மரண அறிவித்தல்     
               திருமதி திரேசம்மா துரைசிங்கம்


                                                              மறைவு 01 .10 .2010
சில்லாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மன்னார் புனித சவேரியார் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றியவரும் கிறேஸ்ரெயினில் வசித்து வந்தவருமான திருமதி திரேசம்மா துரைசிங்கம் அவர்கள் ஒக்ரோபர்
1-ந் திகதி இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற திரு சிறில் துரைசிங்கத்தின் அன்பு துணைவியும், காலம் சென்றவர்களான (சில்லாலையைச் சேர்ந்த திரு நீக்கிலாப்பிள்ளை, திருமதி அந்தோனியாப்பிள்ளை அவர்களின் அருமைப் புதல்வியும்,

அன்னம்மா, றீற்றா, லொறற்றா, காலம் சென்றவர்களான அன்ரன், செபஸ்தியன், மாகிறற், ஆகியோரின் அன்பு சகோதரியும்,

மனோறதி (Australia), அன்ரன் றாஜேந்திரா (Australia), றட்ணேந்திரா (USA), மகிழ்றதி (Australia), ரகுனேந்திரா (USA), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தமயந்தி (Australia), றீகனா (USA), மில்றோய் (Australia), மொயிறா (USA), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மார்க், யோசுவா, சுவிற்னி, மினேஷா ஆகியோரின் ஆசை பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Greystanes Our Lady Queen of Peace Roman Catholic Church-ல் ஒக்ரோபர் 7-ந் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 7:00 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு
ஒக்ரோபர் 9-ந் திகதி சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு அதே தேவாலயத்தில் திருப் பலிபூசை ஒப்புகொடுக்கப்படும்
அதைத் தொடர்ந்து Lidcombe Rookwood St John of God Catholic Section- ல் நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments: