அமரர் குமாரசாமி சோமசுந்தரம்
பிறப்பு : 30/04/1944 இறப்பு: 17/09/2012
ஈழத்தில் வேலணையை பிறப்படமாகக் கொண்டவரும், மெல்பேனில் வசித்துவந்தவருமான திரு சோமா சோமசுந்தரம் அவர்கள் 17ம் திகதி காலை மரணமானார்.
இவர் ரஞ்சினியின் அன்புக் கணவரும், லக்ஷ்மகுமார், கேதாரதேவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலம்சென்ற கலாநிதி மருதப்பு, அமெரிக்காவில் வசிக்கும் கமலாதேவி மற்றும் சிட்னியில் வசிக்கும் செல்வராணி ஆகியோரின் அருமை சகோதரரும், காயாவின் அன்பு பாட்டனாருமாவார்.
அன்னாரின் உடலம் 19ம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணியில் இருந்து 9 மணி வரை Police Road, Springvale Road சந்தியில் அமைந்துள்ள John Allison Monk House இல் பார்வைக்காக வைக்கப்படும்.
இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு Springvale மயானத்தில் உள்ள Boyd Chapel இல் நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்க 03 9090 7726 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.



புதுவை
இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று
உழைத்து திரும்பிய பின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின்
கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை
இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இதுவரையில்
இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக அல்லது பாதுபாப்பற்ற சூழல் காரணமாக
இலங்கைக்குள் இடம்பெயர்ந்த, இலங்கையைவிட்டு இடம்பெயர்ந்த அல்லது
புலம்பெயர்ந்த மக்களின் எண்னிக்கையின் புள்ளிவிபரங்கள் பற்றி எவருமே
கவலைப்படுவதில்லை. யுத்தத்தால் மரணித்தவர்கள் தொடர்பான எண்ணிக்கை பற்றி
தமிழர் தரப்பில் ஒரு புள்ளிவிபரமும் இலங்கை அரசு தரப்பில் இன்னொரு
புள்ளிவிபரமும் இருப்பதால், இதில் எந்த புள்ளிவிபரம் சரியென்பதும்
எவருக்கும் தெரியாது. புலம்பெயர்ந்த மக்களை மரணித்தவர்கள் அல்லது காணாமல்
போனவர்கள் பட்டியலில் சேர்ப்பதில் பூரிப்பவர்களும் நம்மிடையே இருப்பதால்,
இலங்கைக்கு வெளியே உயிர் வாழும் இலங்கையர்களின் எண்ணிக்கையின்
புள்ளிவிபரங்கள் ஓரளவிற்கேனும் சரியாக கணக்கெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான
கணக்கெடுப்பு, இலங்கையின் மனிதவளத்தில் எவ்வளவு வீதத்தினரை
இழந்திருக்கிறோம் என்பதை அறிவதற்கும் உதவியாக இருக்கும்.
+(2)_0001.jpg)






