.
S.நாராயணசுவாமி மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்அன்று மதியம், அடர்த்தியாக படர்ந்திருந்த டென்ஷன் ஒரேயடியாக தகர்ந்து விட்டது போல் வெயில் காலத்து இடியுடன் கூடிய புயல் நகரத்தைத் தாக்கியது. வாசந்தி அதை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் பிராட்வே வழியாக நடந்து போய் கொண்டிருந்தாள்.
"உன் உத்தேசத்தில் இந்தியன் வேல்யூஸ் என்றால் என்ன நீரூ?"
நீரூ என்று அழைக்கப்படும் நீரஜா டீ பாட்லிருந்து க்ரீன் டீயை நிதானமாக தன் கோப்பையில் ஊற்றிக் கொண்டு பிறகு நிமிர்ந்து பார்த்தாள்.
சிநேகிதியைக் கூர்ந்து பார்த்தவள், "உன் போக்கைப் பார்த்தால் உன் கேள்விக்குப் பின்னால் ஏதோ பெரிய கதை இருப்பது போல் தோன்றுகிறது. முதலில் அந்தக் கதையைச் சொல்" ஆணையிட்டாள் நீரஜா.
"கதைத்தான். எங்க அம்மா அப்பா என் கல்யாணத்திற்காக செய்து கொண்டிருக்கும் ரகளைதான் உனக்குத் தெரியுமே? போன கிருஸ்துமஸ் வீடுமுறைக்கு வீட்டுக்குப் போயிருந்தேன். மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுக்கப் போவதாக சொன்னார்கள். அதற்கென்ன வந்தது என்று நினைத்து சரி என்றேன். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ...."
"வெயிட் எ மினிட். விளம்பர வரிகளை நீ எழுதினாயா? அவர்கள் எழுதினார்களா?"