இலங்கைச் செய்திகள்


ஹிக்கடுவை பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்துக்குள் பெளத்த தேரர்கள் அத்துமீறல்

தேவாலயங்கள் மீதான தாக்குதல் : பிக்குமார் உட்பட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை விரைவில் ஆரம்பம்

 மன்னார் மனித புதை குழி நாளையும் தோண்டுதவதற்கு தீர்மானம்

கண்டியில் தைப்பொங்கல் நிகழ்வு

=========================================================================

ஹிக்கடுவை பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்துக்குள் பெளத்த தேரர்கள் அத்துமீறல்

13/01/2014       ஹிக்­க­டுவை, தலாகஸ் சந்­தியை அண்­மித்த பத்­தே­கம வீதியில் அமைந்­துள்ள கிறிஸ்­தவ பிரார்த்­தனைக் கூடம் ஒன்றின் பின்­பக்க வாயிலை உடைத்­துக்­கொண்டு பெளத்த தேரர்கள் உள்­ளிட்ட குழு­வினர் பலாத்­கா­ர­மாக உள் நுழைந்­துள்­ள­துடன் பிர­தே­சத்தில் உள்ள அவ்­வா­றான இரு பிரார்த்­தனைக் கூடங்­களை உடன் அகற்­று­மாறு ஆர்ப்­பாட்­ட­தி­னையும் மேற்­கொண்­டனர்.
ஹெல பொது பௌர' எனும் பெளத்த அமைப்­பினால் நேற்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த இந்த ஆர்ப்­பாட்டம் கார­ண­மாக முற்­பகல் வேளையில் கொழும்பு - காலி பிர­தான வீதியில் ஹிக்­க­டுவை பிர­தே­சத்தில் பரிய வாகன நெரிசல் ஏற்­பட்­டி­ருந்­த­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
பிர­தான வீதியை மறித்து ஆரப்­பாட்டக் காரர்கள் தமது எதிர்ப்­பினை வெளி­யிட்­டதால் இந்த நிலைமை ஏற்­பட்­டது. ஹிக்­க­டுவை, தலாகஸ் சந்­தியில் உள்ள ரயில் நிலை­யத்­துக்கு பின்­பு­ற­மாக உள்ள இரண்டு கிறிஸ்­தவ பிரார்த்­தனைக் கூடங்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆர்ப்­பாட்­டத்தின் போது அந்த கூடங்­களை உடன் அகற்று­மாறு தேரர்கள் கோஷ­மெ­ழுப்­பினர். இதனை அடுத்து பிர­தே­சத்தில் பதற்ற நிலை ஒன்று காணப்­பட்­டது.


எவ்­வா­றா­யினும் குறித்த பிரார்த்­தனை கூடம் அமைந்­துள்ள பிர­தே­சத்­துக்கு காலி மாவட்­டத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் வழி­காட்­டலின் பேரில் விஷேட பொலிஸ் குழு அனுப்­ப­ப்பட்டு அசம்­பா­வி­தங்கள் ஏற்­படா வன்னம் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.
இதன் போது சில பிக்­குகள் குறித்த பிரார்த்­தனைக் கூடத்­தினுள் அத்து மீறி நுழைந்­துள்­ளனர். இதன் போது நேற்று ஞாயிறு தினம் என்­பதால் அந்த பிரார்த்­தனை கூடத்தில் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் பிரார்த்­தனை நடவ்­டிக்­கையில் ஈடு­பட்ட வண்னம் இருந்­துள்­ளனர். இவர்­களில் அதி­க­மா­ன­வர்கள் பெண்கள் என அங்­கி­ருந்து கிடைத்த தக­வல்கள் குறிப்­பிட்­டன.
எவ்­வா­றா­யினும் இதன் போது விரைந்து செயற்­பட்டுள்ள் பொலிஸார் தேரர்­களை உட­ன­டி­யாக அந்த பிரார்த்­தனை கூட வளா­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்றி பாது­காப்பை உறுதி செய்­தனர்.
இதனை அடுத்து கொழும்பு காலி பிர­தான வீதியை மறித்து சுமார் 45 நிமி­டங்கள் வரை பெளத்த தேரர்கள் ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­டனர். இதனால் பிர­தே­சத்தின் போக்கு வரத்து வெகு­வாக பாதிக்­கப்­பட்­டது.
சுமார் 16 வரு­டங்­க­ளாக நடத்­தப்­பட்­டு­வரும் கிறிஸ்­தவ பிரார்த்­தனை கூடம் ஒன்­றுக்கு எதி­ரா­கவே இந்த ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த பிரார்த்­தனை கூடத்­துக்கு மேல­தி­க­மாக மேலு­மொரு பிரார்த்­தனை கூடத்­தையும் அங்­கி­ருந்து உடன் அகற்­று­மா­றே­ஆ­ர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கோரினர்.குறித்த பிரார்த்­தனைக் கூடம் சட்­ட­வி­ரோ­த­மாக செயற்­ப­டு­வ­தா­கவும் பல­வந்­த­மாக மத­மாற்று செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தா­கவும் பெளத்த தேரர்­களால் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.
எனினும் இந்த குற்­றச்­சாட்­டுக்­களை குறித்த கிறிஸ்­தவ பிரார்த்­தனை கூடத்தை நடத்திச் சென்ற பாஸ்டர் ஜீ.எல்.டப்­ளியூ.சிந்­த­க பிர­சன்ன முற்­றாக மறுத்­துள்ளார். அத்­துடன் இலங்கை அர­சியல் யாப்பில் உறுதி செய்­யப்­பட்­டுள்ள மத சுதந்­தி­ரத்­துக்கு அமை­வா­கவே தாம் குறித்த பிராத்­தனைக் கூடத்தை நடத்திச் செல்­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
இதனை அடுத்து சம்­பவ இடத்­துக்கு சென்­றி­ருந்த காலி மாவட்­ட­துக்கு பொறுப்ப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்ட ஆர்ப்­பாட்­ட­க்கா­ரர்­க­ளு­டனும் பிரார்த்­தனை கூட பிரதி நிதி­க­ளு­ட­னும்­க­லந்­து­ரை­யா­டினார்.
இதனை அடுத்து குறித்த பிராத்­தனை கூடங்கள் தொடர்பில் விசா­ரணை செய்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பொலிஸார் உறு­தி­ய­ளித்­தனர்.
இதனை அடுத்து விசா­ர­ணை­க­ளுக்கு ஏது­வாக அந்த பிரார்த்தனைக் கூடங்கள் இரு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன. இந்த இரு வாரங்களில் விசாரணை செய்து உரிய தீர்வு எட்டப்படும் வரையிலேயே இந்த இவ்விரு பிரார்த்தனைக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனை அடுத்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கலைந்து சென்றதுடன் காலி வீதியின் போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியது.    நன்றி வீரகேசரி








