தமிழ் சினிமா

1. இரும்பிலே ஒரு இதயம் பாடலில், அவரது நடனம்… ரஜினிக்கு சிக்கு புக்கு நடிகை வாழ்த்து



2. 500 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் படம் – தகவல் வரவில்லை – கமல்ஹாசன் பதில்




1. இரும்பிலே ஒரு இதயம் பாடலில், அவரது நடனம்… ரஜினிக்கு சிக்கு புக்கு நடிகை வாழ்த்து


“ரஜினிதான் என் ஆல்டைம் பேவரிட் ஹீரோ… குழந்தையாக இருந்ததிலிருந்து இன்றுவரை நான் பார்க்கும் படங்கள் அவருடையதுதான். இந்தியில் ரஜினி ஸ்ரீதேவி நடித்த சால்பாஸ் படத்தை அறுபது தடவை பார்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவருக்கு நான் எந்த அளவு ரசிகை என்று. இப்போது எந்திரன் பார்த்து பிரமித்துப் போனேன். அதிலும்இ இரும்பிலே ஒரு இதயம் பாடலில்இ அவரது நடனம்… சான்ஸே இல்லை… என்று ப்ரீத்திகா வாழ்த்து கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் என்று சொல்வது நடிகைகளின் பேஷனாக இருந்தது. அப்படிப் பேசும் நடிகைகளுக்குத்தான் இங்குள்ள இங்குள்ள இயக்குநர்கள் சிலரும் ஆதரவை வாரி வாரி வழங்கி வந்தனர்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ்… நடிக்க வரும் முன்பே தமிழைக் கொஞ்சமாகவேனும் கற்றுக் கொண்டு வரும் அளவுக்கு நடிகைகள் மாறியிருக்கிறார்கள் (இதிலும் விதிவிலக்குகள் உண்டு!).

அந்த மாதிரி நடிகைகளில் ஒருவர் ப்ரீத்திகா. பாலிவுட் நடிகை அம்ரிதா ராவின் தங்கை. பூர்வீகம் தமிழ்நாடுதான் என்றாலும் பிறந்து வளர்ந்தது மும்பையில். ஆனால் தமிழ் அட்சர சுத்தமாகப் பேசுகிறார்.

சிக்கு புக்கு படத்தில் ஆர்யா ஜோடியாக அறிமுகமாகும் ப்ரீத்திகா படத்தில் ஒப்பந்தமான பிறகு தமிழை தெளிவாகக் கற்றுக் கொண்டுவிட்டாராம்.


பாலிவுட்டிலேயே இன்னிங்ஸை தொடங்கியிருக்கலாமே…? என்றால் ‘வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அப்போதுதான் தமிழில் சிக்குபுக்கு வாய்ப்பு வந்தது. தமிழில் அறிமுகமாவது இந்திக்கு நிகரான பெருமைதான்… என்கிறார்.

2. 500 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் படம் – தகவல் வரவில்லை – கமல்ஹாசன் பதில்


ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

ஷங்கர் தற்போது இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலையில் மும்முரமாக உள்ளார். விஜய் உள்ளிட்ட 3 பேர் நாயகன்களாக நடிக்கின்றனர்.

இந்த படம் முடிந்ததும் ரூ.500 கோடி பட்ஜெட்டில் ரஜினி, கமல் நடிக்கும் படத்தை ஷங்கர் துவங்குவார் என்றும் செய்திகள் பரவின. இது கல்கியின் பொன்னியின் செல்வனை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகவும், ரஜினி வந்தியத்தேவன் பாத்திரத்தில் நடிப்பார் என்றும் செய்தி பரவியது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த செய்தியை சன் நெட்வொர்க் பத்திரிகைகள் மற்றும் இணையதளத்திலும் வெளியிடவே, இதனை உண்மையாக இருக்கும் என்றே நம்பிவிட்டனர் பல ரசிகர்களும்.

ஆனால் சம்பந்தப்பட்ட யாரும் இது பற்றி வாயே திறக்கவில்லை.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் கமல்ஹாஸனிடம் நிருபர்கள் இது பற்றிக் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:   "ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியும், நானும் நடிக்கிறோம் என்றும், அதன் பட்ஜெட் ரூ 500 கோடி என்றும் நீங்கள் சொல்லித்தான் எனக்கும் தெரியும். அது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஷங்கரிடம் இருந்து அது போன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை.." என்றார்.




நன்றி வீரகேசரி

No comments: