மேலும் சில பக்கங்கள்

ஆன்மிகம் குறித்த இந்த பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

.




அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

வள்ளுவப் பெருந்தகையின் இந்த குறளுக்கு ஏற்ப, நம்முடைய இந்த முதல் இணையவழி தொடர்பினை அந்த பகவானுக்கு சமர்பிப்போமாக! எந்த ஒரு நீண்ட பயணமும் நம் கால்கள் எடுத்து வைக்கும் ஒரு அடியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அது போலவே நம்முடைய ஆன்மிகம் குறித்த இந்த கருத்து பரிமாற்றமும் "பகவான்" என்ற இந்த ஒரு சொல்லைக் கொண்டு தொடரட்டும்.

இந்த காலத்தில் பகவான் என்ற சொல்லை மிகவும் தாராளமாக உபயோகிக்கின்றோம். பகவான் என்ற ஒரு சொல்லை சற்று கூர்ந்து கவனித்து ஆராய்ந்தால் அதிலிருந்து பல உன்னத உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம் . சத்தியவான் என்றால் சத்தியத்தைக் கொண்டவன் என்று பொருள். "சத்தியவான்" என்ற இந்த சொல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டது - "சத்தியம்" மற்றும் "வான்". "சத்தியம்" என்றால் உண்மை என்று பொருள். "வான்" என்றல் உருவமுள்ள ஒரு ஆள் என்று பொருள். அதைப்போலவே "தனவான்" என்றால் தனங்களைக் கொண்டவன் என்று பொருள். "வித்யவான்" என்றால் வித்யா அதாவது அறிவினைக் கொண்டவன் என்று பொருள்.

சத்தியவான், தனவான், வித்யவான் ஆக இந்த மூன்று சொற்களுமே இரண்டு வார்த்தைகளைக் கொண்டே அமைந்தது. அது போலவே பகவான் என்ற இந்த சொல்லும் இரண்டு வார்த்தைகளைக் கொண்டது. "பகம்" மற்றும் "வான்" - இதில் பகம் என்றால் செல்வங்கள் என்று பொருள். வான் என்றால் அந்த செல்வங்களைக் கொண்ட ஒரு ஆள் என்று பொருள். இதிலிருந்தே கடவுளுக்கும் உருவம் உள்ளது என்று அறியலாம். மகத்தான செல்வங்களைக் கொண்ட உருவமுடைய அந்த ஒரு ஆள் தான் "பகவான்". அந்த செல்வங்கள் எப்பேற்பட்டவை என்று பார்ப்போம்.

வேத வியாசரின் தந்தையும் மாபெரும் முனிவருமான பராசரர், "பகவான்" என்ற இந்த சொல்லிற்கு வேதங்களில் இருந்து விளக்கம் அளித்திருக்கிறார். "அழகு", "பலம்", "செல்வம்", "புகழ்", "அறிவு", "பற்றில்லாமை" ஆகிய இந்த ஆறு செல்வங்களையும் முழுமையாகவும் எண்ணிலடங்காமலும் ஒருங்கே பெற்ற அந்த ஒருவம் கொண்ட ஒரு ஆள் தான் பகவான். மனிதர்களில் சிலர் அழகுடையவராக இருக்கலாம். சிலர் பலசாலியாக இருக்கலாம். சிலர் செல்வந்தராக இருக்கலாம். சில மேதைகளும் சில பற்றில்லாதவர்களும் கூட இருக்கலாம். மேதையாக இருக்கும் ஒருவனுக்கு அழகு இருக்காது. பலம் கொண்ட ஒருவனுக்கு புகழ் இருக்காது. செல்வம் கொண்ட ஒருவனுக்கோ அறிவு இருக்காது. ஒரு வேளை இந்த ஐந்து செல்வங்களும் ஒருவனுக்கு இருப்பினும் ஆறாவது செல்வமான பற்றில்லாமை இருக்காது. ஆக இந்த ஆறு செல்வங்களும் ஒருங்கே கொண்டு நான் தான் தன்னிகரற்றவன் என்று மனிதரில் யாரும் பறை சாற்றிக்கொள்ள முடியாது. பகவான் ஒருவனுக்கே அந்த கூற்று பொருந்தும்.

இந்த காலத்தில் நான் தான் கடவுள் என்று பல முனிவர்களும், சாமிகளும் கூறிக்கொள்கின்றனர். அவர்கள் கூற்று சரியா தவறா என்று இந்த "பகவான்" என்ற ஒரு சொல்லை வைத்தே அறிந்துகொள்வோமாக!

புனித நூலான பகவத் கீதையில் இருந்து இனி வரும் ஒவ்வொரு வாரமும் ஒரு ஸ்லோகத்தை ஆராய்ந்து, நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் அதை எப்படி பின்பற்றுவது என்று புரிந்து கொள்வோம். உங்களுடைய கருத்துக்களையும் கேள்விகளையும் என்னுடையஇணைய அஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,

கனஷியாம் கோவிந்த தாஸ்

15 comments:

  1. simply superb. good luck!

    ReplyDelete
  2. Ganasyam avargalukku vazhthukkal. thangal katturai miga arumai. thodarnthu ezhuthungal.

    thangal rasigan
    Indiran

    ReplyDelete
  3. Great Start. Eagerly awaiting for the next article. Enadhu Nal valthukal.

    Regards
    Venkat VS

    ReplyDelete
  4. Ganasyam avargalukku engalin Vishnu Sakasra Nama Gudumpathin vazhthukkal. thangal paniyum paaniyum thanithuvam kondavai, miga arumai. thodarnthu ezhutha valthukirom.
    Senthil & Bhuvana (Brindvan),Ravi& Vidya, (Vaikundam). Vinodini Family (Dwaraga) and Bhaskaran family, (Madura)

    ReplyDelete
  5. Hari Bol! thanks for the enlightening words. Awaiting your next piece of wisdom.

    Ananth Subramaniam

    ReplyDelete
  6. Very good explanation of Bhagavan. Goodluck on your next article.
    Bhuavana

    ReplyDelete
  7. Hare Krishna

    Happy Tamil New Years Day

    கனஷியாம் கோவிந்த தாஸ் Prabhu,

    Nalla Thellivana vilakkam, Ungal Krishna

    Thoundu Valga, valarga

    என்றும் Ungal Lord Krishna Thoundan

    Prem [ Westmead]

    ReplyDelete
  8. Awesome, Nal Vaalthukkal.
    Vignesh family

    ReplyDelete
  9. கனஷியாம்

    Very well written and looking forward to the next edition to read yours. I am sure as you said you will give a good piece of writing each time as how we can follow what has been said in the Bhagawad Geetha.

    Malathi

    ReplyDelete
  10. Miga arumiyana thelivana Vilakam !Mikka Nandri....

    ReplyDelete
  11. ஆன்மிகம் ezhuthu thodara, valthukirom!

    ReplyDelete
  12. very good article!

    - Ramya & Venkatesh

    ReplyDelete
  13. Lovely Article. Enlightning. Thanks for sharing the love and Wisdom.

    Deepak M.

    ReplyDelete
  14. Sariyana thelivaana thodakkam... Nandri

    Sakthivel Murugan Paulraj

    ReplyDelete
  15. Well begun is half done. Keep rocking Ganesh!

    ReplyDelete