சொந்த சகோதரர் சொத்தினைத் தின்றிடும்,
பந்து மித்திரர் பணப் பசி கொண்டிடும்,
வந்த புத்திரர் வரவினை கணக்கிடும்,
இந்த உலகிலும் ………………………
உரிமைக்காக ஊண் , உயிர் ஈந்த
இதோ ஒர் இரங்கற் பா!
ஒன்பது என்பது பெருக்கின் வர்க்கம்
பதினெட்டாம் ஆண்டு பதினெட்டாம் தேதி
ஆடியில் பிறந்த பெருக்கு - உம்மிடம்
இல்லை - தான் எனும் செருக்கு
இன வெறி ஆதிக்கம் வைத்தது
இருபத்து ஏழு ஆண்டு சிறை.
ஆனாலும் உலகு உம்மிடம்
கண்டதில்லை ஒரு கறை
ஆயுள் தண்டனை மீண்ட போது
உடல் எங்கும் கொண்டது சுருக்கம்
ஆனாலும் நின் மனஉறுதி கண்டதோ
உருக்கின் இறுக்கம்.