.
பாட்டற்றவர்கள் இருளைத் தேடியலைந்தபோது
வழி தவறி நான் இருந்த கடலோரம் வந்த மூன்று நூறு
குழந்தைகளின் உலர்ந்த கண்ணீரில் தாயைத் தேடிக்
களைத்த சுமைதாங்கிப் பாரம் முடிவிலியாய் தொடருமென
எல்லோர்க்கும் தெரிந்தாலும் ஒருவருமே இதனை எதிர்
பார்க்கவில்லை என்ற போலி அறிக்கைகளின் காயாத மையையும்
கயமையின் நிழலையும் நீங்கள் அறியாவிட்டாலும்
கவிஞன் அறிவான் கதை.
நந்திக்கடல்
எல்லாத் திசைகளிலும்
காலாட்படை முன்னேறுகிறபோது
அங்குலம் அங்குலமாக
நிலம் மறைந்தது
நிலக்காட்சி கருகியது
மௌனத் திரைப்படத்தில் ஓலம் எழுப்புகிறது
மக்கள் பெருந்திரள்
செல்லும் இடம் எங்கே?
கடல்மடியும் கடற்கரையும்
துணை நிற்கும் எனச் சென்றோரின்
கண்முன்னே
குறுகித் தெறித்து மறைந்தது