 தேவாலயங்கள் மீதான தாக்குதல் : பிக்குமார் உட்பட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

13/01/2014                ஹிக்கடுவையிலுள்ள தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 8 பிக்குகள் உள்ளிட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
 
ஹிக்கடுவைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் மீது 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது பிக்குகளும் உடனிருந்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று காலி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், அடையாளம் காணப்பட்டுள்ள எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த அவர், நீதிமன்றின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி









கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை விரைவில் ஆரம்பம்

 
14/01/2014      தலைமன்னார் பியர் மடு வீதி ரயில் போக்குவரத்துக்கான கட்டுமான வேலைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற் கிணங்க எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இவ் வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
முப்பது வருடங்களுக்கு முன் கொழும்பிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ரயில் சேவை வன்செயல் காரணமாக 1984 ம் ஆண்டிலிருந்து இச் சேவை மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் இடை நிறுத்தப்பட்டது.
அத்துடன் வன்செயல் காரணமாக இப்பகுதியிலுள்ள தண்டவாளங்கள், புகையிரத நிலையங்கள் என்பன சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இர்க்கோ கம்பனி மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் தண்டவாளங்களை, புகையிரத நிலையம் மற்றும் அதன் பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணியை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கிணங்க மடுறோட் தலைமன்னார் பியர் வரைக்கான தண்டவாளங்கள் புகையிரத நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் வேலைகள் தற்பொழுது துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
மேலும் மடுறோட் தலைமன்னார் தண்டவாளத்தில் அமைந்திருக்கும் 68 சிறிய பாலங்களின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. கட்டையடம்பன் மற்றும் மன்னார் கடலேரியில் உள்ள முக்கிய மூன்று பெரிய பாலங்கள் இன்னும் பூர்த்தி அடையாத நிலையில் தற்பொழுது வேலைகள் நடைபெற்று வருகின்றன.
முருங்கன் மாதோட்டம் திருகேதீஸ்வரம், மன்னார் தோட்டவெளி, பேசாலை, தலைமன்னார் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய இடங்களில் புகையிரத நிலையங்களும், புகையிரத மேடைகளும் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதாவது மடுறோட்டிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்குமுள்ள 63 கிலோ மீற்றர் தூர புகையிரத கட்டுமானப் பணிகள் ஏப்பிரல் மாதத்துக்குள் முடிய கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் விரைவில் கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி







 மன்னார் மனித புதை குழி நாளையும் தோண்டுதவதற்கு தீர்மானம் 

15/01/2014     மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இதுவரை 32   மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் நாளை வியாழக்கிழமை  காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்படவுள்ளது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர்    முன்னிலையில்   6 ஆவது தடவையாக  கடந்த 7 ஆம் திகதி காலை 8 மணிமுதல் மாலை 2.30 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள்; மீட்கப்பட்டன.
இதன்போது  மீட்கப்பட்டிருந்த 6 மனித எழும்புக்கூடுகளில் ஒரு எழும்புக்கூட்டில் உள்ள கைப்பகுதியில் 'தாயத்து' ஒன்று கட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை மீட்கப்பட்டுள்ள 32 மனித எழும்புக்கூடுகள்; முழுமையாகவும்,சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் உள்ளன.
அப்பகுதியில் மேலும் மனித எழும்புக்கூடுகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் அருகில் உள்ள காட்டு மரங்களும் தற்போது வெட்டப்பட்டு வருகின்றன. மீண்டும் நாளை மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதை குழி தோண்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி








கண்டியில் தைப்பொங்கல் நிகழ்வு

கண்டி போகம்பர  விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஜனாதிபதி உட்பட பல முக்கிய அதிதிகள் கலந்து கொண்டனர். அத்தோடு கண்டி வயலத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இத் தை பொங்கல் நிகழ்வில் பொங்கல் விசேட பூஜை வழிபாடும் ஜனாதிபதியின் விசேட உரையும்  மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.





நன்றி வீரகேசரி




No comments: