.
சிட்னி முருகன் ஆலயத்தில் தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக் கிழமை பல்லாயிரக்கணக்கான மக்கள்நிறைந்திருக்க மிக கோலாகலமாக இடம் பெற்றது.காலை 10.30 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக சிவப்பு மஞ்சள் பட்டுடுத்தி சிவப்பு வெள்ளை பட்டினால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரில் ஆரோகணித்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
சிட்னியில் மட்டுமல்லாது பிற மானிலங்களிலும் இருந்து வருகை தந்திருந்த பக்தர்கள் தேர்வடம் தொட்டிழுக்க போட்டி போட்டவண்ணம் குழுமியிருந்தார்கள். நாதஸ்வர இசை வெள்ளம் ஒருபுறமாகவும் காவடியாட்டம் ஒருபுறமாகவும், அங்கபிரதட்சை செய்பவர்கள் அடியளிப்பவர்கள் ஒருபுறமாகவும் கோவில் வீதியெங்கும் ஜன சமுத்திரமாக காணப்பட்டது.
முருகப் பெருமானின் வீதியுலாக் காட்சிகளை சிட்னியில் உள்ள வானொலிகள் தமிழ் வானொலிகள் நேரடி அஞ்சல் செய்துகொண்டிருந்ததை காணக கூடியதாக இருந்தது
அந்த கண்கொள்ளாக் காட்சிகளை நேயர்கள் கண்டுகளிக்க புகைப்படங்களாக இணைக்கின்றோம்.
பக்தர்கள் காவடி ஆடும் காட்சி
வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் தேரில் இருக்கும் காட்சி
திரண்டிருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்
திரண்டிருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்
திரண்டிருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்
வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேர் வீதி உலா வருகிறது
அங்கப் பிரதட்டை செய்யும் அடியார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Very good web
Thank you, keep up the good work
Post a Comment