நம்மிடமிருந்து விடைபெற்ற 'வானொலிக் கலைஞன்' ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

.
இலங்கை வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர்களில் ஒருவராகிய திரு.ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் இன்று காலை(29.07.2014) இலங்கை  சிலாபம் அரச மருத்துவ மனையில் காலமானார். அன்னாருக்கு வயது 74 ஆகும்.
220px-Rajaguru.jpg இளமைக் காலத்தில்
திரு.இரா.சே.கனகரத்தினம் திரு.கனகரத்தினம் அவர்கள் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான அறிவிப்பாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டுவரை சுமார் முப்பது ஆண்டுகள் பிரபல அறிவிப்பாளராகப்  பவனி வந்தார். இலங்கை வானொலியின் புகழ் பூத்த அறிவிப்பாளர்களாகிய கே.எஸ்.ராஜா, பி.எச். அப்துல் ஹமீத், மயில்வாகனம் சர்வானந்தா, வி.என்.மதியழகன், ஜோக்கிம் பெர்னாண்டோ, நடராஜா சிவம், ஜெயகிருஷ்ணா, ஜி.போல் ஆன்டனி, ராஜேஸ்வரி சண்முகம், சற்சொரூபவதி ஆகிய அத்தனை அறிவிப்பாளர்களுடனும் பணி புரிந்தவர் என்ற பெருமை மட்டுமல்லாது, இவர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடியும் ஆவார்.



இலங்கையின் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவதுதமிழ் வானொலி அறிவிப்பாளர் ஆவார்.திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.
200px-RSKanagaratnam1.jpg வயது முதிர்ச்சியின்போது திரு.கனகரத்தினம் அவர்கள் பிறந்தது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள சிலாபம் அருகே உள்ள 'மருதங்குளம்' என்னும் கிராமம் ஆகும். இவரது பெற்றோர் முத்தையா, பொன்னம்மாள் ஆவர். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை கனகரத்தினம். தந்தை முத்தையா தமிழ்நாடுஅரசவம்சத்தை சேர்ந்தவர்.கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் இவரது வீட்டில் இருந்தது. 'ராஜகுரு சேனாதிபதி' என்பது இவர்களின் குடும்பத்தின் பரம்பரைப்  பெயர்.மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சென் மேரீஸ் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். இவர் திருமணம் ஆகாதவர்.
 அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு அவர்கள், இதன் காரணமாக 
kanaga_rathinam001.jpg இசைஞானி இளையராஜா மற்றும்,
பி.எச்.அப்துல் ஹமீத் இவர்களுடன்
இரா.சே.கனகரத்தினம் அவர்கள்.
 இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். 'பொதிகைத் தென்றல்', 'காலைக்கதிர்', 'பாட்டொன்று கேட்போம்', இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார்.பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது 'ராஜகுரு சேனதிபதி' என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள். கடந்த 1988 ஆம் ஆண்டில் 'மனம் போன போக்கில்' என்னும் பெயரில் ஒரு சிந்தனை நூலையும்
f-8-4.jpg (இ-வ) பின்வரிசையில் - பெனடிக், ஜோசப் ராஜேந்திரன், மயில்வாகனம், மஹதி ஹசன், ஜோக்கிம் பெர்னாண்டோ, சந்திரமோகன், சண்முகம் அமர்ந்திருப்போர் - விசாலாட்சி ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், பி. பி. தியாகராஜா, கனகரட்ணம் அப்துல் ஹமீத்.
வெளியிட்டிருந்தார்.இலங்கை வானொலி என்னும் மனம் மயக்கும் மந்திர ஊடகத்தில் இணைந்து மூன்று தசாப்தங்களாக எம்மையெல்லாம் மனம் மகிழச் செய்த அந்த வானொலிக் கலைஞனின் மறைவிற்கு அந்திமாலை ஆசிரிய பீடம் தனது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் இழப்பால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. 





அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக!!

4 comments:

Unknown said...

பின் வரிசையில் மொத்தம் 8 பேர் நிற்கின்றனர். 7 பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. பின் வரிசையில் இடமிருந்து வலமாக முன் நிற்பவர் யார்? பெயர் குறிப்பிடவில்லையே அவர் யார்? தெரியாமல் விடப்பட்ட தவறா அல்லது தெரிந்தே புறக்கணிக்கப்பட்டதா

அண்ணன் கனகரத்னம் அவர்களின் ஆத்மா சாந்திக்கு பின் வரிசையில் முன் நிற்ப்பவனின் பிராத்தனைகள்

anthimaalai@gmail.com said...

அன்பார்ந்த நண்பர் பாலசிங்கம் பிரபாகரன் அவர்கட்கு,
தங்கள் பெயர் மேற்படி புகைப்படத்திற்குக் கீழே குறிப்பிடப் படாமல் விடப்பட்டமைக்கு வருந்துகிறோம். மேற்படி செய்தியைப் பிரசுரித்த வேளையில் சம்பந்தப்பட்ட புகைப்படத்தை இலங்கையிலிருந்து வெளியாகும் 'தினகரன்' பத்திரிகையின் 03.10.2010 தேதியிட்ட இணையப் பதிப்பில் இருந்து எடுத்துப் பிரசுரித்தோம். மேற்படி இணையத்தில் எழுதப் பட்டிருந்த பெயர்களை அப்படியே எழுதிப் பிரசுரித்திருந்தோம். ஆகவே தவறு எங்கள் மீது அல்ல என்பதையும் தினகரன் பத்திரிகையின் வார இதழில் இணையப் பதிப்பில் பணியாற்றும் ஊழியர்களுடைய தவறு என்பதையும் புரிந்து கொள்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம். தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"

அன்புடன்
இ.சொ,லிங்கதாசன்
ஆசிரியர்
அந்திமாலை இணையம்
டென்மார்க்
www.anthimaalai.dk

Kanags said...

லிங்கதாசன், தகவல்களையும் படங்களையும் எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதைக் கட்டுரையிலேயே தெரிவித்திருந்தீர்கள் என்றால் இக்குழப்பம் நேர்ந்திராது. அதுவே முறையானதாக இருந்திருக்கும்.

Lingathasan said...

திரு.Kanags அவர்களின் கருத்துக்கு நன்றிகள். எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம்.
அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்