மருத்துவம்


.

*சாப்பாட்டுக்கு முன் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்கும்


காசநோய்க்கு மருந்தாகும் தூதுவளை

தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப்பொடியாக்கிஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கலந்துதினமும் காலையில் மட்டும் குடித்து வர நாவறட்சிகபநீர்மூட்டு வலி,காசநோய் குணமாகும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோகடைந்தோஉண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும்.



தூதுவளை இலையைச் சாறு பிழிந்து அதேயளவு நெய்யில் காய்ச்சி 1தேக்கரண்டியளவு 2 வேளை குடித்து வரஎலும்புருக்கிக் காசம்மார்புச்சளி உடனே நீங்கும்.

தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக் காயவைத்து தயிர்உப்புசேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வரமனநலம் பாதிப்புஇதய பலவீனம்மலச்சிக்கல் குணமாகும்.

தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டிசிறிதுசர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வரதாது விருத்தி,உடல் பலம்முகவசீகரம் பெறலாம்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx  

சாப்பாட்டுக்கு முன் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்கும்


சாப்பாட்டுக்கு முன் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்க உதவும் என்றுஅமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு ஒன்று கூறுகின்றது.

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் - நாளுக்குமூன்று தடவையும் உணவுக்கு முன் 2 கிண்ணம் தண்ணீர் பருகினால் -சராசரியாக 5 இறாத்தல் எடை குறையலாம் என்று வேர்ஜீனியா மாநிலவிஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக – 48 வயதாளிகளை இரண்டு பிரிவாகப் பிரித்து – அவர்கள் மீது12 வார கால ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.

நிறைய நீர் பருகுவது - கலறீ மட்டத் திருப்தியை ஒருவருக்குத் தருகின்றபோதிலும்அளவுக்கு அதிகமாக நீர் பருகினால் - அதுவே பலத்தபிரச்சினையைத் தோற்றுவிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள்எச்சரிக்கிறார்கள்.

பொஸ்ரன் நகர அமெரிக்க வேதியல் தேசிய அமர்வில் தங்கள்ஆய்வறிக்கையை ஆய்வாளர்கள் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வு முயற்சியில் கலந்து கொண்ட அனைவரும் 55 இற்கும் 75வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருந்தார்கள்.

முதல் பிரிவினர் - குறைந்த பட்ச கலறி உணவு உண்ட போதிலும் உணவுக்குமுன் மேலதிக நீர் பருகவில்லை.

இரண்டாவது பிரிவினரும் குறைந்த பட்ச கலறி உணவே உண்டனர்.

ஆனால் – சாப்பிடுமுன் - 2 கிண்ணம் நீர் பருகினார்கள்.

12 வார கால ஆய்வுக் காலத்தில் - மேலதிக நீர் பருகியவர்கள்  15 புள்ளி 5இறாத்தல் எடை குறைந்திருந்தார்கள்.

மற்றவர்கள் - 11 றாத்தலே குறைந்திருந்தார்கள்.

மத்திய மற்றும் முதிய வயதினரிடையே – மூன்று வேளையும் உணவுக்குமுன் 2 கிண்ணம் நீர் பருகக் கொடுத்து –ஆய்ந்து பார்த்த போது – ஒவ்வொருஉணவிலும் 75 – 90 கலறி குறைவாக அவர்கள் உட்கொள்வது தெரிய வந்தது.

உணவில் கட்டுப்பாட்டையும் 2 கிண்ணம் நீரையும் இணைக்கும் போது – உடல்நலப் பாதிப்பில்லாத விளைவு ஏற்பட்டிருப்பதாக வேர்ஜினியா மருத்துவஆய்வு பீடப் பொறுப்பு விஞ்ஞானி பேராசிரியர் பிரெண்டா டேவி கூறுகின்றார்.

கலறி இல்லாத திரவமான நீரால் வயிற்றை நிரப்புவது இந்த விளைவுக்குக்காரணமாக இருக்கலாம் என்று அவர் கருதுகின்றார்.

தாகம் வரும்போது - கலறி அதிகமாக உள்ள இனிப்புச் சேர்க்கப்பட்டபானங்களை விட பச்சைத் தண்ணீரைப் பருகுவது நல்லது என்று அவர்விதந்துரைக்கின்றார்.

உடல் எடையைக் கட்டுப்படுத்த இது மிகவும் உகந்த வழி என்றும் அவர்கூறுகின்றார்.

No comments: