மரண அறிவித்தல்









 அமரர் குமாரசாமி சோமசுந்தரம்
பிறப்பு : 30/04/1944      இறப்பு:  17/09/2012

ஈழத்தில் வேலணையை பிறப்படமாகக் கொண்டவரும், மெல்பேனில் வசித்துவந்தவருமான திரு சோமா சோமசுந்தரம் அவர்கள் 17ம் திகதி காலை மரணமானார்.
இவர் ரஞ்சினியின் அன்புக் கணவரும், லக்ஷ்மகுமார், கேதாரதேவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலம்சென்ற கலாநிதி மருதப்பு, அமெரிக்காவில் வசிக்கும் கமலாதேவி மற்றும் சிட்னியில் வசிக்கும் செல்வராணி ஆகியோரின் அருமை சகோதரரும், காயாவின் அன்பு பாட்டனாருமாவார்.
அன்னாரின் உடலம் 19ம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணியில் இருந்து 9 மணி வரை   Police Road, Springvale Road சந்தியில் அமைந்துள்ள John Allison Monk House  இல் பார்வைக்காக வைக்கப்படும்.
இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு Springvale மயானத்தில் உள்ள  Boyd Chapel இல் நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்க 03 9090 7726 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.




------------------------------------------------------------------------------------------------------------
அவுஸ்திரேலியா மெல்பேனில் “சோமா அண்ணன்” என்று எல்லோரினாலும் அழைக்கப்பட்ட ஓர் நல்ல மா மனிதனை இழந்துஅவுஸ்திரேலியா தமிழ் சமூகம் தவிக்கின்றது. இவர் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டவர். இவரின் ஆலோசனை,ஓத்துழைப்பில் தான் இங்கு பல தமிழ் சமூக அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள்,தமிழ் ஊடகங்கள், தமிழ் பாடசாலைகள் தோற்றம் பெற்றன. அதன் தொடர்ச்சியான இயக்கத்திலும் அதிக அக்கறை காட்டி, கவனம் செலுத்தி வந்தவர். அன்னாருக்கு எமது அஞ்சலிகளைச் செலுத்தி, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்ற இந்த வேளையில், திருமதி ரஞ்சி சோமா அவர்களுக்கும்,சக குடும்பத்தவர்க்கும் எமது ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அதைச் சொல்ல வார்த்தைகள் இன்றியும் தவிக்கின்றோம்.

No comments: