தமிழ் பொறியியலாளர் சங்கத்தினரின் பொங்கல்



3 comments:

யசோதா.பத்மநாதன் said...

அவுஸ்திரேலியத் தமிழ் பொறியியலாளர் ஸ்தாபகத்தின் சேவைக்கு தமிழ் சமூக உறுப்பினர் என்ற வகையிலும் சமூக ஆர்வலர் என்ற வகையிலும் இச் சேவைக்கு என் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயல்”

தேவையறிந்து, காலம் கருதி, பொருந்த செய்த ஒரு சேவை.இவைதான் இன்றய தேவை!

நன்றியும் பாராட்டுக்களும்!!!

Ramesh said...

.
"தேவையறிந்துஇ காலம் கருதி பொருந்த செய்த ஒரு சேவை.இவைதான் இன்றய தேவை!"

நன்றாக சொன்னீங்கள்
மணிமேகலா. இப்ப பெரிய குசினி வந்தபிறகு கோயில்ல அன்னதானத்த காணக்கிடைக்கயில்ல. வருசப்பிறப்பிக்கு போனன் கோயில்ல அன்னதானம் சாப்பிடலாமேண்டு பிறகு காசகுடுத்து தோச வாங்கி சாப்பிட்டுப்போட்டு வந்தனான்.
கிச்சின் பெரிதாக அன்னதானத்துக்கு அரோகரா

யசோதா.பத்மநாதன் said...

இங்கிருப்பவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட அன்னதானத்தைப் பற்றி நான் குறிப்பிடவில்லை திரு ரமேஷ். சரியாக நான் அதனைச் சுட்டிக் காட்டவில்லை என்று நினைக்கிறேன்.

புதிதாக இங்கு வந்திருக்கின்ற தமிழர்களுக்கு தமிழர் திருநாளில் கோயிலில் இவ் நிறுவகத்தினர் உணவளித்து, வரவேற்புக் கூறி, இங்கு நீண்ட நாட்கள் வசிக்கும் மக்களோடு இணையச் செய்த அவ் எண்ணத்தையும் செயலையுமே குறிப்பிட்டேன்.

பலவித இழப்புகளோடும் மனக்காயங்களோடும் புதிதாக வந்திருப்பவர்களை வரவேற்பதும் ஆதரவளிப்பதும் தேவை அறிந்து உதவுவதும் நம் ஒவ்வொருவரது கடமையும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

உண்மை எதிர்மறையாக இருக்கிறது என்பது சோகமான உண்மை. அவர்களுடய மனக்காயங்களை இந் நிகழ்வு சற்றேனும் ஆற்றி இருக்கும்.