன " என்றான் சீலன் அவளை அண்ணாந்து பார்த்து .
"முதலிரவை கனவு காண்பவர்கள் மத்தியில் முதலிரவில் கனவுகண்ட ஒரே ஆள் நீதானடா....சீலா.... கனவில் கடைசியில யாருக்குத்தான் தாலி கட்டினாய் " என்றாள்  கலையாத கூறைபட்டின் கரையை பார்த்தபடி.
"  அதுதான் இடையில் முழிச்சிட்டனே மீதியையும் காண இன்னொருக்கா தூங்கவா...?" . என்றான் அவள் பின்னலில் இருந்த குஞ்சத்தை அவிட்டபடி . அவள் அவனின் காதை ஊண்டி திருகினாள். அவளிள் கன்னத்தில் பட்டு தெறித்த மின் விளக்கு ஒளியில் வெட்கமும் கலந்திருந்தது.
சுபம்

No comments: