தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுதல்

.





அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களின் விபரங்களை பதிவுசெய்து கொள்வதற்கான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுதல்

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன.

இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2011 ஆம் ஆண்டு மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தாயக மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகப் தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் வாழ்வும், அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களுமே, தமிழர்களின் தேசிய விடுதலைக்கான உந்துசக்தியாக என்றென்றும் நிலைத்துநிற்கும்.

தமது வாழ்வையே அர்ப்பணித்த மாவீரர்களின் தியாகமும் வரலாறும் பதிவுசெய்யப்படுவதுடன், இன்று தாயகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில், அவற்றை பேணிப்பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்து வாழும் நம்மனைவரையுமே சாரும்.

தங்களது மனவுறுதியையே கவசமாககொண்டு, அலையாக ஆர்ப்பரித்த எதிரிகளின் படைக்கலன்களை எதிர்கொண்டு, தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வுக்காக, இறுதிவரை போராடி மடிந்த வீரமறவர்களின் வரலாறுகள் சந்ததி சந்ததியாக பேணிப்பாதுகாக்கப்படவேண்டும்.

எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத, அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்பு இலக்கங்கள்:

சிட்னி - 0469 089 883 மெல்பேண் – 0469 359 778

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா

மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.

அவுஸ்திரேலியா.

No comments: